Tag Archives: யுவன் ஷங்கர் ராஜா

thaaliyae-thevaiyilla-song-lyrics

தாலியே தேவயில்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஹரிஹரன் & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

ஆண் : உறவோடு பிறந்தது பிறந்தது…
உசுரோடு கலந்தது கலந்தது…
மாமா மாமா நீதான் நீதானே…

ஆண் : அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள…
அடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள…
உன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள…
என்ன உருக்கி…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

ஆண் : பத்து பவுனு பொன்னெடுத்து…
கங்குக்குள்ள காய வச்சு…
தாலி ஒன்னு செய்யப்போறேன் மானே மானே…

பெண் : நட்டநடு நெத்தியில…
ரத்த நிற பொட்டு வச்சு…
உன் கைபுடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே…

ஆண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
மனசுல மனசுல மயக்கம்…

பெண் : இது என்ன… இது என்ன…
கனவுல கனவுல குழப்பம்…

ஆண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்…

பெண் : அட கிறுக்கா…
நான் உனக்காக பொறந்தவடா…
அட கிறுக்கா…
நான் உனக்காக அலைஞ்சவடா…
உன்ன நெனச்சு… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

பெண் : எட்டு ஊரு சந்தையில…
எம்பது பேர் பாக்கையில…
உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன்…
நானே நானே…

ஆண் : ஹே… குற்றவியல் நீதிமன்ற
கூண்டுக்குள்ள நிக்க வச்சு…
கேசு ஒன்னு போட்டுருவேன்…
மானே… மானே…

பெண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
எனக்கிப்போ பிடிக்குது உன்ன…

ஆண் : இது என்ன… இது என்ன…
நான் எத்தனதடவ சொன்னேன்…

பெண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்… ஹோஹோஓ…

ஆண் : அடி சிறுக்கி…
நீ தாய்மாமன் சீதனமே…
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே…
என்ன உருக்கி… ஓஓஓ… ஓஓஓ…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—


Notes : Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Hari. தாலியே தேவயில்ல பாடல் வரிகள்.


வானில் இருள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதீ யுவன் ஷங்கர் ராஜாநேர்கொண்ட பார்வை

Vaanil Irul Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—

பெண் : விதிகள் தாண்டி கடலில் ஆடும்…
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்…
நான் அந்தக் கதிராகிறேன்…

பெண் : அகன்று ஓடும் நதிகள் ஆகி…
அருவி பாடும் கதைகளாகி…
நான் இந்த நிலமாகிறேன்…

பெண் : பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே…
சரிகளின் வரி இங்கு யார்தான்…
திறக்காதக் காடெல்லாம்…
பூ பூக்காது பெண்னே…

—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—


Notes : Vaanil Irul Song Lyrics in Tamil. This Song from Nerkonda Paarvai (2019). Song Lyrics penned by Uma Devi. வானில் இருள் பாடல் வரிகள்.


வீசிய விசிறி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய சாகர்யுவன் ஷங்கர் ராஜாதமன்.எஸ்அருவம்

Veesiya Visiri Song Lyrics in Tamil


ஆண் : வீசிய விசிறி பார்வையிலே… ஏ… ஏ… ஏ…
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே…
சாய்த்தவளே… சாய்த்தவளே…

—BGM—

ஆண் : வீசிய விசிறி பார்வையிலே… ஏ… ஏ… ஏ…
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே…
சாய்த்தவளே… சாய்த்தவளே…

ஆண் : தேசிய கீதம் கேட்டவன் போலே…
போலே போலே போலே…
என்னை அசையாமல் நிக்க வைத்தவளே…
வைத்தவள்…

ஆண் : லேசாகி மெதக்குறேன்…
தூசாகி பறக்குறேன்…
அடி எனக்குள் நானே…
தனக்கு தானே சிரிக்கிறேன்…

ஆண் : தானாக தெரிக்கிறேன்…
தனியாக தவிக்கிறேன்…
ஏய்… அடி என்னை போல…
உன்னை நானும் நினைக்கிறேன்…

ஆண் : என் நாடி நரம்பில்…
வேதியல் மாற்றம்…
ஓடும் ரத்தத்தில்…
ஓகிப்புயல் சீற்றம்…

ஆண் : யுத்தம் ஓர் யுத்தம்…
இது காதல் யுத்தம்…
சத்தம் ஓர் சத்தம்…
இது இதயத்து சத்தம்…

ஆண் : கொத்தும் இது கொத்தும்…
என் தேகம் மொத்தம்…
உன்னை திட்டமிட்டு…
வட்டம் போடுவேன்…

