Category Archives: ஆட்டோகிராப்

மனமே நலமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பரத்வாஜ்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Maname Nalama Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனமே நலமா…
உந்தன் மாற்றங்கள் நிஜமா…
புது புது விதமா…
ஏதோ வந்தது சுகமா…

ஆண் : நீ சொல்லு நடந்தது என்ன…
எனை மாற்றி போனது என்ன…
அவளை நான் கண்டுக்கொண்டேன்…
அங்கே நான் தொலைந்து போனேன்…

ஆண் : மனமே நலமா…
உந்தன் மாற்றங்கள் நிஜமா…
புது புது விதமா…
ஏதோ வந்தது சுகமா…

ஆண் : நீ சொல்லு நடந்தது என்ன…
எனை மாற்றி போனது என்ன…
அவளை நான் கண்டுக்கொண்டேன்…
அங்கே நான் தொலைந்து போனேன்…


Notes : Maname Nalama Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. மனமே நலமா பாடல் வரிகள்.


ஞாபகம் வருதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேரன்பரத்வாஜ்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Gyabagam Varuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…

ஆண் : ஏதோ ஒன்றை தொலைத்தது போலே…
ஏதோ மீண்டும் பிறந்தது போலே…
தாயே என்னை வளா்த்தது போலே…
கண்களின் ஓரம் கண்ணீா் வருதே…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி…
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சு…

ஆண் : முதல் முதல் குடித்த மலபாா் பீடி…
முதல் முதல் சோ்த்த உண்டியல் காசு…
முதல் முதல் பாா்த்த டூாின் சினிமா…
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி…

ஆண் : முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு…
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு…
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்…
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்…

BGM

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
முதல் முதலாக பழகிய நீச்சல்…
முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்…
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சா்…

BGM

ஆண் : முதல் முதலாக அப்பா அடித்தது…
முதல் முதலாக சாமிக்குப் பயந்தது…
முதல் முதலாக வானவில் ரசித்தது…

ஆண் : முதல் முதலாக அரும்பிய மீசை…
முதல் முதலாக விரும்பிய இதயம்…
முதல் முதலாக எழுதிய கடிதம்…
முதல் முதலாக வாங்கிய முத்தம்…

ஆண் : ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே…


Notes : Gyabagam Varuthe Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Cheran. ஞாபகம் வருதே பாடல் வரிகள்.


கிழக்கே பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுகேந்திரன் & ஃபோனிபரத்வாஜ்ஆட்டோகிராப்

Kizhakke Paarthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

ஆண் : தோழி உந்தன் வருகையால்…
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி…
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : வெல் மை பிரண்டு ஐ ஹேவ் சம்திங் டு சே…
ஐ வான்ட் யு டு லிஸ்ஸன் லிஸ்ஸன் டு மீ…
திஸ் இஸ் வாட் ஐ ஹேவ் டு சே…
ஹியர் இட் கோஸ்…

BGM

ஆண் : தாகம் என்று சொல்கிறேன்…
மரக் கன்று ஒன்றை தருகிறாய்…
பசிக்குது என்று சொல்கிறேன்…
நெல்மனி ஒன்றை தருகிறாய்…

ஆண் : உந்தன் கை விரல் பிடிக்கையில்…
புதிதாய் நம்பிக்கை பிறக்குது…
உந்தன் கூட நடக்கையில்…
ஒன்பதாம் திசையும் திறக்குது…

ஆண் : என் பயணத்தில் எல்லாம்…
நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய்…
என் மனதை உழுது…
நீ நல்ல விதைகளை விதைத்தாய்…

ஆண் : என்னை நானே செதுக்க…
நீ உன்னையே உளியாய் தந்தாய்…
என் பலம் என்னவென்று எனக்கு…
நீ இன்றுதான் உணர வைத்தாய்…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

BGM

ஆண் : மழையோ உந்தன் புன்னகை…
மனசெல்லாம் மெல்ல நனையுதே…
பனியோ உந்தன் பார்வைகள்…
என் கண்ணிமை மயிர்களில் தூங்குதே…

BGM

ஆண் : வேருக்குள் விழுந்த நீர் துளி…
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே…
உனக்குள் ஏற்படும் உற்சவம்…
என்னையும் குதூகலப் படுத்துதே…

ஆண் : தோழி ஒருத்தி கிடைத்தால்…
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்…
இதுவரை இந்த உண்மை…
ஏன் தெரியவில்லை எவர்க்கும்…

ஆண் : மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை…
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி…
படைத்தவன் கேட்டால் கூட…
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…

ஆண் : தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய்…
அன்பு தோழி…
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன்…
உன்னால் தோழி…

ஆண் : தோழி உந்தன் வருகையால்…
நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி…
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி…

ஆண் : கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…


Notes : Kizhakke Paarthen Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. கிழக்கே பார்த்தேன் பாடல் வரிகள்.


நினைவுகள் நெஞ்சினில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேரன்பரத்வாஜ் & உன்னி மேனன்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Ninaivugal Nenjinil Song Lyrics in Tamil


BGM

ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…

ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய…
காதலை காகிதமாய் தூக்கி எாிய…
பெண்ணே உன்னால் முடிகிறதே…
என்னால் ஏனோ முடியவில்லை…
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை…
காரணம் கேட்டால் தொியவில்லை…

ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…

BGM

ஆண் : காத்திருந்து காத்திருந்து பழகியவன்…
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக…
காத்திருந்து காத்திருந்து பழகியவன்…

ஆண் : கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்…
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை…
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்…

ஆண் : நொடிகள் எல்லாம் நோய்பட்டு…
எனை சுமந்து போக மறுக்கிறதே…
மொழிகள் எல்லாம் முடமாகி…
என் மெளனத்தைக் கூட எாிக்கிறதே…

ஆண் : சுவாசிக்க கூட முடியவில்லை…
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை…
என்னை எனக்கே பிடிக்கவில்லை…
காரணம் கேட்டால் தொியவில்லை…

ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…

ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய…
காதலை காகிதமாய் தூக்கி எாிய…
பெண்ணே உன்னால் முடிகிறதே…
என்னால் ஏனோ முடியவில்லை…
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை…
காரணம் கேட்டால் தொியவில்லை…

BGM


Notes : Ninaivugal Nenjinil Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Cheran. நினைவுகள் நெஞ்சினில் பாடல் வரிகள்.


