பெண்ணே ஓ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & அல் ருஃபியன்ஜி.வி. பிரகாஷ் குமார்நான் சிகப்பு மனிதன்

Penne O Penne Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்…
உனக்காக வெயிலை கூட மழையாக்குவேன்…
உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே…
உனக்கென்று யார் சொல்வது…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே…
பெண்ணே ஓ பெண்ணே…
நீ கேட்டா போதும்…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே…
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்…

BGM

பெண் : நீ பிள்ளை போலே தூங்க…
எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்…
அன்பால் தொல்லை செய்து…
உன்னை அடிமை செய்வேன்…

பெண் : நீ காட்டில் பூத்த பூ தான்…
வேலி போட்டு உன்னை காவல் செய்வேன்…
காற்றும் உன்னை தொட்டால்…
உடனே கைது செய்வேன்…

பெண் : உன்மேலே பைத்தியம் ஆனேன்…
தலைகீழாய் மாறி போனேன்…
உன் பார்வை தீண்டும் போது…
கண்ணாடி போலே உடைந்தேனே…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே…
பெண்ணே ஓ பெண்ணே…
நீ கேட்டா போதும்…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே…
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்…

BGM

ஆண் : அடி ஏதோ புரியா ஆசை…
நெஞ்சில் ஓரம் வந்து பூக்கள் நீட்ட…
என்னை எனக்கே காதல்…
அடடா புதிதாய் காட்ட…

ஆண் : இவள் யாரோ யாரோ என்று…
காதின் ஓரம் ஒரு கேள்வி வாட்ட…
எந்தன் பாதி என்றே நானும் உன்னை காட்ட…

ஆண் : எங்கே நீ இருந்தாய் பெண்ணே…
எப்படி எனக்குள் வந்தாய்…
உன்னாலே உறக்கம் கெட்டு…
தன்னாலே நானும் எழுந்தேனே…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே…
பெண்ணே ஓ பெண்ணே…
நீ கேட்டா போதும்…

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே…
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே…
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்…

பெண் : உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்…
உனக்காக வேள்வி கொண்ட மழையாக்குவேன்…
உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே…
உனக்கென்று யார் சொல்வது…

BGM


Notes : Penne O Penne Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. பெண்ணே ஓ பெண்ணே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top