ஆண் : வீசிய விசிறி பார்வையிலே… ஏ…
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே…

—BGM—

ஆண் : அழகிய புயல் ஒன்று உண்டானது…
என் அணுக்கள் ஒவ்வொன்றும் ரெண்டானது…
இருதய துடிப்பும் மூன்றானது…
நொடி நிமிடம் நாள் ஆகுது…

ஆண் : கண்ணின் பார்வை தேவாமிர்தம்…
காதல் ஓதும் ஐந்தாம் வேதம்…
கண்ணே நீயும் பெண்ணே இல்லை…
ஆறாம் பூதம்…

ஆண் : தெரிஞ்சேதான் தொலையிறேன்…
தெரியாம கரையிறேன்…
நீ தேவை என்று…
தேடி தேடி அலையிறேன்…

ஆண் : என் நாடி நரம்பில்…
வேதியல் மாற்றம்…
ஓடும் ரத்தத்தில்…
ஓகிப்புயல் சீற்றம்…

—BGM—

ஆண் : யுத்தம் ஓர் யுத்தம்…
இது காதல் யுத்தம்…
சத்தம் ஓர் சத்தம்…
இது இதயத்து சத்தம்…

ஆண் : கொத்தும் இது கொத்தும்…
என் தேகம் மொத்தம்…
உன்னை திட்டமிட்டு…
வட்டம் போடுவேன்…

—BGM—


Notes : Veesiya Visiri Song Lyrics in Tamil. This Song from Aruvam (2019). Song Lyrics penned by Vijaya Saagar. வீசிய விசிறி பாடல் வரிகள்.


டிக் டிக் டிக் டைட்டில் ட்ராக்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா, சுனிதா சாரதி & யோகி பிடி. இமான்டிக் டிக் டிக்

Tik Tik Tik Title Track Song Lyrics in Tamil


பெண் : டிக் டிக் டிக்…

—BGM—

பெண் : டிக் டிக் டிக்…

—BGM—

பெண் : உன் செவிகளில் சொட்டு சொட்டென…
கால துளியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்…
கொட்டும் ஒலியா…

ஆண் : எவ்வதின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்…
எவ்வாறு இங்கே பிழை…
பவ்வத்தின் துளி மொண்டு…
மாகஞ்செய்யாது அவ்வானில் எங்கே மழை…

ஆண் : எவ்வதின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்…
எவ்வாறு இங்கே பிழை…
பவ்வத்தின் துளி மொண்டு…
மாகஞ்செய்யாது அவ்வானில் எங்கே மழை…

ஆண் : விதி சிறிது மதி பெரிது…
தடை சிறிது விடை பெரிது… ஏ…

ஆண் : வலி சிறிது வழி பெரிது…
பொருள் சிறிது அருள் பெரிது…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : உன் செவிகளில் சொட்டு சொட்டென…
கால துளியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்…
கொட்டும் ஒலியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : உன் செவிகளில் சொட்டு சொட்டென…
கால துளியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்…
கொட்டும் ஒலியா…

ஆண் : மோதல் தொடங்கும் படி…
சரிந்துவிட்ட போதும்…
குழந்தைகள் போல நாம்…
நிற்க பிடிவாதம் வேண்டும்…
இரவு வானத்தை பார்…
ஜொலிக்கும் நட்சத்திரம்…
அங்கே தான் போகலாம் வா…

ஆண் : ஏறிக்கொள் ஆகச வானம்…
கனவுகள் நிஜமாகலாம்…
தினமும் முன்னேற்றம் அடைந்தால்…
நாட்டில் இருந்து விண்வெளிக்கு…
வி ஆர் அஸ்ட்ரோனோமிகள்…
ஓடி ஓடி நாம் நாடி தேடி…
இலக்கு அடைவதை லட்சியம்…
வெற்றியுடன் நாம் திரும்புவோமே…
உயிர் மேல் சத்தியம்…

பெண் : நமக்கென பல போர்கள் இருக்கையில்…
வெளியிருந்தொரு விண்கல் வருவதா…
அதை உடைத்திடு கதவடைத்திடு…
பின் நாம் போரிடுவோம்…

