Category Archives: ராஜாதி ராஜா

அடி ஆத்துக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராஜாதி ராஜா

Adi Aathukkula Song Lyrics in Tamil


ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…

ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…

ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…

ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…

ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு…
சேர்ந்தது பொண்ணு…
ரெண்டு சிட்டும்தான் சேர்ந்து…
கூடு கட்டுச்சு கண்ணு…

ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு…
சேர்ந்தது பொண்ணு…
ரெண்டு சிட்டும்தான் சேர்ந்து…
கூடு கட்டுச்சு கண்ணு…

ஆண் : கூட்டுக்குள்ள பாரு…
அங்கு குருவி எத்தன கூறு…
கூட்டுக்குள்ள பாரு…
அங்கு குருவி எத்தன கூறு…

BGM

ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்…
அந்தியில பூத்த மரம் மொத்த மரம்…
எத்தனனு கூறு கூறு…

ஆண் : நேத்து இருந்து தொங்குதடி…
குருவி எல்லாம் தாங்குதடி…
மரத்து மேல தூக்குனான் கூடு கூடு…


Notes : Adi Aathukkula Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Ilayaraja. அடி ஆத்துக்குள்ள பாடல் வரிகள்.


மாமா உன் பொண்ண கொடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராஜாதி ராஜா

Maama Un Ponna Song Lyrics in Tamil


ஆண் : மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…

BGM

ஆண் : மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
அட மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…

ஆண் : இது சாமி போட்ட முடிச்சு…
அது தான்டா மூனு முடிச்சு…

குழு : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

ஆண் : தாலி கட்டவும் மேளம் கொட்டவும்…
நேரம் வந்துடுச்சு…
ஊரு உலகம் சேர்ந்து…
எனக்கு மாலை தந்துடுச்சு…

ஆண் : அட மாமா…
குழு : உன் பொண்ண கொடு…
ஆண் : ஆமா…
குழு : சொல்லிபுடு…

BGM

ஆண் : ஊருக்குள்ள என்ன பத்தி…
குழு : கேட்டுக்குங்க நல்ல புள்ள…
ஆண் : உத்தமனா வாழ்ந்து வந்தேன்…
குழு : தப்பு தண்டா ஏதும் இல்ல…

ஆண் : அட மாப்பிள்ளை நான் யோக்கியன்தான்…
குழு : நீங்க செஞ்ச பாக்கியம்தான்…
ஆண் : மாப்பிள்ளை நான் யோக்கியன்தான்…
குழு : நீங்க செஞ்ச பாக்கியம்தான்…

ஆண் : யாருக்கும் தெரியாம…
நான் தாலிய கட்டவும் மாட்டேன்…
நியாயத்த மறக்காம…
அட நானும் உன்கிட்ட கேட்டேன்…

ஆண் : என்னோட ஆசை உன் பொண்ணோட பேச…
என் மாமா நீ சொன்னா கேளு ஹே…

ஆண் : மாமா…
குழு : உன் பொண்ண கொடு…
ஆண் : அட ஆமா…
குழு : சொல்லிபுடு…

ஆண் : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

குழு : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

ஆண் : தாலி கட்டவும் மேளம் கொட்டவும்…
நேரம் வந்துடுச்சு…
ஊரு உலகம் சேர்ந்து…
எனக்கு மாலை தந்துடுச்சே… ஹேய் ஹேய்…

BGM

ஆண் : பண்ணபுரம் போனதில்ல…
குழு : பாஞ்சாலிய பாத்ததில்ல…
ஆண் : ஆமா காஞ்சிபுரம் போனதில்ல…
குழு : காமாட்சிய கண்டதில்ல…

ஆண் : அட பட்டணம்தான் போனதில்ல…
குழு : பத்தினிய பாத்ததில்ல…
ஆண் : அட பட்டணம்தான் போனதில்ல…
குழு : பத்தினிய பாத்ததில்ல…

ஆண் : ஆயிரம் இருந்தாலும் உன் மகள போல வருமா…
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா…
பொண்ணோட நானும் ஆஹா ஒன்னாக வேணும்…
என் மாமாவே என்ன வேணும்…

ஆண் : மாமோய்…
குழு : உன் பொண்ண கொடு…
ஆண் : அட ஆமா…
குழு : சொல்லிபுடு…

ஆண் : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

குழு : இது சாமி போட்ட முடிச்சு…
அதுதான்டா மூனு முடிச்சு…

ஆண் : ஓய்… தாலி கட்டவும் மேளம் கொட்டவும்…
நேரம் வந்துடுச்சு…
ஊரு உலகம் சேர்ந்து…
எனக்கு மாலை தந்துடுச்சே…

BGM


Notes : Maama Un Ponna Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாமா உன் பொண்ண கொடு பாடல் வரிகள்.


