Category Archives: பிரியசகி

அன்பு அலைபாயுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பி. உன்னிகிருஷ்ணன், மனுவேல் நௌயர், கார்த்திக், ரேஷ்மி & மாளவி கார்த்திகேயன்பரத்வாஜ்பிரியசகி

Anbu Alaipayuthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு அலைபாயுதே…
தென்றல் உலா போகுதே…
அன்பு அலை பாயுதே…
தென்றல் உலா போகுதே…

ஆண் : இந்த பூமியில் இது பொக்கிஷம்…
இதில் வாழ்வதே தினம் பரவசம்…
பல உறவுகள் இதில் கொஞ்சுதே…
அந்த சொர்கத்தை இது மிஞ்சுதே…
என்ன தவம் செய்தேனோ…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

ஆண் : பட்டாம் பூச்சிகள் எங்கள் தோட்டத்து பூக்களை…
காவல் காக்கிறதே…
பட்டு நிலவும் முற்றத்தில் தினம்…
வெள்ளை அடிக்க வருகிறதே…

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரையில்…
கவலை என்பது தெரியவில்லை…
விரும்பியதெல்லாம் கிடைப்பதனாலே…
கடவுளை தொல்லை செய்வதில்லை…

ஆண் : புன்னகை கீதம் எங்கள் கூட்டில்…
என்றும் கேட்குமே…
அன்பென்னும் வேதம் எங்கள் வாழ்வில்…
வீட்டு பாடமே…

BGM

ஆண் : அன்பு அலை பாயுதே…
பெண் : பாயுதே பாயுதே பாயுதே…
ஆண் : தென்றல் உலா போகுதே…
பெண் : போகுதே போகுதே போகுதே…

BGM

குழு : இன்பத்தை உருவாக்கி…
இரு கண்ணை மகனாக்கி…
பதினாறும் எனக்கருளினாய்…

குழு : இறைவா உனக்கென்ன நான் செய்வேன்…
உயிர் அன்றி வேறில்லை…
உன் பாதம் சமர்பிக்கவே…

குழு : இது போல எம் மக்கள் எந்நாளும் ஒன்றாகி…
உன் பாதம் பூஜிக்கவே…
அருள் வென்றும் என் சாமி…
தாய் உள்ளம் பூரிக்க…
தர வேண்டும் வரம் ஒன்று நீ…

BGM

ஆண் : இன்னொரு பிறவி மண்ணில் பிறந்தால்…
மீண்டும் நாங்களே உறவாவோம்…
விட்டு கொடுத்து வாழ்வதில் மட்டும்…
போட்டி போட்டு தினம் மகிழ்ந்திடுவோம்…

ஆண் : ஒருவர் மனதை ஒருவர் படித்து…
உறவை கவிதை ஆக்கிடுவோம்…
கனவில் கூட பிரிவென்னும் வார்த்தை…
கலந்து விடாமல் கதவடைப்போம்…

ஆண் : சந்தோஷம் யாவும்…
எங்கள் வீட்டை தேடி வந்ததே…
சங்கீதம் போல எங்கள்…
வாழ்க்கை மேன்மை ஆனதே…

BGM


Notes : Anbu AlaipayutheySong Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Snehan. அன்பு அலைபாயுதே பாடல் வரிகள்.


கண்களினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திரா & ஜனனிபரத்வாஜ்பிரியசகி

Kangalinal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

ஆண் : ஒரு வாய் உணவும்…
உள் நோக்கி செல்லாமல்…
தொண்டையில் தர்ணா செய்யுதே… ஓஓ…

பெண் : சலிப்பே இல்லாத…
தலைப்பில் நான் பேச…
காதல் ஒன்று தான் உணர்ந்தேன் அறிந்தேன்…

ஆண் : உதடுகளால் வரம் கொடுப்பாய்…
ஒதுங்கி நின்றால் ஜுரம் கொடுப்பாய்…

பெண் : சருகென நான் இருக்கயிலே…
நெருப்பு வைத்தாய் விழிகளிலே…

ஆண் : உன் மாதிரி உன் மாதிரி…
பெண் இந்த உலகில் இல்லை… ஓஹோஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

BGM

பெண் : இலவம் பஞ்சிலே செய்திட்ட மேலாடை…
இரும்பாய் கணக்குது அய்யோ… ஹாஹாஹோ…

ஆண் : இரவில் தனியாய் இருக்கும் போதெல்லாம்…
ஐந்தாறு தலை அணை கிழித்தேன்… ஓஓ…

பெண் : உந்தன் நகத்தால் மெல்ல கிறுக்கி…
துடிக்க வைத்தாய் செல்ல பொறுக்கி…

ஆண் : குருதி எல்லாம் குளிர வைத்தாய்…
நரம்பை எல்லாம் அதிர வைத்தாய்…

பெண் : என் தேசத்தில் சந்தோஷத்தில்…
கல் கூட பூ பூக்குதே… ஓஹோஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…

பெண் : அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…

ஆண் : கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்…
பெண் : குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்…

ஆண் : உன் ஆசையால் என் பாஷைகள்…
தள்ளாடி தவிக்கிறதே… ஓஓஹோ…

ஆண் : கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…


Notes : Kangalinal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. கண்களினால் பாடல் வரிகள்.


