பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுனந்தா | தேவா | மகாபிரபு |
Sollavaa Sollavaa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…
பெண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
—BGM—
ஆண் : தென்காசிச் சாரல் கூட நீயில்லாமல்…
வைகாசி வெய்யில் போல வாட்டுதே…
பெண் : பன்னீரைத் தொட்டால் கூட நீயில்லாமல்…
வென்னீரைப் போல வெப்பம் காட்டுதே…
ஆண் : மை அளந்த கண்ணும்…
என் கையளந்த பெண்ணும்…
மின்சாரம் பாய்ச்சுமா…
பெண் : கள்ளிருக்கும் கிண்ணம்…
என்னுள்ளிருக்கும் வண்ணம்…
உன் பார்வை பார்க்குமா…
ஆண் : பக்கம் வா பக்கம் வா…
பள்ளிப் பாடம் சொல்ல வா…
பெண் : அப்பப்பா தப்பப்பா இது முதல் இரவா…
ஆண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…
பெண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
—BGM—
பெண் : உன் பேரைச் சொல்லிச் சொல்லி கூந்தல் மீது…
அன்றாடம் முல்லைப் பூவைச் சூடுவேன்…
ஆண் : சிங்காரப் பெண்ணை என்றும் நீங்கிடாது…
சிற்றாடைப் போலே வந்து கூடுவேன்…
பெண் : செம்பருத்தி ஒன்று உன் சிந்தைக்குள்ளே நின்று…
சல்லாபம் தேடுதோ…
ஆண் : சங்கமங்கள் கண்டு உன் அங்கங்களில் இன்று…
செந்தேனும் ஓடுதோ…
பெண் : இன்பங்கள் என்னென்று சொல்ல வார்த்தை இல்லையே…
ஆண் : இன்றைக்கும் என்றைக்கும் இனி பிரிவில்லையே…
பெண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…
ஆண் : சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
Notes : Sollavaa Sollavaa Song Lyrics in Tamil. This Song from Mahaprabhu (1996). Song Lyrics penned by Vaali. சொல்லவா சொல்லவா பாடல் வரிகள்.