Category Archives: தங்கமகன் (1983)

மச்சான பாருடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Machana Paaradi Song Lyrics in Tamil


பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…

குழு : ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…
ஜ்ஜூம் ஜ்ஜூம் ஜ்ஜூம் டுர்ர்ர்…

BGM

பெண் : மச்சான பாருடி…
ஆஹா மச்சமுள்ள ஆளுடி…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…
ஒட்டவே வெட்டணும் வாங்கடி ஹோ…
குழு : ஒட்டவே வெட்டணும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆள பாரு நல்லா…
இவர் மீசை வச்ச பில்லா…
ஆஹா வீரம் என்ன கூறு…
அது பூனை மீசை பாரு…

பெண் : காதலுக்கு மாமன்தான்…
ராத்திரியில் வீரன்தான்…
பாம்பு உண்டு பையில…
கன்னத்தோடு கையில…

பெண் : அடக்குடி நாக்க…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : அது ஒரு பேக்கு…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : அடக்குடி நாக்கு…
அது ஒரு பேக்கு…
எங்கிட்ட மோதுனா ஒடை படும் மூக்கு…

பெண் : மச்சான பாருடி…
ஆஹ் மச்சமுள்ள ஆளுடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே வெட்டனும் வாங்கடி… ஹ்ம்ம்…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : மச்சான பாருடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
பெண் : மச்சமுள்ள ஆளுடி…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

பெண் : ஆளு ரொம்ப தங்கம்…
இவர் ராஜா வீட்டு சிங்கம்…
ஆஹ் போதும் போடி தங்கம்…
இது என்றும் சைவ திங்கும்…

பெண் : பாயும் புலி தானடி…
பஞ்சணையில் சாதுடி…
டாங்கி போல ஆளுடி…
ஆளக் கொட்டும் தேளுடி…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
குழு : தானனன்ன தான்னா…
பெண் : மன்மதன் பேரன்…
குழு : தானனன்ன தான்னா…

பெண் : மாப்பிள்ளை சூரன்…
மன்மதன் பேரன்…
ஆம்பிளையா இவன் சோதிக்க வேணா…

பெண் : மச்சான பாருடி…
ஆ ஹான் ஹான் ஹான் ஹான்…
மச்சமுள்ள ஆளுடி…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…
ஆளு ரொம்ப ஆழம்…
வாலு ரொம்ப நீளம்…

பெண் : ஒட்டவே ஹான் வெட்டனும் ஹான் வாங்கடி…
குழு : ஒட்டவே வெட்டனும் வாங்கடி…

பெண் : ஆஹ் மச்சான பாருடி…
மச்சமுள்ள ஆளுடி…


Notes : Machana Paaradi Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vairamuthu. மச்சான பாருடி பாடல் வரிகள்.


வா வா பக்கம் வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாதங்கமகன் (1983)

Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…

பெண் : மன்மத மோகத்திலே… ஹேய் ஹேய் ஹேய்…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா…

பெண் : வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…
வா வா பக்கம் வா…
பக்கம் வர வெக்கமா…

BGM

பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…

பெண் : ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதில்…
தொடங்கிடும் சுவையாக…
குழு : லலலலலா…

பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…

பெண் : ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி…
மகிழ்ந்திடும் பொதுவாக…
குழு : லலலலலா…

பெண் : மாலை வேளை மையல் வெள்ளை…
மாலை வேளை மையல் வெள்ளை…
ஆடவர் வரலாம்…
அங்கங்களை தொடலாம்…
அன்பில் நீந்தலாம்…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…

ஆண் : மன்மத மோகத்திலே… ஹ ஹா ஹ ஹா…
வாலிப வேகத்திலே… ஹோ ஹோ ஹோ ஹோ…
ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை…
இனிமை காண வா… ஹேய் ஹேய் ஹேய்…
டி.ஐ.எஸ்.சி.ஓ. டிஸ்கோ டிஸ்கோ…

BGM

ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : வாழ்வது எதற்கு வையகத்தின் சுகங்களை…
வாழ்க்கையில் பெறத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : கன்னியர் எதற்கு காலத்தில் மயங்கும்…
காளையர் தொடத்தானே…
குழு : லலலலலா…

ஆண் : காதல் மானே காவல் நானே…
காதல் மானே காவல் நானே…
ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு…
அருகில் ஓடி வா… பா பா பா பா பா…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : பேபுலஸ் டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : மன்மத மோகத்திலே…
வாலிப வேகத்திலே…
ஏங்குது இளமை இன்பம் தரும் புதுமை…
இனிமை காணவா…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : டி.ஐ.எஸ்.சி.ஓ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ…
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM


Notes : Vaa Vaa Pakkam Vaa Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Muthulingam. வா வா பக்கம் வா பாடல் வரிகள்.