ஆண் : மொழி மத இன பேதம் இருக்கையில்…
நம்மை அழித்திட வானம் விழுவதா…

பெண் : அதை தடுத்திடு…
கதை முடித்திடு…
பின்னே நாம் அழிவோம்…

ஆண் : நுரை…

குழு (ஆண்கள்) : சிறிது…

ஆண் : கரை…

குழு (ஆண்கள்) : பெரிது…

ஆண் : தடம்…

குழு (ஆண்கள்) : சிறிது…

ஆண் : இடம் பெரிது…

ஆண் : விழும்…

குழு (ஆண்கள்) : மனது…

ஆண் : எழும்…

குழு (ஆண்கள்) : பொழுது…

ஆண் : துயர்…

குழு (ஆண்கள்) : சிறிது…

ஆண் : உயிர் பெரிது…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : உன் செவிகளில் சொட்டு சொட்டென…
கால துளியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்…
கொட்டும் ஒலியா…

பெண் : டிக் டிக் டிக்…

—BGM—

பெண் : டிக் டிக் டிக்…

—BGM—

ஆண் : அபாய ரூபங்கள் புவியை தாக்கினால்…
ஆற்றலின் எல்லைகள் உடைத்து மீறுவோம்…
அஞ்சாத உள்ளங்கள் ஒன்றாக கூடினால்…
மரண பீதியை தாமதம் ஆக்குவோம்…

ஆண் : எவ்வதின் நுதிக்கான நீயாற்றும் ஏதும்…
எவ்வாறு இங்கே பிழை…
பவ்வத்தின் துளி மொண்டு…
மாகஞ்செய்யாது அவ்வானில் எங்கே மழை…

குழு (ஆண்கள்) : விதி சிறிது மதி பெரிது…
தடை சிறிது விடை பெரிது… ஏ…

குழு (ஆண்கள்) : வலி சிறிது வழி பெரிது…
பொருள் சிறிது அருள் பெரிது…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : உன் செவிகளில் சொட்டு சொட்டென…
கால துளியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்…
கொட்டும் ஒலியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : உன் செவிகளில் சொட்டு சொட்டென…
கால துளியா…

பெண் : டிக் டிக் டிக்…

பெண் : இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்…
கொட்டும் ஒலியா…

ஆண் : கடிகாரம் நாடி துடி துடிக்கும்…
டிக் டிக் டிக்…
நொடி இடிபோல் ஒலி வெடிக்கும்…
டிக் டிக் டிக்…
அவசரத்தில் கதை முடிப்போம்…
டிக் டிக் டிக்…

ஆண் : பிகாஸ் வென் வி டூ இட்…
யூ நோ வி டூ இட் குயிக் அண்ட் ஸ்லீக்…
நம் உடல் பயிற்சி…
திரனின் வளர்ச்சி மனிதனின் புத்தி…
கேன் காண்யூர் க்ராவிட்டி…

ஆண் : நம்முள் வாழும் சக்தி…
மாடர்ன் டெக்னாலஜி…
கட்டுமே தன்னம்பிக்கை…
நம் வெற்றிக்கான சங்கதி…

பெண் : டிக் டிக் டிக்…


Notes : Tik Tik Tik Title Track Song Lyrics in Tamil. This Song from Tik Tik Tik (2018). Song Lyrics penned by Madhan Karky. டிக் டிக் டிக் டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.


கண்ணுங்களா செல்லங்களா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன் & செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாநெஞ்சம் மறப்பதில்லை

Kannungala Chellangala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…
கண்ணுங்களா என் செல்லங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…

ஆண் : எனக்குத்தான் ஜொரம்…
ஹ ஹ ஹ ஹ ஜொரம்…
செத்த நாய் மேலதான்…
எத்தனை லாரிதான்…

ஆண் : ஐயா வந்துட்டாருங்க…
காபி போடணுமுங்க…
ஐயா வந்துட்டாருங்க…
கேட்ட தொறக்கணுமுங்க… சத்தியம்…

—BGM—

ஆண் : தந்தை ஒருவன்…
அந்த இறைவன்…
அவனும் அன்னை இல்லாதவன்…

ஆண் : தன்னை தேடி…
ஏங்கும் பிள்ளை…
கண்ணில் உறக்கம் கொள்வானவன்…

ஆண் : பூவும் பொன்னும்…
பொருந்தி வாழும்…
மழலை கேட்டேன் தந்தானவன்…

ஆண் : நாளை உலகில்…
நீயும் நானும்…
வாழும் வழிகள் செய்வானவன்…

ஆண் : என் பெண்மணிகள்…
ஏன் தூங்கவில்லை…
என் பெண்மணிகள்…
ஏன் தூங்கவில்லை…

—BGM—

ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…
கண்ணுங்களா என் செல்லங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…

ஆண் : எனக்குத்தான் ஜொரம்…
ஹ ஹ ஹ ஹ ஜொரம்…
செத்த நாய் மேலதான்…
எத்தனை லாரிதான்…

ஆண் : ஐயா வந்துட்டாருங்க…
காபி போடணுமுங்க…
ஐயா வந்துட்டாருங்க…
கேட்ட தொறக்கணுமுங்க… சத்தியம்…


Notes : Kannungala Chellangala Song Lyrics in Tamil. This Song from Nenjam Marappathillai (2021). Song Lyrics penned by Kannadasan & Selvaraghavan. கண்ணுங்களா செல்லங்களா பாடல் வரிகள்.


