Category Archives: அச்சம் என்பது மடமையடா

Idhu Naal Song Lyrics in Tamil

இது நாள் வரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆதித்யா ராவ் & ஜொனிடா காந்திஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Idhu Naal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது நாள் வரையில் உலகில் எதுவும்…
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே…
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்…
ஒரு பாடல் வரைந்தாலே…

ஆண் : இங்கு எந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து…
பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே…

ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை…
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…
இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை…
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…

ஆண் : இதுவரை காற்றிலே தூய்மை இல்லை என்றேனே…
அனைத்தையும் பொய் ஆக்கினாள்…

BGM

பெண் : ஓ… மெத்தை மேலே வான் மேகம் ஒன்று…
உட்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால்…
அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ…

ஆண் : என் வாழ்க்கை முன் போல் இல்லை…
அதனால் என்ன பரவா இல்லை…
இனிமேல் நீ என்ன செய்வாயோ…

ஆண் : இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை…
என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்…

BGM

ஆண் : அழகில்லை என்றேன்…
அதை அவள் பொய் ஆக்கினாள்…

BGM

ஆண் : இசை சுகம் இல்லை என்றேன்…
அதை அவள் பொய் ஆக்கினாள்…
மொழியில் சுவை இல்லை என்றேன்…
அதை அவள் பொய் ஆக்கினாள்…

ஆண் : அவள் அவள் அவள் அவள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்…
அவள் அவள் அவள் அவள்
அவள் அவள் பொய் ஆக்கினாள்…

ஆண் : அவள் அவள் பொய் ஆக்கினாள்…


Notes : Idhu Naal Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Madhan Karky. இது நாள் வரையில் பாடல் வரிகள்


சோக்காளி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், விக்னேஷ் சிவன், ஸ்ரீ ரஸ்கோல்ஆதித்யா ராவ், ஏ.டி.கே & ஸ்ரீ ராஸ்கோல்ஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Showkali Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் ஏய் ஏடிகே ஸ்ரீ ராஸ்கல்…
கெட் இட் டவுன் வித் ஏ.ஆர். ரஹ்மான்…
கெட் இட் டவுன் கெட் இட் டவுன்…
கெட் இட் டவுன் நௌ…

BGM

ஆண் : சோக்காளி வாடா வாடா…
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா…
சோக்காளி வேண்டாம் வேண்டாம்…
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்லதான்டா…

ஆண் : சோக்காளி வாடா வாடா…
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா…
சோக்காளி வேண்டாம் வேண்டாம்…
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்லதான்டா…

ஆண் : என்ன மச்சி…
சோக்கா கீது மச்சி…
சொக்காய மாட்டிக்கிட்டு…
சிட்ட கடத்தி வண்டில வச்சி…

{ ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி…
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…

ஆண் : இடது இடது வலது வலது…
திருப்பி திருப்பி வெட்டி…
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்…
வெட்டி வெட்டி மச்சி…
சோக்காளி நான்டி… } * (2)

BGM

ஆண் : நம்ம சிறகுகளே…
இந்த பைக்குங்க தானே…
இந்த உலகினிலே முதல் தேவையே…

ஆண் : நான் முறுக்க முறுக்க…
என்ன பறக்க பறக்க விடுவாயோ…
கதை பிளக்க பிளக்க…
என் கவலை மறக்கவிடுவாயோ…

ஆண் : கைய புடிக்க கட்டி அணைக்க…
எனக்கென்ன ஒரு பைக்கே போதும்…
என்ன மறக்க தூரம் கடக்க…
என்னோட பைக்கே போதும்…

ஆண் : போதுமே போதுமே…

ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா…
ஏலே ஏலே ஏலே…

ஆண் : என்னடா ஆச்சு மச்சி…
வண்டிய பாரு மச்சி…
பொண்ணுங்க உங்க கட்சி…
நாங்க இப்ப ரெண்டுக்கட்சி…

BGM

ஆண் : என்ன நான் சொல்வது புாிவது தெரிவது…
உனக்கு முடிவு அல்ல…
வண்டிய ஓட்டும் போது…
கனவுல தெரிவது உனக்கென்ன…

ஆண் : ஜாதகம் பாக்கும் போது வண்டி உந்தன் கவசம்…
பின்னாடி போகாதடா உனக்குத்தான் அவஸ்தம்…

{ ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி…
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…

ஆண் : இடது இடது வலது வலது…
திருப்பி திருப்பி வெட்டி…
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்…
வெட்டி வெட்டி மச்சி…
சோக்காளி நான்டி… } * (2)