அடுக்கு மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமகன் (1983)

Adukku Malligai Song Lyrics in Tamil


BGM

பெண் : அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…

பெண் : உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன…

ஆண் : ஹேய்ய் ஏய்ய் தானனா… ஆஅ ஆஅ ஆஅ…
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது… ஹோய்…

BGM

ஆண் : நான் வாரேன் புது பாய் போடு…
நாள் தோறும் இள நீரோடு…
நான் வாரேன் புது பாய் போடு…
நாள் தோறும் இள நீரோடு…

பெண் : கையோடு சேர்த்தணைச்சு…
கட்டில் வரை கண்ணடிச்சு…
ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு…

ஆண் : நீ வாடி செல்லக்குட்டி…
நான் தூக்கும் வெல்லக்கட்டி…
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது…

பெண் : அடுக்கு மல்லிகை…
ஆண் : ஹான்…
பெண் : இது ஆள் பிடிக்கிது…
ஆண் : ஹான் ஹஹா…
பெண் : ரெண்டு தோள் துடிக்கிது…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : மனம் துடிதுடிக்கிது…

BGM

ஆண் : மாம்பூவே இளம் பூங்காத்தே…
மார்போடு எனை தாலாட்டு…
மாம்பூவே இளம் பூங்காத்தே…
மார்போடு எனை தாலாட்டு…

பெண் : தீராத ஆசை வச்சு…
அங்கே இரு கண்ணிருக்கு…
தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு…

ஆண் : ராசாத்தி முல்லை மொட்டு…
நான் தேடும் காதல் சிட்டு…
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது…

ஆண் : அடுக்கு மல்லிகை…
பெண் : ஹஹஹஹா… ஆன்…
ஆண் : இது ஆள் பிடிக்கிது…
பெண் : ஹஹஹஹான் ஹா…
ஆண் : ரெண்டு தோள் துடிக்கிது…
பெண் : ஹஹஹஹஹாஹ்…
ஆண் : மனம் துடிதுடிக்கிது…

பெண் : உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன…

பெண் & ஆண்: அடுக்கு மல்லிகை…
இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…


Notes : Adukku Malligai Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Na. Kamarasan. அடுக்கு மல்லிகை பாடல் வரிகள்.


Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil

ராத்திரியில் பூத்திருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமகன் (1983)

Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

BGM

பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…

பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…

பெண் : வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…

ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும்…
மோதும் புதிய அனுபவம்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

BGM

ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…

ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…

ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…

பெண் : நாதசுரம் ஊதும் வரை…
நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்…

பெண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
பெண் : ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…


Notes : Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Pulamaipithan. ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகள்.


பூமாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமகன் (1983)

Poo Maalai Song Lyrics in Tamil


BGM

பெண் : பூமாலை ஒரு பாவையானது…
பொன் மாலை புது பாட்டு பாடுது…
இதை பார்க்க பார்க்க புதுமை…
இசை கேட்க கேட்க இனிமை…
என்னை யார்தான் வெல்வது…
பூமாலை ஒரு பாவையானது…

ஆண் : ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய்…
ஹேய்ய்ய்ய்… ஹேய்ய்… லால்லலல…
லலல லலல லலல… ஆஅ ஆ ஆஆ ஆஅ…

ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா…
பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா…
இதை பார்க்க பார்க்க புதுமை…
இதை கேட்க கேட்க கொடுமை…
அட யார்தான் சொல்வது…
பூமாலை ஒரு பாவையகுமா…

BGM

பெண் : பாடும்போது பூங்காற்று…
பாயும்போது நீரூற்று…
என்னைப் போல பெண்ணில்லை…
பெண்ணை வென்ற ஆணில்லை…

ஆண் : முட்டை போடும் பெட்டைக் கோழியே…
சேவல் கூட போராட்டமா…
கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்…
பெட்டைக் கோழி தாங்காதம்மா…

பெண் : தப்பான தாளங்கள் போடாதே…
ஆண் : தகஜிகு தகஜிகு தகு…
தகத் தாகதகத் தாக தக…

பெண் : தப்பான தாளங்கள் போடாதே…
உப்புக் கல் வைரக்கல் ஆகாதே…
நானொரு நாட்டிய தேவதை பாரு…

பெண் : பூமாலை ஒரு பாவையானது…
பொன் மாலை புது பாடல் பாடுது…

BGM

ஆண் : சாமி கூட ஆடத்தான்…
சக்தி போட்டி போடத்தான்…
அம்பாள் பாடு என்ன ஆச்சு…
அம்பலதில் நின்னே போச்சு…

பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம்…
ஆண் : ஆஹா…
பெண் : கடவுள் என்று பேராகுமா…
ஆண் : ஓஹோ…

பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம்…
ஆண் : ஒய்…
பெண் : குயிலின் கீதம் போலாகுமா…

ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே…
தகஜிகு தகஜிகு தகு…
தகத் தாகு தகு தகு தகு…

ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே…
உன் பப்பு இங்கேதான் வேகாதே…
ஆடலில் பாடலில் வல்லவன் பாரு…

ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா… ஹான்…
பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா…

பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை…
இதை கேட்க கேட்க கொடுமை…
இதை யார்தான் சொல்வது…
பூமாலை ஒரு பாவையானது…

BGM


Notes : Poo Maalai Song Lyrics in Tamil. This Song from Thangamagan (1983). Song Lyrics penned by Vaali. பூமாலை பாடல் வரிகள்.