பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ. மருதகாசி | டி.எம்.சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் | நினைத்ததை முடிப்பவன் |
Kannai Nambathey Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…
ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…
—BGM—
ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…
ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…
—BGM—
ஆண் : காவலரே வேஷமிட்டால்…
கள்வர்களும் வேற்றுருவில்…
கண்முன்னே தோணுவது சாத்தியமே…
—BGM—
ஆண் : காவலரே வேஷமிட்டால்…
கள்வர்களும் வேற்றுருவில்…
கண்முன்னே தோணுவது சாத்தியமே…
ஆண் : காத்திருந்து கள்வர்க்கு…
கை விலங்கு பூட்டி விடும்…
கண்ணுக்கு தோணாத சத்தியமே…
ஆண் : போடும் பொய் திரையை…
கிழித்து விடும் காலம்…
புரியும் அப்போது மெய்யான கோலம்…
—BGM—
ஆண் : போடும் பொய் திரையை…
கிழித்து விடும் காலம்…
புரியும் அப்போது மெய்யான கோலம்…
ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…
உண்மை இல்லாதது…
—BGM—
ஆண் : ஓம் முருகா என்று சொல்லி…
உச்சரிக்கும் சாமிகளே…
ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க…
ஆண் : சீமான்கள் போர்வையிலே…
சாமான்ய மக்களையே…
ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க…
ஆண் : பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை…
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை…
ஆண் : கண்ணை நம்பாதே…
—BGM—
ஆண் : பொன் பொருளை கண்டவுடன்…
வந்த வழி மறந்து விட்டு…
கண்மூடி போகிறவர் போகட்டுமே…
—BGM—
ஆண் : பொன் பொருளை கண்டவுடன்…
வந்த வழி மறந்து விட்டு…
கண்மூடி போகிறவர் போகட்டுமே…
ஆண் : என் மனதை நான் அறிவேன்…
என் உறவை நான் மறவேன்…
எதுவான போதிலும் ஆகட்டுமே…
ஆண் : நன்றி மறவாத நல்ல மனம் போதும்…
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்…
ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…
ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…
—BGM—
Notes : Kannai Nambathey Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by A. Maruthakasi. கண்ணை நம்பாதே பாடல் வரிகள்.