BGM

ஆண் : நம்ம சிறகுகளே…
இந்த பிரீஸர் தானே… ஏ ஏ ஏலே…

ஆண் : ஷோக்கா கீது…
நாங்க சோக்காளி காட்டும் சேட்டை…
பெண்களின் மனதில் நிரந்தரமாகி…
இல்லம் கட்டுவது எங்கள் வித்தை…

ஆண் : சோக்காளி கூட சேர்ந்தா…
பெண்களுடன் பார்ட்டி யோ…
இல்லாட்டி கொக்கரக்கோ…
கோழி போல தானுங்கோ…

ஆண் : கிளப் லைக் எ கிங்…
லைக் எ வாக் வித் தி குயின்…
சாக்குனு புடிச்சா கட்டி புடி…

ஆண் : என்னமா பொன்னமா கண்ணம்மா சொல்லுற…
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற…
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…

BGM

ஆண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
சிக்ஸ் வி டோன்ட் கேர்…
பைக் இஸ் தி கேம்…
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
சிக்ஸ் வி டோன்ட் கேர்…
பைக் இஸ் தி கேம்…

ஆண் : நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பாா்க்க…
விழிகள் அல்ல…
உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு…
உறக்கம் இல்ல…

ஆண் : அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல…
பாா்த்த ராசா விழுந்திடுவான் லேசா…

ஆண் : இன்றின் புதுமை இளமை இனி புதுமை…
இருந்தும் உன் தந்திரம் மந்திரம் விளையாடும்…
உரையாடும் உந்தன் அழகை கண்டு…

ஆண் : பலமுறை ஒரு முறை திரும்படி…
உன் முன்னாடி தள்ளாடி நின்று…

ஆண் : நான் சிக்கி திக்கி முக்கி…
உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு…
நான் சிக்கி திக்கி விக்கிறேன்…
விக்கெட்டில் நான் கடந்து…

ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி…
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…

ஆண் : இடது இடது வலது வலது…
திருப்பி திருப்பி வெட்டி…
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்…
வெட்டி வெட்டி மச்சி…
சோக்காளி நான்டி…

ஆண் : மச்சியே மச்சியே…
கர்ஜிக்கும் சிங்கமே…
நான் ஓட்டும் வண்டியே…
என்னமோ பண்ணுற மா…

ஆண் : காணாம போனமா தள்ளி தா நில் அம்மா…
ஒரு தறவையாச்சும் இந்த பக்கம் கொஞ்சம்…
ஒதுங்கி பாருமா டுகாட்டி கூடவா… ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…

BGM

ஆண் : { சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை…
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை…
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது… } * (2)


Notes : Showkali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Aaryan Dinesh Kanagaratnam, Vignesh Shivan & Sri Raskol. சோக்காளி பாடல் வரிகள்


அவளும் நானும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பாவேந்தர் பாரதிதாசன்விஜய் யேசுதாஸ்ஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Avalum Naanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவளும் நானும்…
அமுதும் தமிழும்…
அவளும் நானும்…
அலையும் கடலும்…

ஆண் : அவளும் நானும்…
தவமும் அருளும்…
அவளும் நானும்…
வேரும் மரமும்…

ஆண் : ஆலும் நிழலும்…
அசைவும் நடிப்பும்…
அணியும் பணிவும்…
அவளும் நானும்…

ஆண் : அவையும் துணிவும்…
உழைப்பும் தழைப்பும்…
அவளும் நானும்…
அளித்தலும் புகழும்…

BGM

ஆண் : மீனும் புனலும்…
விண்ணும் விாிவும்…
வெற்பும் தோற்றமும்…
வேலும் கூரும்…

ஆண் : ஆறும் கரையும்…
அம்பும் வில்லும்…
பாட்டும் உரையும்…
நானும் அவளும்…

ஆண் : நானும் அவளும்…
உயிரும் உடம்பும்…
நரம்பும் யாழும்…
பூவும் மணமும்…

ஆண் : நானும் அவளும்…
உயிரும் உடம்பும்…
நரம்பும் யாழும்…
பூவும் மணமும்…

ஆண் : அவளும் நானும்…
தேனும் இனிப்பும்…
அவளும் நானும்…
சிாிப்பும் மகிழ்வும்…

ஆண் : அவளும் நானும்…
திங்களும் குளிரும்…
அவளும் நானும்…
கதிரும் ஒளியும்…

BGM

ஆண் : அவளும் நானும்…
அமுதும் தமிழும்…
அவளும் நானும்…
அலையும் கடலும்…

ஆண் : அவளும் நானும்…
தவமும் அருளும்…
அவளும் நானும்…
வேரும் மரமும்…

ஆண் : ஆலும் நிழலும்…
அசைவும் நடிப்பும்…
அணியும் பணிவும்…
அவளும் நானும்…

ஆண் : அவையும் துணிவும்…
உழைப்பும் தழைப்பும்…
அவளும் நானும்…
அளித்தலும் புகழும்…

ஆண் : அவளும் நானும்…
அமுதும் தமிழும்…
அவளும் நானும்…
அமுதும் தமிழும்…


Notes : Avalum Naanum Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Pavendar Bharathidasan. அவளும் நானும் பாடல் வரிகள்


