ஆண் : சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது… சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது… வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்… மனம் விட்டு சிரிக்கின்றதே…
—BGM—
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி… மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது… மண் மணக்குதம்மா… காலை அழகினில் மனம் கரையுது கரையுது… கண் மயங்குதம்மா…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
—BGM—
ஆண் : ஹே… ஓஓ பம் பிம் பம் பம்… நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள… நீரோடை தாயை போல வாரி வாரி அல்ல…
ஆண் : நீல வானம் அதில் அத்தனை மேகம்… நீர்கொண்டு காற்றிலேறி நீண்ட தூரம் போகும்…
ஆண் : காதோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச… காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச…
ஆண் : தேக்கும் பாக்கும் கூடாதோ… தோளை தொட்டு ஆடாதோ… பார்க்க பார்க்க ஆனந்தம் போகப்போக வாராதோ…
ஆண் : என் மனம் துள்ளுது… தன் வழி செல்லுது… வண்ண வண்ண கோலம்…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது… மண் மணக்குதம்மா… காலை அழகினில் மனம் கரையுது கரையுது… கண் மயங்குதம்மா…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
—BGM—
ஆண் : தூறல் உண்டு மலை சாரலும் உண்டு… பொன்மாலை வெயில் கூட ஈரமாவதுண்டு… தோட்டமுண்டு கிளி கூட்டமும் உண்டு… கிள்ளைக்கும் நம்மை போல காதல் வாழ்க்கை உண்டு…
ஆண் : நான் அந்த கிள்ளை போல வாழ வேண்டும்… வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்… எண்ணம் என்னும் சிட்டுதான் ரெக்கை கட்டி கொள்ளாதா… எட்டு திக்கும் தொட்டு தான் எட்டி பாய்ந்து செல்லாதா…
ஆண் : என் மனம் துள்ளுது… தன் வழி செல்லுது… வண்ண வண்ண கோலம்…
ஆண் : ஹே… மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி… மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
ஆண் : மலமுடியினில் பனி வடியுது வடியுது… மண் மணக்குதம்மா… காலை அழகினில் மனம் கரையுது கரையுது… கண் மயங்குதம்மா…
ஆண் : மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி… மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி… அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி…
Notes : Malaiyaala Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Vaali. மலையாள கரையோரம்பாடல் வரிகள்.
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்… குழு : சுண்டல் பயற ஊற வச்சு… பெண் : ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்… குழு : காலையில தின்று விட்டு…
பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்… குழு : தண்டால் எடு குண்டால் எடு… பெண் : ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்… குழு : பஸ்கி எடு குஸ்தி போடு…
பெண் : ஒன் டூ… குழு : வேஷ்டி எடுத்து… பெண் : த்ரீ ஃபோர்… குழு : வரிஞ்சு கட்டு…
பெண் : ஒன் டூ… குழு : மீசையத்தான்… பெண் : த்ரீ ஃபோர்… குழு : முறுக்கி முறுக்கி… சிலம்பை எடுத்து சொழட்டு சொழட்டு… ஆம்பளையா வளரு வளரு… ஹோய் ஹோய்…
—BGM—
ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா… வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா… என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா… வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
ஆண் : இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே… அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே… இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே… அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…
ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா… வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
—BGM—
ஆண் : முன்னால கோழை பின்னால வீரன்… பெண்ணாலேதானே நான் ஆளாகினேன்… எல்லார்க்கும் வீரம் கட்டாயம் உண்டு… எனக்கு அது கொஞ்சம் அதிகம் தம்பி…
ஆண் : தப்பான வேலைக்கு எந்நாளும் நானே… எப்போதும் துணையாக ஆனதில்ல… தற்காப்புக்காக நான் போடும் சண்டை… தப்பாக ஒரு நாளும் போனதில்ல…
குழு : சரக்கு இருந்தா வித்து பாரு… ஜாடை பேச்சு பேச வேண்டாம்… அட வெறப்பு எதுக்கு நரம்பு சுளுக்கும்… உன் உடம்பு ஒச்சம் ஆக வேண்டாம்…
ஆண் : ஹே… வெத்து வேட்டு… கொஞ்சம் ஓரம் கட்டு… அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா…
ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா… வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா… ஹா ஹா ஹாஹாஹாஹா…
—BGM—
ஆண் : கத்தி கத்தி சண்டை வாய் வலிக்க போட்டா… காத்தோட போகும் அது தேவை இல்லை… கட்சி கட்டி ஆடும் ஆட்டம் இங்கு வேணாம்… புத்தி கெட்டு போகாதே நீயும் வீணா…
ஆண் : உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு… அடுத்தவன் கொடுத்தா அது நிக்காதப்பா… ஹேய்… கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற பாரு… இஷ்டபட்டு எல்லோரும் பின்னால் வருவார்…
குழு : பதவி இருந்தா பத்து பேரு… பணத்துக்காக நூறு பேரு… காசுக்கு தான் மதிப்பு இருக்கு… மனுஷனுக்கு எங்கே இருக்கு…
ஆண் : எனக்கு கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டா…
ஆண் : என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா… வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
ஆண் : இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே… அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே… இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே… அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…
பெண் : என் மாமன் கிட்ட மோதாதே… அவர் ராஜாதி ராஜனடா… வம்புக்கு இழுக்காதே… இவர் சூராதி சூரனடா… ஆஆ… ஆஆ…
Notes : Engitta Modhadhey Song Lyrics in Tamil. This Song from Rajadhi Raja (1989). Song Lyrics penned by Ponnadiyan. என்கிட்ட மோதாதேபாடல் வரிகள்.