என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜா & எஸ். ஜே. சூர்யாயுவன் ஷங்கர் ராஜாநெஞ்சம் மறப்பதில்லை

En Pondatti Ooruku Poita Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…

ஆண் : கண்ணு தெரியுது…
காது கேக்குது…
உலகம் புரியுது…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…

ஆண் : கண்ணு தெரியுது…
காது கேக்குது…
உலகம் புரியுது…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…

—BGM—

ஆண் : டயரு பஞ்சர் ஆகுமோ…
ஐ.டி கார்ட மறந்துட்டானா…
போர்டிங் கார்ட தொலைச்சிட்டானா…
ஃ ப்ளைட்டு டிலே ஆர் கேன்சல்…

ஆண் : பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டானு கும்மாளமா…
வீட்டுக்கு போய் நான் கால்லிங் பெல் அடிச்சா…
மூதேவி கதவ தெரப்பாளோ…

—BGM—

ஆண் (வசனம்) : ஹாய் பேபி…
யு ரீச்ட் டு… ஆல் வெள்…
லவ் யு டூ… பாய்…

—BGM—


Notes : En Pondatti Ooruku Poita Song Lyrics in Tamil. This Song from Nenjam Marappathillai (2021). Song Lyrics penned by Selvaraghavan. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா பாடல் வரிகள்.


மஞ்ச கலரு குருவி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சரவெடி சரண்ஷியாம் விஸ்வநாதன்யுவன் ஷங்கர் ராஜாடிக்கிலோனா

Manja Colouru Kuruvi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவ மஞ்ச கலரு குருவி…
என் மனசை போட்டா உருவி…
மஞ்சா போட்ட நூலு…
இப்போ அருந்து போச்சுடா…

ஆண் : அவ குற்றாலத்து அருவி…
நான் தம்மாத்தூண்டு கருவி…
பட்டம்பூச்சி பாதியிலே பறந்து போச்சுடா…

ஆண் : இந்த பொண்ணுங்கலாமே ரொம்ப மோசம்… ஆ… ஹா…
அவ பேசும் பேச்செல்லாம் வெளிவேஷம்… ஆ… ஹா…
இந்த காதல் எல்லாமே சில மாசம்… ஆ… ஹா…
என்ன கொலநாசம் செஞ்சிப்புட்டா… டா… டா… டா…

—BGM—

ஆண் : ஆசைப்பட்டு கேட்டா அவ ஆவின்னு மில்க்கு…
அவ வீட்டு பக்கம் போய் நான் வாங்குனேன் பல்ப்பு…
அழக பாத்து விழுந்தேன் அவ அல்வா பேச்சுல…
ஆண்டி ஆக்கி நிக்க வச்சா மெரினா பீச்சில…

ஆண் : என்ன சுத்த உட்டா ஒரு கடிகாரமா…
நான் கண்ணீர் விட்டேன் கண்விழி ஓரமா…
அட இதுக்கு மேல இனி எவளும் வேணா…
வேணா வேணா என் கவலை தீர பாடுறேன் கானா…

—BGM—

ஆண் : இந்த பொண்ணுங்கலாமே ரொம்ப மோசம்… ஆ… ஹா…
அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேஷம்… ஆ… ஹா…
இந்த காதல் எல்லாமே சில மாசம்… ஆ… ஹா…
என்ன கொலநாசம் செஞ்சிப்புட்டா… டா… டா… டா…

—BGM—


Notes : Manja Colouru Kuruvi Song Lyrics in Tamil. This Song from Dikkiloona (2021). Song Lyrics penned by Saravedi Saran. மஞ்ச கலரு குருவி பாடல் வரிகள்.


