Tag Archives: ஏ. மருதகாசி

என் நாட்டமெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிபானுமதி ராமகிருஷ்ணாசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

En Aattamellaam Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…

BGM

பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…

BGM

பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…

பெண் : இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ…
அது யாருக்குமே தெரியாதே…
அது யாருக்குமே தெரியாதே…

பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…

BGM

பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே…
வந்து விழுந்தது பறவை இனமே…
வந்து விழுந்தது பறவை இனமே…

BGM

பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே…
வந்து விழுந்தது பறவை இனமே…
வந்து விழுந்தது பறவை இனமே…

பெண் : அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே…
எமன் கோட்டையை காண்பது நிஜமே…
எமன் கோட்டையை காண்பது நிஜமே…

பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே…
நான் அதில் தவறேனே…

BGM


Notes : En Aattamellaam Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. என் நாட்டமெல்லாம் பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு சிட்டே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஎஸ்.சி.கிருஷ்ணன் & ஜிக்கிசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Chinnanjiru Chitte Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே…
என் சீனா கற்கண்டே…
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே…
கிட்டே வா பொன்வண்டே…

பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா…
ஏ கோமாளி ராஜா…
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா…
நீ செய்யாதே தாஜா…

ஆண் : ஹா… சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே…
என் சீனா கற்கண்டே…
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே…
கிட்டே வா பொன்வண்டே…

BGM

பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்…
யாரை ஏய்க்கப் பாக்குற…
நீ யாரை ஏய்க்கப் பாக்குற…

BGM

பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்…
யாரை ஏய்க்கப் பாக்குற…

ஆண் : தட்டாதே என் சொல்லை தௌலத்…
உன்னை ஏய்க்கப் பாக்கல…
நான் உன்னை ஏய்க்கப் பாக்கல…

BGM

பெண் : கட்டிக் கொள்ளும் முன்னே…
நம்பமாட்டா புல்புல்லே…
நம்பமாட்டா புல்புல்லே…

ஆண் : சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேன்டி…
நீ கிட்டே வாயேன்டி…
சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தான் பாரேன்டி…
தொட்டுத்தான் பாரேன்டி…

பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா…
ஏ கோமாளி ராஜா…
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா…
நீ செய்யாதே தாஜா…

BGM

பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா…
நான் என்ன செய்வது…
நான் என்ன செய்வது…

BGM

பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா…
நான் என்ன செய்வது…

ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே…
சந்தேகம் நீ கொள்வது…
வீண் சந்தேகம் நீ கொள்வது…

BGM

ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே…
சந்தேகம் நீ கொள்வது…
வீண் சந்தேகம் நீ கொள்வது…

BGM

ஆண் : அல்லா மேலே ஆணை…
உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது…

பெண் : ஆ… கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா…
ஏ கோமாளி ராஜா…
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா…
நீ செய்யாதே தாஜா…

ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே…
என் சீனா கற்கண்டே…
ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே…
கிட்டே வா பொன்வண்டே…


Notes : Chinnanjiru Chitte Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. சின்னஞ்சிறு சிட்டே பாடல் வரிகள்.


உல்லாச உலகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிகண்டசாலாசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Ullaasa Ulagam Song Lyrics in Tamil


ஆண் : அல்லாவின் கருணையாலே…
சொல்லாமல் வந்ததே யோகம்…
உல்லாச ராஜயோகம்…
உன் வாழ்விலே உண்டாகும்…

BGM

ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா… ஓஒஒ…
செய்யடா செய்யடா செய்யடா…

BGM

ஆண் : கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து…
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து…
கூரையை பிரிச்சிக் கொட்டுமடா…

BGM

ஆண் : கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா…
கிட்டாத சுகமே இல்லையடா…
செட்டாகவே… செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே…

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

BGM

ஆண் : மீசை நரைச்சுப் போனதினாலே…
மீசை நரைச்சுப் போனதினாலே…
ஆசை நரைச்சுப் போய்விடுமா…

BGM

ஆண் : வயசு அதிகம் ஆனதினாலே…
மனசும் கிழமாய் மாறிடுமா…
காசுயிருந்தா… காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்…

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

BGM

ஆண் : பைசாவைக் கண்டா நைசாகப் பேச… ஆ…
பைசாவைக் கண்டா நைசாகப் பேச…
பலரகப் பெண்கள் வருவாங்க…

BGM

ஆண் : பக்கத்தில் வந்து…
பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து…
பாடியாடி சுகம் தருவாங்க…

ஆண் : பட்டான மேனி…
பட்டான மேனி பட்டாலே இன்பம்…
மெய்யடா மெய்யடா மெய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா… ஓஒஒ…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…

ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்…
செய்யடா செய்யடா செய்யடா…
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…


Notes : Ullaasa Ulagam Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. உல்லாச உலகம் பாடல் வரிகள்.