ஓ ப்ரியசகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிரியசகி

Oh Priyasakhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

BGM

ஆண் : மேகமாய் வந்து பூவிதைகளை…
மோகம் கொண்டு தூவ…
பூவிதழ் வழி தேன் துளி…
பட்டு தேகம் சூடாக…

பெண் : பூ மகள் சூடாகினாள்…
அந்த தேன் துளி என்ன ஆகும்…
ஆசையாய் நீ தீண்டினால்…
அது மீண்டும் பூவாகும்…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
தேவலோகம் தெரிகிறது…

பெண் : எந்தன் மார்பில் சாயும் போது…
இன்ப லோகம் தெரிகிறது…

ஆண் : வா வா என் தேவதையே தேவதையே…

பெண் : ஓ ப்ரியசகி உன் ப்ரியசகி…
உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…

BGM

பெண் : தேவதை இதழ் ஓரமே…
மது ஊருதே சுவையாக…
வேண்டுமே சரி பாதியை…
சுகம் யாவும் எனக்காக…

ஆண் : தேடுதே சுகம் தேடுதே…
இதழ் பாயுதே சுவைக்காக…
தேவைகள் உன் தேவைகள்…
நான் தருவேன் முழுதாக…

பெண் : பார்வை பட்ட நொடியில் எந்தன்…
உயிரும் பற்றி எரிகிறதே…

ஆண் : பாவை உந்தன் கைகள் பட்டு…
உலகம் பற்றி எரிகிறதே…

பெண் : எரிகிறதை அணைத்துவிடு…
என்னை அணைத்துவிடு…

BGM

ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…

ஆண் : இது உதடுகள் நடத்தும் யுத்தமா…
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா…
வாழ்வின் எல்லை வரை…


Notes : Oh Priyasakhi Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. ஓ ப்ரியசகி பாடல் வரிகள்.


முதல் முதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரத்வாஜ்பிரியசகி

Mudhal Mudhal Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

பெண் : எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…

பெண் : நான் சுவாசித்த காற்றினை நேசித்து…
நீ அதை சுவாசிக்க வேண்டுமடா…

பெண் : எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு…
எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு…

பெண் : ஓ… முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

BGM

பெண் : மேகம் மட்டும் சுவராகும்…
குளியல் அறையை நான் கேட்பேன்…
உனது கண்கள் மட்டும் காண…
சின்ன துவாரம் அதில் வைப்பேன்…

பெண் : நூற்றி எட்டு விண்மீனை…
ஒன்று சேர்த்து நீ கட்டு…
எந்தன் காலில் கொலுசு போல…
கட்டி விட்டு தாலாட்டு…

பெண் : அட மயிலின் இறகால் செய்த…
ஒரு காலணி நானும் கேட்பேன்…
அட இரவினில் ஓட கடிகாரம்தான்…
வீட்டில் வேண்டுமே…

பெண் : என்னை கேட்டுதான் நீயும் மூச்சு விடணுமே…
கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே…

பெண் : முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…

BGM

பெண் : வேலை நேரம் நீ சென்றால்…
மோக நேரம் நான் கொண்டால்…
ஒற்றை முடியில் கட்டி வைப்பேன்…
வெளியில் போக கூடாது…

பெண் : சின்ன சின்ன முத்தத்தை…
சமைத்து நானும் தருவேனே…
வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு…
முத்த உணவு தின்போம் வா…

பெண் : அட எண்ணை நுரையை அள்ளி…
பூ மெத்தை செய்ய சொல்லி…
நான் போதும் போதும் என்னும் வரையில்…
மோகம் வேண்டுமே…

பெண் : மீசை குத்தியே ஆசை காயம் செய்யடா…
இன்ப காயத்தில் நீயும் எச்சில் தடவவா…

பெண் : ஹான்… முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…


Notes : Mudhal Mudhal Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. முதல் முதல் பாடல் வரிகள்.


Chinna Maharani Song Lyrics in Tamil

சின்ன மகராணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்பரத்வாஜ்பிரியசகி

Chinna Maharani Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய்…
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்…
கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை…
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை…

ஆண் : எங்கள் வீட்டு கடிகாரத்தில்…
எல்லா நேரமும் இன்பம்…
இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால்…
எங்கள் உலகம் சுற்றும்…

ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய்…
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்…

BGM

ஆண் : பெண்ணுக்கென வாழ்க்கையிலே…
இலக்கணம் உள்ளதம்மா…
விட்டு தரும் குணம் இருந்தால்…
இலக்கியம் ஆகும் அம்மா…

ஆண் : அனைவருக்கும் இதயத்திலே…
ஆசைகள் இருக்கும் அம்மா…
ஆசைகள் தான் வாழ்க்கை என்றால்…
அவஸ்தைகள் பிறக்கும் அம்மா…

ஆண் : அடி வானத்தை அளந்திட சென்றால்…
அது முடிகிற காரியமா…
அடி வார்த்தையை கொட்டிய பின்னால்…
அதை அள்ளிட கூடிடுமா…

ஆண் : ரோஜா பூவும் நீயும் ஒன்றே…
இதழ்கள் இங்கே இதயம் எங்கே…

ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய்…
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்…

BGM

ஆண் : உன் தாயும் கேட்டாலே விண்மீன் வேண்டும் என்று…
விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா…
ஊஞ்சலுக்கு கேட்டாலே வானவில் வேண்டும் என்று…
வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா…

ஆண் : உன் ஆசைகளை ஒரு நாளும்…
நான் மறுக்கவும் இல்லையடி…
உன் தாயை நான் ஒரு நாளும்…
இங்கு வெறுக்கவும் இல்லையடி…

ஆண் : எந்தன் தாயே என் முகம் பாரு…
உந்தன் தாய்க்கும் நல் வழி கூறு…

ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய்…
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்…

BGM


Notes : Chinna Maharani Song Lyrics in Tamil. This Song from Priyasakhi (2005). Song Lyrics penned by Pa.Vijay. சின்ன மகராணியே பாடல் வரிகள்.