மலையாள கரையோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாராஜாதி ராஜா

Malaiyaala Song Lyrics in Tamil


ஆண் : சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது…
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது…
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்…
மனம் விட்டு சிரிக்கின்றதே…

BGM

ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…

ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது…
மண் மணக்குதம்மா…
காலை அழகினில் மனம் கரையுது கரையுது…
கண் மயங்குதம்மா…

ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…

BGM

ஆண் : ஹே… ஓஓ பம் பிம் பம் பம்…
நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள…
நீரோடை தாயை போல வாரி வாரி அல்ல…

ஆண் : நீல வானம் அதில் அத்தனை மேகம்…
நீர்கொண்டு காற்றிலேறி நீண்ட தூரம் போகும்…

ஆண் : காதோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச…
காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச…

ஆண் : தேக்கும் பாக்கும் கூடாதோ…
தோளை தொட்டு ஆடாதோ…
பார்க்க பார்க்க ஆனந்தம் போகப்போக வாராதோ…

ஆண் : என் மனம் துள்ளுது…
தன் வழி செல்லுது…
வண்ண வண்ண கோலம்…

ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…

ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது…
மண் மணக்குதம்மா…
காலை அழகினில் மனம் கரையுது கரையுது…
கண் மயங்குதம்மா…

ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…

BGM

ஆண் : தூறல் உண்டு மலை சாரலும் உண்டு…
பொன்மாலை வெயில் கூட ஈரமாவதுண்டு…
தோட்டமுண்டு கிளி கூட்டமும் உண்டு…
கிள்ளைக்கும் நம்மை போல காதல் வாழ்க்கை உண்டு…

ஆண் : நான் அந்த கிள்ளை போல வாழ வேண்டும்…
வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்…
எண்ணம் என்னும் சிட்டுதான் ரெக்கை கட்டி கொள்ளாதா…
எட்டு திக்கும் தொட்டு தான் எட்டி பாய்ந்து செல்லாதா…

ஆண் : என் மனம் துள்ளுது…
தன் வழி செல்லுது…
வண்ண வண்ண கோலம்…

ஆண் : ஹே… மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…

ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது…
மண் மணக்குதம்மா…
காலை அழகினில் மனம் கரையுது கரையுது…
கண் மயங்குதம்மா…

ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி…
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…


Notes : Malaiyaala Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Vaali. மலையாள கரையோரம் பாடல் வரிகள்.


வா வா மஞ்சள் மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ்.பி. சைலஜாஇளையராஜாராஜாதி ராஜா

Vaa Vaa Manjal Song Lyrics in Tamil


BGM

குழு : வா வா வா வா வா வா வூ…

BGM

ஆண் : வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…
வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…

ஆண் : வைர மணி தேரினிலே…
ஒன்ன வச்சு நான் இழுப்பேன்…
வைர மணி தேரினிலே…
ஒன்ன வச்சு நான் இழுப்பேன்…
என்னுயிரே… ஹாஹா ஹாஹா…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…

BGM

பெண் : குயில் வந்து கூவையிலே…
குஷியான பாடலிலே…
ஒயிலாள் மனம் தவிக்குதையா…
உயிரே தினம் உருகுதையா…

ஆண் : வாச கருவேப்பில்லையே…
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா…
வீசும் இளந் தென்றலிலே…
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா…

பெண் : பொன்னான நேரம் வீணாகுது…
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு…
என்ன சொல்லுறே… ஆஆ… ஆஆ…

ஆண் : வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…

பெண் : வைர மணி தேரினிலே…
ஒன்ன வச்சு நான் இழுப்பேன்…
என்னுயிரே… ஹா ஹா ஹா…

ஆண் : வா வா மஞ்சள் மலரே…
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே…

BGM

ஆண் : தென்னை மரம் பிளந்து…
தெருவெல்லாம் பந்தலிட்டு…
பந்தல் அலங்கரித்து…
பாவை உன்னை அமர வைத்து…

பெண் : அம்மி அதை மிதித்து…
அரசாணி பூட்டி வைத்து…
அருந்ததியை சாட்சி வைத்து…
அழகு மஞ்சள் கயிர் எடுத்து…

ஆண் : கல்யாணம் ஆகும் காலம் வரும்…
எல்லோரும் காணும் நேரம் வரும்…
என்ன சொல்லுறே… ஹா ஹா ஹா ஹா…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…

ஆண் : வைர மணி தேரினிலே…
உன்ன வச்சு நான் இழுப்பேன்…
என்னுயிரே… ஹா ஹா ஹா…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…

பெண் : வா வா…
ஆண் : மஞ்சள் மலரே…
பெண் : ஒண்ணு தா தா…
ஆண் : கொஞ்சும் கிளியே…


Notes : Vaa Vaa Manjal Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Gangai Amaran. வா வா மஞ்சள் மலரே பாடல் வரிகள்.


