பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே… நான் அதில் தவறேனே… என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே… நான் அதில் தவறேனே…
—BGM—
பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே… இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே… இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
—BGM—
பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே… இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே… இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே…
பெண் : இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ… அது யாருக்குமே தெரியாதே… அது யாருக்குமே தெரியாதே…
பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே… நான் அதில் தவறேனே… என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே… நான் அதில் தவறேனே…
—BGM—
பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே… வந்து விழுந்தது பறவை இனமே… வந்து விழுந்தது பறவை இனமே…
—BGM—
பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே… வந்து விழுந்தது பறவை இனமே… வந்து விழுந்தது பறவை இனமே…
பெண் : அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே… எமன் கோட்டையை காண்பது நிஜமே… எமன் கோட்டையை காண்பது நிஜமே…
பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே… நான் அதில் தவறேனே… என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலேதானே… நான் அதில் தவறேனே…
—BGM—
Notes : En Aattamellaam Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. என் நாட்டமெல்லாம்பாடல் வரிகள்.
ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே… என் சீனா கற்கண்டே… ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே… கிட்டே வா பொன்வண்டே…
பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா… ஏ கோமாளி ராஜா… கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா… நீ செய்யாதே தாஜா…
ஆண் : ஹா… சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே… என் சீனா கற்கண்டே… ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே… கிட்டே வா பொன்வண்டே…
—BGM—
பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்… யாரை ஏய்க்கப் பாக்குற… நீ யாரை ஏய்க்கப் பாக்குற…
—BGM—
பெண் : சிட்டு என்றும் பட்டு என்றும்… யாரை ஏய்க்கப் பாக்குற…
ஆண் : தட்டாதே என் சொல்லை தௌலத்… உன்னை ஏய்க்கப் பாக்கல… நான் உன்னை ஏய்க்கப் பாக்கல…
—BGM—
பெண் : கட்டிக் கொள்ளும் முன்னே… நம்பமாட்டா புல்புல்லே… நம்பமாட்டா புல்புல்லே…
ஆண் : சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேன்டி… நீ கிட்டே வாயேன்டி… சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தான் பாரேன்டி… தொட்டுத்தான் பாரேன்டி…
பெண் : கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா… ஏ கோமாளி ராஜா… கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா… நீ செய்யாதே தாஜா…
—BGM—
பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா… நான் என்ன செய்வது… நான் என்ன செய்வது…
—BGM—
பெண் : நம்பச் செய்து ஓடிப் போனா… நான் என்ன செய்வது…
ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே… சந்தேகம் நீ கொள்வது… வீண் சந்தேகம் நீ கொள்வது…
—BGM—
ஆண் : நல்லா இல்லே எந்தன் மேலே… சந்தேகம் நீ கொள்வது… வீண் சந்தேகம் நீ கொள்வது…
—BGM—
ஆண் : அல்லா மேலே ஆணை… உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது…
பெண் : ஆ… கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா… ஏ கோமாளி ராஜா… கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா… நீ செய்யாதே தாஜா…
ஆண் : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே… என் சீனா கற்கண்டே… ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே வா பொன் வண்டே… கிட்டே வா பொன்வண்டே…
Notes : Chinnanjiru Chitte Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. சின்னஞ்சிறு சிட்டேபாடல் வரிகள்.
ஆண் : வயசு அதிகம் ஆனதினாலே… மனசும் கிழமாய் மாறிடுமா… காசுயிருந்தா… காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்…
ஆண் : செய்யடா செய்யடா செய்யடா… நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…
—BGM—
ஆண் : பைசாவைக் கண்டா நைசாகப் பேச… ஆ… பைசாவைக் கண்டா நைசாகப் பேச… பலரகப் பெண்கள் வருவாங்க…
—BGM—
ஆண் : பக்கத்தில் வந்து… பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து… பாடியாடி சுகம் தருவாங்க…
ஆண் : பட்டான மேனி… பட்டான மேனி பட்டாலே இன்பம்… மெய்யடா மெய்யடா மெய்யடா… நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா… ஓஒஒ… செய்யடா செய்யடா செய்யடா… நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…
ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம்… செய்யடா செய்யடா செய்யடா… நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா…
Notes : Ullaasa Ulagam Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. உல்லாச உலகம்பாடல் வரிகள்.
