அம்மன் கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Amman Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்…
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்…
பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம்…
பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும்…

ஆண் : அவன் மனமோ அது எங்கே சென்றாலும்…
இவள் மனமோ அவன் பின்னாலே போகும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும்…
கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும்…
பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும்…
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்…

ஆண் : தன் மகனோ அவன் யாரான போதும்…
அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…


Notes : Amman Koyil Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் பாடல் வரிகள்.