Engitta Modhadhey Song Lyrics in Tamil

என்கிட்ட மோதாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாராஜாதி ராஜா

Engitta Modhadhey Song Lyrics in Tamil


பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்…
குழு : சுண்டல் பயற ஊற வச்சு…
பெண் : ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்…
குழு : காலையில தின்று விட்டு…

பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்…
குழு : தண்டால் எடு குண்டால் எடு…
பெண் : ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்…
குழு : பஸ்கி எடு குஸ்தி போடு…

பெண் : ஒன் டூ…
குழு : வேஷ்டி எடுத்து…
பெண் : த்ரீ ஃபோர்…
குழு : வரிஞ்சு கட்டு…

பெண் : ஒன் டூ…
குழு : மீசையத்தான்…
பெண் : த்ரீ ஃபோர்…
குழு : முறுக்கி முறுக்கி…
சிலம்பை எடுத்து சொழட்டு சொழட்டு…
ஆம்பளையா வளரு வளரு… ஹோய் ஹோய்…

BGM

ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…

ஆண் : இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே…
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே…
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…

ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…

BGM

ஆண் : முன்னால கோழை பின்னால வீரன்…
பெண்ணாலேதானே நான் ஆளாகினேன்…
எல்லார்க்கும் வீரம் கட்டாயம் உண்டு…
எனக்கு அது கொஞ்சம் அதிகம் தம்பி…

ஆண் : தப்பான வேலைக்கு எந்நாளும் நானே…
எப்போதும் துணையாக ஆனதில்ல…
தற்காப்புக்காக நான் போடும் சண்டை…
தப்பாக ஒரு நாளும் போனதில்ல…

குழு : சரக்கு இருந்தா வித்து பாரு…
ஜாடை பேச்சு பேச வேண்டாம்…
அட வெறப்பு எதுக்கு நரம்பு சுளுக்கும்…
உன் உடம்பு ஒச்சம் ஆக வேண்டாம்…

ஆண் : ஹே… வெத்து வேட்டு…
கொஞ்சம் ஓரம் கட்டு…
அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா…

ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
ஹா ஹா ஹாஹாஹாஹா…

BGM

ஆண் : கத்தி கத்தி சண்டை வாய் வலிக்க போட்டா…
காத்தோட போகும் அது தேவை இல்லை…
கட்சி கட்டி ஆடும் ஆட்டம் இங்கு வேணாம்…
புத்தி கெட்டு போகாதே நீயும் வீணா…

ஆண் : உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு…
அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா…
ஹேய்… கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு…
இஷ்டபட்டு எல்லோரும் பின்னால் வருவார்…

குழு : பதவி இருந்தா பத்து பேரு…
பணத்துக்காக நூறு பேரு…
காசுக்கு தான் மதிப்பு இருக்கு…
மனுஷனுக்கு எங்கே இருக்கு…

ஆண் : எனக்கு கட்சியும் வேணாம்…
ஒரு கொடியும் வேணாம்…
அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா…

ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…

ஆண் : இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே…
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே…
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…

பெண் : என் மாமன் கிட்ட மோதாதே…
அவர் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே…
இவர் சூராதி சூரனடா… ஆஆ… ஆஆ…


Notes : Engitta Modhadhey Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Ponnadiyan. என்கிட்ட மோதாதே பாடல் வரிகள்.


மீனம்மா மீனம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாராஜாதி ராஜா

Meenamma Meenamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ…
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ… ஓஓ…

பெண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா…

BGM

பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து…
ராஜ நடை போடுதே…
தங்க மகன் தேரில் வந்தால்…
கோடி மின்னல் சூழுதே…

ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு…
வித்தை செய்யும் பூங்கொடி…
தத்தி தத்தி தாவி வந்து…
கையில் என்னை ஏந்தடி…

பெண் : மோகம் கொண்ட மன்மதனும்…
பூக்கணைகள் போடவே…
காயம் பட்ட காளை நெஞ்சும்…
காமன் கணை மூடுதே…

ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும்…
இந்திரனின் ஜாலமோ…
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ…

பெண் : இதமாக சுகம் காண…
துணை நீயும் இங்கு வேண்டுமே…
சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
பெண் : ஆஹா… தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா…

BGM

ஆண் : இட்ட அடி நோகுமம்மா…
பூவை அள்ளி தூவுங்கள்…
மொட்டு உடல் வாடுமம்மா…
பட்டு மெத்தை போடுங்கள்…

பெண் : சங்கத்தமிழ் காளை இவன்…
பிள்ளை தமிழ் பேசுங்கள்…
சந்தனத்தை தான் துடைத்து…
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்…

ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி…
லாலி லல்லி கூறுங்கள்…
நெஞ்சமென்னும் மஞ்சமதில்…
நான் இணைய வாழ்த்துங்கள்…

பெண் : பள்ளியறை நேரமிது…
தள்ளி நின்று பாடுங்கள்…
சொல்லி தர தேவை இல்லை…
பூங்கதவை மூடுங்கள்…

ஆண் : சுகமான புது ராகம்…
உருவாகும் வேலை நாணமோ…

பெண் : இதமாக சுகம் காண…
துணை வேண்டாமோ… ஓஹோ…

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…

பெண் : சுகமான புது ராகம்…
உருவாகும் வேளை நாணுமே…
இதமாக சுகம் காண…
துணை வேண்டாமோ… ஓஓ…

ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
பெண் : தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா…


Notes : Meenamma Meenamma Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Piraisoodan. மீனம்மா மீனம்மா பாடல் வரிகள்.