Masila Unmai Kathale Song Lyrics in Tamil

மாசிலா உண்மைக் காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஏ.எம்.ராஜா & பி. பானுமதிசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Masila Unmai Kathale Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே…
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…

BGM

ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே…
பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…

BGM

ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே…
பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…

பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா…
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…

ஆண் : கண்ணிலே மின்னும் காதலே…
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…

BGM

ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே…
பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…

BGM

ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே…
பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…

ஆண் & பெண் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்…
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்…
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்…
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்…

ஆண் & பெண் : மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
மாறுமோ…


Notes : Masila Unmai Kathale Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. மாசிலா உண்மைக் காதலே பாடல் வரிகள்.


கண்ணை நம்பாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்நினைத்ததை முடிப்பவன்

Kannai Nambathey Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…

ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…

BGM

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…

ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…

BGM

ஆண் : காவலரே வேஷமிட்டால்…
கள்வர்களும் வேற்றுருவில்…
கண்முன்னே தோணுவது சாத்தியமே…

BGM

ஆண் : காவலரே வேஷமிட்டால்…
கள்வர்களும் வேற்றுருவில்…
கண்முன்னே தோணுவது சாத்தியமே…

ஆண் : காத்திருந்து கள்வர்க்கு…
கை விலங்கு பூட்டி விடும்…
கண்ணுக்கு தோணாத சத்தியமே…

ஆண் : போடும் பொய் திரையை…
கிழித்து விடும் காலம்…
புரியும் அப்போது மெய்யான கோலம்…

BGM

ஆண் : போடும் பொய் திரையை…
கிழித்து விடும் காலம்…
புரியும் அப்போது மெய்யான கோலம்…

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…
உண்மை இல்லாதது…

BGM

ஆண் : ஓம் முருகா என்று சொல்லி…
உச்சரிக்கும் சாமிகளே…
ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க…

ஆண் : சீமான்கள் போர்வையிலே…
சாமான்ய மக்களையே…
ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க…

ஆண் : பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை…
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை…

ஆண் : கண்ணை நம்பாதே…

BGM

ஆண் : பொன் பொருளை கண்டவுடன்…
வந்த வழி மறந்து விட்டு…
கண்மூடி போகிறவர் போகட்டுமே…

BGM

ஆண் : பொன் பொருளை கண்டவுடன்…
வந்த வழி மறந்து விட்டு…
கண்மூடி போகிறவர் போகட்டுமே…

ஆண் : என் மனதை நான் அறிவேன்…
என் உறவை நான் மறவேன்…
எதுவான போதிலும் ஆகட்டுமே…

ஆண் : நன்றி மறவாத நல்ல மனம் போதும்…
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்…

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…

ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…

BGM


Notes : Kannai Nambathey Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by A. Maruthakasi. கண்ணை நம்பாதே பாடல் வரிகள்.


மாமா மாமா மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிடி.எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணிகே.வி. மகாதேவன்குமுதம்

Mama Mama Mama Song Lyrics in Tamil


BGM

பெண் : மாமா மாமா மாமா…
மாமா மாமா மாமா…

ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…

பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…

குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…

பெண் : தாலி கட்டுமுன்னே…
கை மேல படலாமா…
மாமா மாமா மாமா…

குழு : மாமா மாமா மாமா…

ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்…
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு…
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா…

குழு : வெட்டும் விழிப் பார்வையினால்…
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு…
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா…

ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும்…
தடை போடலாமா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…

குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…

BGM

பெண் : ஊரறிய நாடறிய பந்தலிலே…
நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…

குழு : ஊரறிய நாடறிய பந்தலிலே…
நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…

பெண் : ஒண்ணாகி…
ஆண் : ஆஹா…

பெண் : ஒண்ணாகி உறவு முறை…
கொண்டாடும் முன்னாலே…
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா…
இதை உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா…
மாமா மாமா மாமா… குழு : மாமா மாமா மாமா…

BGM

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

BGM

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

BGM

ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே…
தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…

குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே…
தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…

ஆண் : ஜாடை காட்டி…
பெண் : ஆஹா…

ஆண் : ஆசை மூட்டி…
பெண் : ஓஹோ…

ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி…
சல்லாபப் பாட்டுப் பாடி…
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா…
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…

குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…

BGM

பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு…
அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…

குழு : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு…
அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…

பெண் : வண்டாக…
ஆண் : ஆஹா…

பெண் : வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பளைங்க…
கொண்டாட்டம் போடுவதப் பார்த்ததில்லையா…
பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா…
மாமா மாமா மாமா…

குழு : மாமா மாமா மாமா…

BGM

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

BGM

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

—BGM—

ஆண் : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்…
தினமும் ஊரை ஏச்சு…
வேஷமெல்லாம் போடுறவன்…

குழு : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்…
தினமும் ஊரை ஏச்சு…
வேஷமெல்லாம் போடுறவன்…

ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே…
உத்துப் பாத்தா நீங்க இப்போ…
சொல்லுவது எல்லாமே உண்மைதான்…
பெண் : ஹா…