ராசாளி ராசாளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசத்ய பிரகாஷ் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Rasaali Rasaali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…

பெண் : பறவை போல் ஆகினேன்…
போல் ஆகினேன் இன்று…
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
நீ முந்தியா நான் முந்தியா…
பார்ப்போம் பார்ப்போம்…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

—BGM—

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : எட்டுத் திசை முட்டும் எனை பகலினில்…
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்…
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ…

ஆண் : முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்…
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்…
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

—BGM—

பெண் : நின்னுக் கோரி…
நின்னுக் கோரி… நின்னுக் கோரி…
ஓ நான் உஷா…
நின்னுக் கோரி…
உன்னால் நான்…
நின்னுக் கோரி கோரி…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

பெண் : வெயில் மழை வெட்கும்படி நனைவதை…
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடா்வதை…
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே…

பெண் : முன்னும் இதுபோலே புது அனுபவம் …
கண்டேன் என சொல்லும்படி நினைவிலே…
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே…

ஆண் : ராசாளி… பந்தயமா… பந்தயமா…
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை…
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை…

ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல…
கனவுகள் வருதே கண்ணின் வழியே…
என் தோள் மீது நீ நான் குளிர்காய்கின்ற தீ…

ஆண் : என் தோள் மீது நீ…
நான் குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…
குளிர்காய்கின்ற தீ…


Notes : Rasaali Rasaali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. ராசாளி ராசாளி பாடல் வரிகள்.


தள்ளிப் போகாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம் ஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Thalli Pogathey Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…

ஆண் : கண்ணெல்லாம்…
நீயேதான் நிற்கின்றாய்…
விழியின் மேல்…
நான் கோபம் கொண்டேன்…
இமை மூடிடு என்றேன்…

ஆண் : நகரும்… நொடிகள்…
கசையடிப் போலே…
முதுகின் மேலே…
விழுவதினாலே…
வரி வரிக் கவிதை…
எழுதும் வலிகள்…
எழுதா மொழிகள்… எனது…

ஆண் : கடல் போல பெரிதாக…
நீ நின்றாய்…
சிறுவன் நான்…
சிறு அலை மட்டும் தான்…
பார்க்கிறேன்… பார்க்கிறேன்…
எரியும் தீயில்…
எண்ணெய் நீ ஊற்று…
நான் வந்து நீராடும் நீரூற்று…

ஆண் : ஓ… ஊரெல்லாம்…
கண்மூடித் தூங்கும்…
ஓசைகள் இல்லாத இரவே…
ஓ… ஓ… நான் மட்டும் தூங்காமல்…
ஏங்கி உன் போல காய்கின்றேன்…
நிலவே…

ஆண் : கலாபம்… போலாடும்…
கனவில் வாழ்கின்றனே…
கை நீட்டி…
உன்னைத் தீண்டவே பார்த்தேன்…

ஆண் : ஏன் அதில் தோற்றேன்…
ஏன் முதல் முத்தம்…
தர தாமதம் ஆகுது…
தாமரை வேகுது…

பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…

ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…

ஆண் : தேகம் தடை இல்லை…
என நானும்…
ஒரு வார்த்தை சொல்கின்றேன்…
ஆனால் அது பொய் தான்…
என நீயும் அறிவாய் என்கின்றேன்…
அருகினில் வா…

பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : கனவிலே தெரிந்தாய்…
விழித்ததும் ஒளிந்தாய்…
கனவினில் தினம் தினம்…
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்…

ஆண் : தள்ளிப் போகாதே…

ஆண் : கண்களில் ஏக்கம்…
காதலின் மயக்கம்…
ஆனால் பார்த்த நிமிடம்
ஒரு விதமானத் தயக்கம்…

ஆண் : நொடி நொடியாய்…
நேரம் குறைய… என் காதல்…
ஆயுள் கறைய…
ஏனோ ஏனோ…
மார்பில் வேகம் கூட…

ஆண் : விதியின் சதி விளையாடுதே…
எனை விட்டுப் பிரியாதன்பே…
எனை விட்டுப் பிரியாதன்பே…

பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஏனோ ஏனோ…
ஏனோ ஏனோ… ஏனோ ஏனோ…

பெண் : அன்பே…


Notes : Thalli Pogathey Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. தள்ளிப் போகாதே பாடல் வரிகள்