பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஜி.வி. பிரகாஷ் குமார் & சைந்தவி | ஜி.வி. பிரகாஷ் குமார் | நான் சிகப்பு மனிதன் |
Idhayam Unnai Thedudhe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…
ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்னே கோயில் ஆனதே…
ஆண் : இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…
ஆண் : நினைவும் உன்னை தேடுதே…
நிழலும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…
ஆண் : அடி பெண்ணே இறந்தாலும்…
உன் மடியில் கண் மூடத்தான்…
ஓடி வந்து உயிர் விடுவேன்…
ஆண் : ஒரு பார்வை நீ பார்த்தால்…
அது போதும் அப்போ மீண்டும்…
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்…
ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…
ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே…
—BGM—
ஆண் : பெண்ணே உன் நெஞ்சுக்குள்…
சோகங்கள் கூடாது… ஓகோ… ஓ…
ஆனந்த கண்ணில் அழுதாலும் தாங்காதே… ஓஓ…
பெண் : இறைவா ஒரு வரம் கொடு… ஓ…
இவன் எந்தன் மகனாகவே…
தினந்தோறும் அழவிடு… ஓ…
தாயாகி தாலாட்டுவேன்…
ஆண் : எங்கே நீ சென்றாலும்…
என் கால்கள் எப்போதும்…
உன் பின்னேதான் நடக்கும்… ஓ…
ஆண் : ஆகாயம் சாய்ந்தாலும்…
பூலோகம் ஓய்ந்தாலும்…
நம் காதல்தான் இருக்கும்…
ஆண் : வெண் பஞ்சு மேகத்தில்…
என் நெஞ்சை நீ வைத்தாய்…
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி…
ஆண் : கண்ணுக்குள் வீடு ஒன்று…
கட்டித்தான் வைத்தேனே…
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே…
ஆண் : இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…
ஆண் : அடி பெண்ணே இறந்தாலும்…
உன் மடியில் கண் மூடத்தான்…
ஓடி வந்து உயிர் விடுவேன்…
ஆண் : ஒரு பார்வை நீ பார்த்தால்…
அது போதும் அப்போ மீண்டும்…
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்…
Notes : Idhayam Unnai Thedudhe Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. இதயம் உன்னை தேடுதே பாடல் வரிகள்.