ராத்திரியில் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன், மனோ & மின்மினிஇளையராஜாஅரண்மனை கிளி

Rathiriyil Paadum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…

பெண் : கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

BGM

ஆண் : கள்ளழகர் வைகை ஆற்றில்…
கால வைக்கும் நல்ல நாளில்…
எட்டு பட்டி ஊரு சனம்…
கட்டுச் சோறு கட்டி வரும்…

பெண் : சொக்கனுக்கு மீனாள் போலே…
தக்க துணை வாச்சதாலே…
சின்னஞ்சிறு ஜோடி எல்லாம்…
சித்திரையில் இங்கு வரும்…

ஆண் : உன் மேலதான் ஆச வச்சேன்…
வேறெதுக்கு மீசை வச்சேன்…

பெண் : என் புருஷன் நீயாகத்தான்…
போன சென்மம் பூச வச்சேன்…

ஆண் : உன்னோடுதான் நானும் கூட…
என்னோடு தான் நீ கூட…
போடு முந்தானை… ஹே…

பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…

பெண் : கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஆ… போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…

BGM

ஆண் : எல்லோருக்கும் எழுதி வச்சான்…
எங்களைத்தான் கட்டி வச்சான்…
பொன்ஜாதியோ பூன்தோரணம்…
நானோ ரொம்ப சாதாரணம்…

ஆண் : வெண்ணிலவ மேகம் போல…
என்ன அவ மூடி வைப்பா…
மத்தவங்க கண்ணுபட்டா…
தத்தளிப்பா தான் தவிப்பா…

ஆண் : ஊருக்கவ ராணி போல…
எனக்கு அவ அம்மன் போல…
சொல்ல போனா என்ன போல…
பாக்யவான் யாரும் இல்லை…

ஆண் : தாரம் கூட தாயைப் போல…
ஈடு சொல்ல யாரும் இல்லை…
எல்லாம் என் யோகம்…

ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…

ஆண் : போடு நிலாச் சோறு…
என் பொன்னுமணி தேரு…
கூட வந்து சேரு…
நான் சொட்டும் கனிச் சாறு…

ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு…
கேட்க கேட்க ஆசையாச்சு…
ஆத்தங்கரை ஈரக்காத்து…
மேலே பட்டு மோகம் ஆச்சு…


Notes : Rathiriyil Paadum Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. ராத்திரியில் பாடும் பாடல் வரிகள்.