ஆண் : மாசிலா உண்மைக் காதலே… மாறுமோ செல்வம் வந்த போதிலே… மாசிலா உண்மைக் காதலே… மாறுமோ செல்வம் வந்த போதிலே…
பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா… பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா… பேசும் வார்த்தை உண்மைதானா… பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா…
ஆண் : கண்ணிலே மின்னும் காதலே… கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…
—BGM—
ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே… பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…
—BGM—
ஆண் : நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே… பெண் : நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…
பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா… பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா… மாசிலா உண்மைக் காதலே… மாறுமோ செல்வம் வந்த போதிலே…
ஆண் : கண்ணிலே மின்னும் காதலே… கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே…
—BGM—
ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே… பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…
—BGM—
ஆண் : உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே… பெண் : இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே…
ஆண் & பெண் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்… இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்… அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்… இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்…
ஆண் & பெண் : மாசிலா உண்மைக் காதலே… மாறுமோ செல்வம் வந்த போதிலே… மாசிலா உண்மைக் காதலே… மாறுமோ செல்வம் வந்த போதிலே… மாறுமோ…
Notes : Masila Unmai Kathale Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. மாசிலா உண்மைக் காதலேபாடல் வரிகள்.
ஆண் : கண்ணை நம்பாதே… உன்னை ஏமாற்றும்… உன்னை ஏமாற்றும்… நீ காணும் தோற்றம்… உண்மை இல்லாதது…
ஆண் : அறிவை நீ நம்பு… உள்ளம் தெளிவாகும்… அடையாளம் காட்டும்… பொய்யே சொல்லாதது…
—BGM—
ஆண் : கண்ணை நம்பாதே… உன்னை ஏமாற்றும்… நீ காணும் தோற்றம்… உண்மை இல்லாதது…
ஆண் : அறிவை நீ நம்பு… உள்ளம் தெளிவாகும்… அடையாளம் காட்டும்… பொய்யே சொல்லாதது…
—BGM—
ஆண் : காவலரே வேஷமிட்டால்… கள்வர்களும் வேற்றுருவில்… கண்முன்னே தோணுவது சாத்தியமே…
—BGM—
ஆண் : காவலரே வேஷமிட்டால்… கள்வர்களும் வேற்றுருவில்… கண்முன்னே தோணுவது சாத்தியமே…
ஆண் : காத்திருந்து கள்வர்க்கு… கை விலங்கு பூட்டி விடும்… கண்ணுக்கு தோணாத சத்தியமே…
ஆண் : போடும் பொய் திரையை… கிழித்து விடும் காலம்… புரியும் அப்போது மெய்யான கோலம்…
—BGM—
ஆண் : போடும் பொய் திரையை… கிழித்து விடும் காலம்… புரியும் அப்போது மெய்யான கோலம்…
ஆண் : கண்ணை நம்பாதே… உன்னை ஏமாற்றும்… நீ காணும் தோற்றம்… உண்மை இல்லாதது… உண்மை இல்லாதது…
—BGM—
ஆண் : ஓம் முருகா என்று சொல்லி… உச்சரிக்கும் சாமிகளே… ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க…
ஆண் : சீமான்கள் போர்வையிலே… சாமான்ய மக்களையே… ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க…
ஆண் : பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை… உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை…
ஆண் : கண்ணை நம்பாதே…
—BGM—
ஆண் : பொன் பொருளை கண்டவுடன்… வந்த வழி மறந்து விட்டு… கண்மூடி போகிறவர் போகட்டுமே…
—BGM—
ஆண் : பொன் பொருளை கண்டவுடன்… வந்த வழி மறந்து விட்டு… கண்மூடி போகிறவர் போகட்டுமே…
ஆண் : என் மனதை நான் அறிவேன்… என் உறவை நான் மறவேன்… எதுவான போதிலும் ஆகட்டுமே…
ஆண் : நன்றி மறவாத நல்ல மனம் போதும்… என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்…
ஆண் : கண்ணை நம்பாதே… உன்னை ஏமாற்றும்… உன்னை ஏமாற்றும்… நீ காணும் தோற்றம்… உண்மை இல்லாதது…
ஆண் : அறிவை நீ நம்பு… உள்ளம் தெளிவாகும்… அடையாளம் காட்டும்… பொய்யே சொல்லாதது…
—BGM—
Notes : Kannai Nambathey Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by A. Maruthakasi. கண்ணை நம்பாதேபாடல் வரிகள்.
ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும்… தடை போடலாமா… ஏம்மா ஏம்மா ஏம்மா…
குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…
—BGM—
பெண் : ஊரறிய நாடறிய பந்தலிலே… நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…
குழு : ஊரறிய நாடறிய பந்தலிலே… நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…
பெண் : ஒண்ணாகி… ஆண் : ஆஹா…
பெண் : ஒண்ணாகி உறவு முறை… கொண்டாடும் முன்னாலே… ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா… இதை உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா… மாமா மாமா மாமா… குழு : மாமா மாமா மாமா…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே… தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…
குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே… தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…
ஆண் : ஜாடை காட்டி… பெண் : ஆஹா…
ஆண் : ஆசை மூட்டி… பெண் : ஓஹோ…
ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி… சல்லாபப் பாட்டுப் பாடி… நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா… உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா… ஏம்மா ஏம்மா ஏம்மா…
குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…
—BGM—
பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு… அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…
குழு : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு… அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…
பெண் : வண்டாக… ஆண் : ஆஹா…
பெண் : வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பளைங்க… கொண்டாட்டம் போடுவதப் பார்த்ததில்லையா… பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா… மாமா மாமா மாமா…
குழு : மாமா மாமா மாமா…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
ஆண் : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்… தினமும் ஊரை ஏச்சு… வேஷமெல்லாம் போடுறவன்…
குழு : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்… தினமும் ஊரை ஏச்சு… வேஷமெல்லாம் போடுறவன்…
ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே… உத்துப் பாத்தா நீங்க இப்போ… சொல்லுவது எல்லாமே உண்மைதான்… பெண் : ஹா…
ஆண் : கொஞ்சும் தூர நின்னு பழகுவதும்… நன்மை தான் நன்மை தான்… ஆமா ஆமா ஆமா… குழு : ஆமா ஆமா ஆமா…
பெண் : கட்டுப்பாட்ட மீறாமே… சட்டதிட்டம் மாறமே… காத்திருக்க வேணும்… கொஞ்ச காலம் வரையில்…
ஆண் : ஓஹோ…
குழு : கட்டுப்பாட்ட மீறாமே… சட்டதிட்டம் மாறமே… காத்திருக்க வேணும்… கொஞ்ச காலம் வரையில்…
பெண் : பிறகு கல்யாணம் ஆகிவிட்டால்… ஏது தடை ஏது தடை… மாமா மாமா மாமா… ஆண் : ஆமா…
குழு : மாமா மாமா மாமா… குழு : ஆமா ஆமா ஆமா… ஆண் : போடு… குழு : ஆமா ஆமா ஆமா…
—BGM—
Notes : Mama Mama Mama Song Lyrics in Tamil. This Song from Kumudham (1961). Song Lyrics penned by A. Maruthakasi. மாமா மாமாமாமா பாடல் வரிகள்.
ஆண் : அஞ்சாத சிங்கம் போலே… வீரம் உள்ளவனாம்… யானை வந்தாலும் பந்தாடி… ஜெய்க்க வல்லவனாம்…
—BGM—
குழு : அஞ்சாத சிங்கம் போலே… வீரம் உள்ளவனாம்… யானை வந்தாலும் பந்தாடி… ஜெய்க்க வல்லவனாம்…
ஆண் : அந்த முண்டாசுக்காரன்… கொஞ்சம் முன்கோபியாம்…
குழு : அந்த முண்டாசுக்காரன்… கொஞ்சம் முன்கோபியாம்…
குழு : ஆனாலும் பெண் என்றால்… அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்…
குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து… முழ நீள சரம் தொடுத்து… வித்தார கள்ளி கழுத்தில்… முத்தாரம் போட்டானாம்…
—BGM—
பெண் : முன்னூறு நாளை மட்டும்… எண்ணிக்கொள்ளுங்க…
ஆண் : அதன் பின்னாலே என்ன ஆகும்… நீங்க சொல்லுங்க…
—BGM—
குழு : முன்னூறு நாளை மட்டும்… எண்ணிக்கொள்ளுங்க…
குழு : அதன் பின்னாலே என்ன ஆகும்… நீங்க சொல்லுங்க…
பெண் : அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து… மூணாகும்ங்க…
ஆண் : இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து… மூணாகும்ங்க…
குழு : அதை கண்டு சந்தோசம்… கொண்டாடி பாட போறாங்க…
குழு : கண்டு சந்தோசம்… கொண்டாடி பாட போறாங்க…
பெண் : சித்தாடை கட்டிகிட்டு… ஆண் : சிங்காரம் பண்ணிகிட்டு… பெண் : மத்தாப்பு சுந்தரி ஒருத்தி… ஆண் : மயிலாக வந்தாளாம்…
பெண் : முத்தாத அரும்பெடுத்து… ஆண் : முழ நீள சரம் தொடுத்து… பெண் : வித்தார கள்ளி கழுத்தில்… ஆண் : முத்தாரம் போட்டானாம்…
பெண் : மயிலாக வந்தாளாம்… ஆண் : முத்தாரம் போட்டானாம்… பெண் : மயிலாக வந்தாளாம்… ஆண் : முத்தாரம் போட்டானாம்…
—BGM—
Notes : Chithadi Kattikittu Song Lyrics in Tamil. This Song from Vannakili (1959). Song Lyrics penned by A. Maruthakasi. சித்தாடை கட்டிகிட்டுபாடல் வரிகள்.
பெண் : அழகான பொண்ணு நான்… அதுகேத்த கண்ணுதான்… என்கிட்ட இருப்பதெல்லம்… தன்மானம் ஒன்னுதான்…
பெண் : அழகான பொண்ணு நான்… அதுகேத்த கண்ணுதான்…
Notes : Azhagana Ponnu Naan Song Lyrics in Tamil. This Song from Alibabavum 40 Thirudargalum (1956). Song Lyrics penned by A. Maruthakasi. அழகான பொண்ணு நான்பாடல் வரிகள்.