தப்புத்தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்வில்லன்

Thappu Thanda Song Lyrics in Tamil


BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

ஆண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM

ஆண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவி நான் செய்யவா…
பெண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

பெண் : களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை…
என்னிடம் திருப்பிக் கொடு…
என் உடல் கொஞ்சம் சாயட்டும்…
உயிர் கொஞ்சம் தூங்கட்டும்…
ஒத்தடம் தந்து விடு…

ஆண் : ஓ… ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது…
அனுமதி தந்து விடு…
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும்…
வன்முறை முத்தம் கொடு…

பெண் : இடியோ மழையோ…
அது அறையில் இருக்கட்டுமே…
இரவோ பகலோ…
அது வெளியில் இருக்கட்டுமே…

ஆண் : நடந்து வரும் சித்திரமே…
நனைய விடும் சொப்பனமே…
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே…
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

BGM

ஆண் : தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும்…
சூரியன் புதியதடி…
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும்…
சுகவகை புதியதடி…

பெண் : இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று…
சாயுது இளையகொடி…
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று…
ஏங்குது பழையபடி…

ஆண் : ஆடை சரிந்தால்…
உன் அவசியம் பார்த்து வைப்பேன்…
ஜாடை புரிந்தால்…
உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்…

பெண் : மார்பழகு இந்திரனே…
மஞ்சள் நிற மன்னவனே…
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே…
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்…

BGM

பெண் : தப்புத்தண்டா தப்புத்தண்டா தலைவா நீ செய்யவா…
ஆண் : வெயில்படா இடங்களை விளையாடித் தொடவா…

பெண் : மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்…
ஆண் : புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா…

BGM


Notes : Thappu Thanda Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. தப்புத்தண்டா பாடல் வரிகள்.