பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ. மருதகாசி | எஸ்.சி.கிருஷ்ணன் & பி. சுசீலா | கே.வி. மகாதேவன் | வண்ணக்கிளி |
Chithadi Kattikittu Song Lyrics in Tamil
பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…
குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…
பெண் : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…
குழு : அத்தானை பாத்து…
அசந்து போய் நின்னாளாம்…
குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…
குழு : முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…
ஆண் : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…
குழு : வெத்தாக பேசி…
இளம் மனச தொட்டானாம்…
குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…
—BGM—
பெண் : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…
—BGM—
குழு : குண்டூசி போல ரெண்டு…
கண்ணும் உள்ளவளாம்…
முகம் கோணாமல் ஆசை அன்பா…
பேசும் நல்லவளாம்…
பெண் : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…
குழு : அந்த கண்டாங்கி சேலைக்காரி…
கைக்காரியாம்…
குழு : அந்த கள்ளி அத்தானை…
கல்யாணம் பண்ணி கொண்டாளாம்…
குழு : சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்…
—BGM—
ஆண் : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…
—BGM—
குழு : அஞ்சாத சிங்கம் போலே…
வீரம் உள்ளவனாம்…
யானை வந்தாலும் பந்தாடி…
ஜெய்க்க வல்லவனாம்…
ஆண் : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…
குழு : அந்த முண்டாசுக்காரன்…
கொஞ்சம் முன்கோபியாம்…
குழு : ஆனாலும் பெண் என்றால்…
அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்…
குழு : ஹான்… முத்தாத அரும்பெடுத்து…
முழ நீள சரம் தொடுத்து…
வித்தார கள்ளி கழுத்தில்…
முத்தாரம் போட்டானாம்…
—BGM—
பெண் : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…
ஆண் : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…
—BGM—
குழு : முன்னூறு நாளை மட்டும்…
எண்ணிக்கொள்ளுங்க…
குழு : அதன் பின்னாலே என்ன ஆகும்…
நீங்க சொல்லுங்க…
பெண் : அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…
ஆண் : இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து…
மூணாகும்ங்க…
குழு : அதை கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…
குழு : கண்டு சந்தோசம்…
கொண்டாடி பாட போறாங்க…
பெண் : சித்தாடை கட்டிகிட்டு…
ஆண் : சிங்காரம் பண்ணிகிட்டு…
பெண் : மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
ஆண் : மயிலாக வந்தாளாம்…
பெண் : முத்தாத அரும்பெடுத்து…
ஆண் : முழ நீள சரம் தொடுத்து…
பெண் : வித்தார கள்ளி கழுத்தில்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…
பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…
பெண் : மயிலாக வந்தாளாம்…
ஆண் : முத்தாரம் போட்டானாம்…
—BGM—
Notes : Chithadi Kattikittu Song Lyrics in Tamil. This Song from Vannakili (1959). Song Lyrics penned by A. Maruthakasi. சித்தாடை கட்டிகிட்டு பாடல் வரிகள்.