யார் அந்த ஓவியத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ் & நிவாஸ்யுவன் ஷங்கர் ராஜாகளத்தில் சந்திப்போம்

Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…

ஆண் : கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
முன்னே அவள் நின்ற போது கண்கள் கூசி போனதோ…

ஆண் : உலக அழகி இல்லை…
உலவும் நிலவும் இல்லை…
பழக தோழியா தெரியிறா…

ஆண் : அதிர சிரிப்பும் இல்லை…
அதிக சிவப்பும் இல்லை…
அழகின் ஓவியமா அசத்துறா…

ஆண் : கவிதை போல வந்து…
கனவு போல வந்து…
உனக்கு அப்படியே பொருந்துறா…
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா…

ஆண் : அவதான் உன் மாமன் பொண்ணு…
அயில மீன் கண்ணே கண்ணு…
உனக்கான ஜோடியின்னு…
நான் பார்த்து அசந்த பொண்ணு…

ஆண் : என்னன்னு நான் சொல்ல…
அழகுனா அத்தனை அழகு…
அன்றாடம் நீ மெல்ல…
ஐ லவ் யூ சொல்லி பழகு…

—BGM—

ஆண் : நான் பார்த்த தேவதைக்கு…
சிறகில்லை உண்மையில்…
அவள் போல பெண்ணை நானும் பார்த்ததில்லை அண்மையில்…

ஆண் : தரை மேலே நின்ற போதும்…
மிதக்கின்றாள் மென்மையில்…
தங்கத்தை ஊற்றி ஊற்றி வார்த்து வைத்த பொன்மயில்…

ஆண் : லட்சம் பூ பறிச்சு…
மிச்சம் தேன் தெளிச்சு…
வச்ச அழகு அவ அழகடா…

ஆண் : அச்ச பார்வையில…
உச்சம் கவிதை ஒன்னு…
அச்சில் எட்டி விடும் அடடடா…

ஆண் : கச்ச தீவுக்கொரு…
மச்சம் வச்சது போல்…
பச்சை பசுமை அவ பாரடா…
அழகடா அவளடா அசந்து போலாம்டா…

ஆண் : அவள் கண்கள் கவிதை பக்கம்…
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்…
அவள் வந்து முன்னே நின்றால்…
நிலவெல்லாம் பின்னே நிற்கும்…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—

ஆண் : கண்ணாடி சிலையை போல…
முன்னாடி சிரிச்சு போறா…
ஆத்தாடி உன் மனச…
அங்காடி ஆக்க போறா…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—


Notes : Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Pa Vijay. யார் அந்த ஓவியத்தை பாடல் வரிகள்.


ஏதும் சொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கு கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாடிக்கிலோனா

Yedhum Solladhe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏதும் சொல்லாதே… எல்லாம் என்னாலே…
என்றே நானும் இங்கு கண்டுகொண்டேனே…
யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே…
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே…

ஆண் : பெண் மேகம் எந்தன் மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே…
நீரோடை நதி பாதை விட்டு மாறிப்போனதே…
என்னை கொல்லுது என் பிழைதானே… ஹோ… பெண்ணே…

ஆண் : ஏதும் சொல்லாதே… எல்லாம் என்னாலே…
என்றே நானும் இங்கு கண்டுகொண்டேனே…
யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே…
உயிரும் ரெண்டு துண்டாய் போக கண்டேனே…

—BGM—


Notes : Yedhum Solladhe Song Lyrics in Tamil. This Song from Dikkiloona (2021). Song Lyrics penned by Ku Karthik. ஏதும் சொல்லாதே பாடல் வரிகள்.


என் காதல் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

En Kadhal Solla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…

ஆண் : உன் அழகாலே… உன் அழகாலே…
என் வெயில் காலம் அது மழை காலம்…
உன் கனவாலே… உன் கனவாலே…
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்…

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

—BGM—

ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்…
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
வயதோடும் மனதோடும் சொல்லாமலே…
சில எண்ணங்கள் வலை வீசுதே…

ஆண் : காதல் வந்தாலே கண்ணோடுதான்…
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ…
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி…
இந்த விளையாட்டை ரசித்தேனடி…

ஆண் : உன் விழியாலே… உன் விழியாலே…
என் வழி மாறும் கண் தடுமாறும்…
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்…
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்…

—BGM—

ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி…
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே…
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி…
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

ஆண் : யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்…
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது…
உன்னை கண்டாலே குதிகின்றதே…

ஆண் : என் அதிகாலை… என் அதிகாலை…
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்…
என் அந்தி மாலை என் அந்தி மாலை…
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்…

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…


Notes : En Kadhal Solla Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. என் காதல் சொல்ல பாடல் வரிகள்.