Category Archives: ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு

Innum Enna Thozha Song Lyrics in Tamil

இன்னும் என்ன தோழா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பல்ராம், நரேஷ் ஐயர் & சுசித் சுரேசன்ஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Innum Enna Thozha Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா…
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே…
நம்ப முடியாதா நம்மால் முடியாதா…
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே…

ஆண் : யாரும் இல்லை தடை போட…
உன்னை மெல்ல எடை போட…
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே…

ஆண் : என்ன இல்லை உன்னோடு…
ஏக்கம் என்ன கண்ணோடு…
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே…

ஆண் : வந்தால் அலையாய் வருவோம்…
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்…
மீண்டும் மீண்டும் எழுவோம்… எழுவோம்…

ஆண் : இன்னும் இன்னும் இறுக…
உள்ளே உயிரும் உருக…
இளமை படையே வருக… எழுக…

ஆண் : இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா…
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே…
நம்ப முடியாதா நம்மால் முடியாதா…
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே…

BGM

ஆண் : மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்…
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்…
தொடு வானம் இனி தொடும் தூரம்…
பல கைகளை சேர்க்கலாம்…

ஆண் : விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்…
அதில் கள்ளி பூ முளைக்குமா…
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்…
தந்த வீரங்கள் மறக்குமா…

ஆண் : ஒரே மனம் ஒரே குணம்…
ஒரே தடம் எதிர் காலத்தில்…
அதே பலம் அதே திடம்…
அகம் புறம் நம் தேகத்தில்…

BGM

ஆண் : கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை…
தினம் களங்களில் சுமக்கிறோம்…
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை…
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்…

ஆண் : பனி மூட்டம் வந்து படிந்தென்ன…
சுடும் பகலவன் மறையுமா…
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்…
எங்கள் இரு விழி உறங்குமா…

ஆண் : இதோ இதோ இணைந்ததோ…
இனம் இனம் நம் கையோடு…
அதோ அதோ தெரிந்ததோ…
இடம் இடம் நம் கண்ணோடு…

BGM

ஆண் : யாரும் இல்லை தடை போட…
உன்னை மெல்ல எடை போட…
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே…

ஆண் : என்ன இல்லை உன்னோடு…
ஏக்கம் என்ன கண்ணோடு…
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே…

ஆண் : வந்தால் அலையாய் வருவோம்…
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்…
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்…

ஆண் : இன்னும் இன்னும் இறுக…
உள்ளே உயிரும் உருக…
இளமை படையே வருக… எழுக…


Notes : Innum Enna Thozha Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Pa. Vijay. இன்னும் என்ன தோழா பாடல் வரிகள்.


ஏலே லாமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்ருதி ஹாசன் & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Yellae Lama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…
நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…

ஆண் : என் ஜன்னல் கதவிலே…
இவள் பார்வை பட்டு தெறிக்க…
ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க…

ஆண் : ஏலே லாமா…
பெண் : ஏலே ஏலமா…
ஆண் : சொல்லாமலே…
பெண் : உள்ளம் துள்ளுமா…

ஆண் : நெஞ்சோரமா…
பெண் : நெஞ்சின் ஓரமா…
ஆண் : வந்தாலம்மா…
பெண் : வெள்ளம் அள்ளுமா…

பெண் : என் ஜன்னல் கதவிலே…
இவன் பார்வை பட்டு தெறிக்க…
ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…
என் காலும் விண்ணில் தாவி அது குதிக்க…

BGM

ஆண் : அடி நியூட்டன் ஆப்பிள் விழ…
புவி ஈர்ப்பை கண்டானடி…
இன்று நானும் உன்னில் விழ…
விழி ஈர்ப்பை கண்டேனடி…

பெண் : ஓசை கேட்காமலே…
இசை அமைத்தான் பீதோவனே…
நீ என்னை கேட்காமலே…
என்னை காதல் செய் நண்பனே…

ஆண் : உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே…
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே…
மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே…

ஆண் : ஏலே லாமா ஏலே ஏலமா…
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா…

பெண் : நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…

ஆண் : என் ஜன்னல் கதவிலே…
இவள் பார்வை பட்டு தெறிக்க…

பெண் : ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…

ஆண் : என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க…

BGM

பெண் : சிறு நேரம் இல்லாமலே…
துளி நீரும் இல்லாமலே…
இள வெயிலும் படாமலே…
பூ பூக்கும் இன்பம் தந்தாய்…

ஆண் : தோளில் விழாமலே…
கை சிறிதும் படாமலே…
உன் நிழலும் தொடாமலே…
நீ என்னை கொள்ளை இட்டாய்…

பெண் : இருவரும் மட்டும் வாழ…
பூமி ஒன்று செய்வோமா…
இரவொன்றே போதும் என்று…
பகலிடம் சொல்வோமா…