ஆண் : கொஞ்சும் தூர நின்னு பழகுவதும்…
நன்மை தான் நன்மை தான்…
ஆமா ஆமா ஆமா…
குழு : ஆமா ஆமா ஆமா…

பெண் : கட்டுப்பாட்ட மீறாமே…
சட்டதிட்டம் மாறமே…
காத்திருக்க வேணும்…
கொஞ்ச காலம் வரையில்…

ஆண் : ஓஹோ…

குழு : கட்டுப்பாட்ட மீறாமே…
சட்டதிட்டம் மாறமே…
காத்திருக்க வேணும்…
கொஞ்ச காலம் வரையில்…

பெண் : பிறகு கல்யாணம் ஆகிவிட்டால்…
ஏது தடை ஏது தடை…
மாமா மாமா மாமா…
ஆண் : ஆமா…

குழு : மாமா மாமா மாமா…
குழு : ஆமா ஆமா ஆமா…
ஆண் : போடு…
குழு : ஆமா ஆமா ஆமா…

BGM


Notes : Mama Mama Mama Song Lyrics in Tamil. This Song from Kumudham (1961). Song Lyrics penned by A. Maruthakasi. மாமா மாமா மாமா பாடல் வரிகள்.


சித்தாடை கட்டிகிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஎஸ்.சி.கிருஷ்ணன் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்வண்ணக்கிளி

Chithadi Kattikittu Song Lyrics in Tamil


பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

பெண் : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…

குழு : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

ஆண் : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

குழு : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

ஆண் : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…

குழு : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…

குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

BGM

பெண் : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…

BGM

குழு : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்…
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…

பெண் : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…

குழு : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…

குழு : அந்த கள்ளி அத்தானை…
கல்யாணம் பண்ணி கொண்டாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

BGM

ஆண் : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…

BGM

குழு : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…

ஆண் : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…

குழு : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…

குழு : ஆனாலும் பெண் என்றால்…
அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்…

குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

BGM

பெண் : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…

ஆண் : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…

BGM

குழு : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…

குழு : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…

பெண் : அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…

ஆண் : இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…

குழு : அதை கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…

குழு : கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…

பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
ஆண் : சிங்காரம் பண்ணிகிட்டு…
பெண் : மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
ஆண் : மயிலாக வந்தாளாம்…

பெண் : முத்தாத அரும்பெடுத்து…
ஆண் : முழ நீள சரம் தொடுத்து…
பெண் : வித்தார கள்ளி கழுத்தில்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…

பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…
பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…

BGM


Notes : Chithadi Kattikittu Song Lyrics in Tamil. This Song from Vannakili (1959). Song Lyrics penned by A. Maruthakasi. சித்தாடை கட்டிகிட்டு பாடல் வரிகள்.


அழகான பொண்ணு நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிபி. பானுமதிசுசர்லா தட்சிணாமூர்த்திஅலிபாபாவும் நாற்பது திருடர்களும்

Azhagana Ponnu Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

BGM

பெண் : ஈடில்லா காட்டு ரோஜா…
இதை நீங்க பாருங்க…

BGM

பெண் : ஈடில்லா காட்டு ரோஜா…
இதை நீங்க பாருங்க…
எவரேனும் பறிக்க வந்தா…
குணமேதான் மாறுங்க…
முள்ளேதான் குத்துங்க…

BGM

பெண் : எவரேனும் பறிக்க வந்தா…
குணமேதான் மாறுங்க…
முள்ளேதான் குத்துங்க… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : அங்கொண்ணு இளிக்குது…
ஆந்தைப் போல் முழிக்குது…

பெண் : அங்கொண்ணு இளிக்குது…
ஆந்தைப் போல் முழிக்குது…
ஆட்டத்தை ரசிக்கவில்லை…
ஆளைத்தான் ரசிக்குது…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

BGM

பெண் : இங்கொண்ணு என்னைப்பாத்து…
கண்ஜாடை பண்ணுது…

BGM

பெண் : இங்கொண்ணு என்னைப்பாத்து…
கண்ஜாடை பண்ணுது…
ஏமாளிப் பொண்ணுயின்னு…
ஏதேதோ எண்ணுது…
ஏதேதோ எண்ணுது…

BGM

பெண் : ஏமாளிப் பொண்ணுயின்னு…
ஏதேதோ எண்ணுது…
ஏதேதோ எண்ணுது… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : பெண்ஜாதிய தவிக்கவிட்டு…
பேயாட்டம் ஆடுது…

பெண் : பெண்ஜாதிய தவிக்கவிட்டு…
பேயாட்டம் ஆடுது…
பித்தாகி என்னைச் சுத்தி…
கைத்தாளம் போடுது…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…
என்கிட்ட இருப்பதெல்லம்…
தன்மானம் ஒன்னுதான்…

பெண் : அழகான பொண்ணு நான்…
அதுகேத்த கண்ணுதான்…


Notes : Azhagana Ponnu Naan Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. அழகான பொண்ணு நான் பாடல் வரிகள்.