பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ. மருதகாசி | டி.எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணி | கே.வி. மகாதேவன் | குமுதம் |
Mama Mama Mama Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாமா மாமா மாமா…
மாமா மாமா மாமா…
ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…
பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…
குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…
பெண் : தாலி கட்டுமுன்னே…
கை மேல படலாமா…
மாமா மாமா மாமா…
குழு : மாமா மாமா மாமா…
ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்…
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு…
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா…
குழு : வெட்டும் விழிப் பார்வையினால்…
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு…
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா…
ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும்…
தடை போடலாமா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…
குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…
—BGM—
பெண் : ஊரறிய நாடறிய பந்தலிலே…
நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…
குழு : ஊரறிய நாடறிய பந்தலிலே…
நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…
பெண் : ஒண்ணாகி…
ஆண் : ஆஹா…
பெண் : ஒண்ணாகி உறவு முறை…
கொண்டாடும் முன்னாலே…
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா…
இதை உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா…
மாமா மாமா மாமா… குழு : மாமா மாமா மாமா…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே…
தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…
குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே…
தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…
ஆண் : ஜாடை காட்டி…
பெண் : ஆஹா…
ஆண் : ஆசை மூட்டி…
பெண் : ஓஹோ…
ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி…
சல்லாபப் பாட்டுப் பாடி…
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா…
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…
குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…
—BGM—
பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு…
அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…
குழு : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு…
அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…
பெண் : வண்டாக…
ஆண் : ஆஹா…
பெண் : வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பளைங்க…
கொண்டாட்டம் போடுவதப் பார்த்ததில்லையா…
பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா…
மாமா மாமா மாமா…
குழு : மாமா மாமா மாமா…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
குழு : ஹோய் ஹோய் ஹோய்…
—BGM—
ஆண் : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்…
தினமும் ஊரை ஏச்சு…
வேஷமெல்லாம் போடுறவன்…
குழு : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்…
தினமும் ஊரை ஏச்சு…
வேஷமெல்லாம் போடுறவன்…
ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே…
உத்துப் பாத்தா நீங்க இப்போ…
சொல்லுவது எல்லாமே உண்மைதான்…
பெண் : ஹா…
ஆண் : கொஞ்சும் தூர நின்னு பழகுவதும்…
நன்மை தான் நன்மை தான்…
ஆமா ஆமா ஆமா…
குழு : ஆமா ஆமா ஆமா…
பெண் : கட்டுப்பாட்ட மீறாமே…
சட்டதிட்டம் மாறமே…
காத்திருக்க வேணும்…
கொஞ்ச காலம் வரையில்…
ஆண் : ஓஹோ…
குழு : கட்டுப்பாட்ட மீறாமே…
சட்டதிட்டம் மாறமே…
காத்திருக்க வேணும்…
கொஞ்ச காலம் வரையில்…
பெண் : பிறகு கல்யாணம் ஆகிவிட்டால்…
ஏது தடை ஏது தடை…
மாமா மாமா மாமா…
ஆண் : ஆமா…
குழு : மாமா மாமா மாமா…
குழு : ஆமா ஆமா ஆமா…
ஆண் : போடு…
குழு : ஆமா ஆமா ஆமா…
—BGM—
Notes : Mama Mama Mama Song Lyrics in Tamil. This Song from Kumudham (1961). Song Lyrics penned by A. Maruthakasi. மாமா மாமா மாமா பாடல் வரிகள்.