ஆண் : வேறு வேலை ஏதும் இன்றி…
காதல் செய்வோம் வா வா…

பெண் : ஏலே லாமா…
ஆண் : ஏலே ஏலமா…
பெண் : சொல்லாமலே…
ஆண் : உள்ளம் துள்ளுமா…
ஆண் : நெஞ்சோரமா நெஞ்சின் ஓரமா…
வந்தாலம்மா வெள்ளம் அள்ளுமா…

ஆண் : என் ஜன்னல் கதவிலே…
இவள் பார்வை பட்டு தெறிக்க…
ஒரு மின்னல் பொழுதிலே…
உன் காதல் என்னை இழுக்க…
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க…

BGM


Notes : Yellae Lama Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஏலே லாமா பாடல் வரிகள்.


முன் அந்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Mun Andhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM

ஆண் : ஓ… அழகே ஓ… இமை அழகே ஏ…
கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே…
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே…

ஆண் : அடி உன்னைத் தீண்டத்தானே…
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ…
வந்து உன்னைத் தொட்ட பின்னே…
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ… ஓஓ…

ஆண் : ஹேஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : ஓஹோ ஹோ… வா வா பெண்ணே பெண்ணே…
பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

BGM

ஆண் : அதிகாலை ஓஹோ…
அந்தி மாலை ம்ம்…
உன்னை தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்…
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்…

ஆண் : பெண்ணே பம்பரத்தை போலே…
என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்…
தினம் அந்தரத்தின் மேலே…
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்…

ஆண் : ஹேஹே… பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
தன்னால் உள்ளே உள்ளே…
உருகுது நெஞ்சமே…

ஆண் : வா வா வா…

ஆண் : வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே…
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே…
வந்தாய் இன்பம் சொல்ல…
வார்த்தைகள் கொஞ்சமே…

ஆண் : முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…

ஆண் : பூ பூத்த சாலை நீ…
புலராத காலை நீ…
காலை நீ…
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்…
வரும் கனவு நீ…

BGM


Notes : Mun Andhi Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Na. Muthukumar. முன் அந்தி பாடல் வரிகள்.


யம்மா யம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & ஸ்வேதா மோகன்ஹாரிஸ் ஜெயராஜ்ஏழாம் அறிவு

Yamma Yamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா…
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா…

ஆண் : அடி ஆணோட காதல் கைரேகை போல…
பெண்ணோட காதல் கைகுட்டை போல…
கனவுக்குள்ளே அவள வச்சேனே…
என் கண்ண ரெண்ட திருடி போனாளே…
புல்லாங்குழல கையில் தந்தாளே…
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே…

BGM

ஆண் : பொம்பளைய நம்பி…
கெட்டு போனவங்க ரொம்ப…
அந்த வரிசையில் நானும்…
இப்ப கடைசியில் நின்னேன்…

ஆண் : முத்தெடுக்க போனால்…
உன் மூச்சடங்கும் தன்னால்…
காதல் முத்தெடுத்த பின்னால்…
மனம் பித்தமாகும் பெண்ணால்…

ஆண் : அவ கைய விட்டுதான் போயாச்சு…
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு…
காதல் என்பது வீண் பேச்சு…
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு…

ஆண் : காதல் பாதை கல்லு முள்ளுடா…
அதை கடந்து போன ஆளே இல்லடா…
காதல் ஒரு போதை மாத்திரை…
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை…

ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா…
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா…

BGM

ஆண் : ஓட்ட போட்ட மூங்கில்…
அது பாட்டு பாட கூடும்…
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்…
மனம் உன்ன பத்தி பாடும்…

ஆண் : வந்து போனதாரு…
ஒரு நந்தவன தேரு…
நம்பி நொந்து போனேன் பாரு…
அவ பூ இல்ல நாரு…

ஆண் : என்ன திட்டம் போட்டு நீ திருடாதே…
எட்ட நின்னு நீ வருடாதே…
கட்டெறும்பு போல் நெருடாதே…
மனம் தாங்காதே தாங்காதே…

ஆண் : வானவில்லின் கோலம் நீயம்மா…
என் வானம்தாண்டி போனதெங்கம்மா…
காதல் இல்லா ஊரு எங்கடா…
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா…

ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா…
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா…

ஆண் : அடி ஆணோட காதல் கைரேகை போல…
பெண்ணோட காதல் கைகுட்டை போல…
கனவுக்குள்ளே அவள வச்சேனே…
என் கண்ண ரெண்ட திருடி போனாளே…
புல்லாங்குழல கையில் தந்தாளே…
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே…

BGM


Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from 7 Aum Arivu (2011). Song Lyrics penned by Kabilan. யம்மா யம்மா பாடல் வரிகள்.