சித்தாடை கட்டிகிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிஎஸ்.சி.கிருஷ்ணன் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்வண்ணக்கிளி

Chithadi Kattikittu Song Lyrics in Tamil


பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

பெண் : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…

குழு : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

ஆண் : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

குழு : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

ஆண் : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…

குழு : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…

குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

BGM

பெண் : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…

BGM

குழு : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்…
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…

பெண் : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…

குழு : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…

குழு : அந்த கள்ளி அத்தானை…
கல்யாணம் பண்ணி கொண்டாளாம்…

குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…

BGM

ஆண் : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…

BGM

குழு : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…

ஆண் : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…

குழு : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…

குழு : ஆனாலும் பெண் என்றால்…
அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்…

குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…

BGM

பெண் : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…

ஆண் : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…

BGM

குழு : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…

குழு : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…

பெண் : அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…

ஆண் : இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…

குழு : அதை கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…

குழு : கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…

பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
ஆண் : சிங்காரம் பண்ணிகிட்டு…
பெண் : மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
ஆண் : மயிலாக வந்தாளாம்…

பெண் : முத்தாத அரும்பெடுத்து…
ஆண் : முழ நீள சரம் தொடுத்து…
பெண் : வித்தார கள்ளி கழுத்தில்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…

பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…
பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…

BGM


Notes : Chithadi Kattikittu Song Lyrics in Tamil. This Song from Vannakili (1959). Song Lyrics penned by A. Maruthakasi. சித்தாடை கட்டிகிட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top