oru-paadhi-kadhavu-song-lyrics

ஒரு பாதி கதவு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil


ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…

ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…

பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…

பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…

பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…


Notes : Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பாதி கதவு பாடல் வரிகள்.