Manasukulle Dhagam Song Lyrics in Tamil

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ரேஷ்மி & ஹரிஷ் ராகவேந்திராபரத்வாஜ்ஆட்டோகிராப்

Manasukulle Dhagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு…
காதல் காதல் என்று சொல்லுச்சா…

பெண் : மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : மயில் சிறகில் வாசனை வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : தமிழ் படிக்க ஆசை வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா வந்துச்சா…

பெண் : தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ…
ஆண் : வந்துச்சா… வந்துச்சா…

பெண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு…
ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…

BGM

ஆண் : புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப…
பெண் : அதே… அதே…

ஆண் : புத்தகத்தை தலைகீழா படிச்சிருப்ப…
பெண் : ஹா… அதெல்லோ…

ஆண் : மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப…
தினம் நூறு முறை என் பேர சொல்லி ரசிப்ப…

பெண் : எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு கலைஞ்சு போய்…
அதை தேடி நோக்கன் மனசேன்னோ மறந்து போயி…

ஆண் : அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல…
உன் நெஞ்சுக்குள்ள காதல் வந்த சுவடு புள்ள…

பெண் : எண்ட கனவிலும் நினவிலும்…
வெளியேற்றம் நடக்குன்னு கலகம் ஏதும் வருமோ…

ஆண் : மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ… வந்தல்லோ…

ஆண் : மயிலிறகில் வாசம் வந்துச்சா…
பெண் : வந்தல்லோ…

BGM

பெண் : மலரின மனங்கள் மலர்கின்ற நேரம்…
சுகம் என காற்றே சொல்வாயோ…
கண்களின் பாஷை காதலின் பாஷை…
என்னிடம் உண்டு உன்னிடம் உண்டு…

பெண் : வாழ்வது எங்கு வீழ்வது எங்கு…
நேற்றும் இன்றும் நாளை என்றும்…
வீசும் தேடும் நெஞ்சம் ரெண்டும்…
வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட வேண்டும்… ஹோ…

பெண் : அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுனு…
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருந்து…

ஆண் : கேரளத்து கதக்களி ஆடணும்போல் தோணுதே…
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு…
கண்ணால் பேசும் வித்தை எல்லாம்…
போக போக கத்துக்குவ…
கடிகாரத்த பார்த்து பார்த்து…
உன்னை நீயே திட்டிக்குவ…

பெண் : எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குனடா…
நீ மெட்டியிட்டா அடங்குமோ அறியலடா…

ஆண் : நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி…
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி…

பெண் : அட குச்சு குச்சு பேச்சு எல்லாம்…
செய்யுமுன் நான் நின்னை கண்டால்…
ஏன்டா ஏன்டா ஏன்டா…

ஆண் : மனசினுள்ளில் தாகம் வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : மயில் சிறகில் வாசனை வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : தமிழ் படிக்க ஆசை வந்திலே…
பெண் : வந்துச்சு… வந்துச்சு…

ஆண் : தமிழ்நாடின் நாணம் வந்திலே…
பெண் : வந்துச்சுடா…

ஆண் : அட காந்தம் போல ஏதோ ஒன்னு…
நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு…
ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே…


Notes : Manasukulle Dhagam Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Snehan. மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா பாடல் வரிகள்.


ஒவ்வொரு பூக்களுமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரத்வாஜ்ஆட்டோகிராப்

Ovoru Pookalume Song Lyrics in Tamil


பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

BGM

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்…
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்…
மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

BGM

பெண் : உள்ளம் என்றும் எப்போதும்…
உடைந்து போகக் கூடாது…
என்ன இந்த வாழ்க்கையென்ற…
எண்ணம் தோன்றக் கூடாது…

பெண் : எந்த மனிதன் நெஞ்சுக்குள்…
காயம் இல்லை சொல்லுங்கள்…
காலப்போக்கில் காயமெல்லாம்…
மறைந்து போகும் மாயங்கள்…

பெண் : உளி தாங்கும் கற்கள்தானே…
மண்மீது சிலையாகும்…
வலி தாங்கும் உள்ளம்தானே…
நிலையான சுகம் காணும்…

பெண் : யாருக்கில்லை போராட்டம்…
கண்ணில் என்ன நீரோட்டம்…
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்…
ஒரு நாளில் நிஜமாகும்…

பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

பெண் : வாழ்க்கை கவிதை வாசிப்போம்…
வானம் அளவு யோசிப்போம்…
முயற்சி என்ற ஒன்றை மட்டும்…
மூச்சு போல சுவாசிப்போம்…

பெண் : லட்சம் கனவு கண்ணோடு…
லட்சியங்கள் நெஞ்சோடு…
உன்னை வெல்ல யாருமில்லை…
உறுதியோடு போராடு…

ஆண் : மனிதா உன் மனதை கீறி…
விதை போடு மரமாகும்…
அவமானம் படுதோல்வி…
எல்லாமே உரமாகும்…

பெண் : தோல்வியின்றி வரலாறா…
துக்கம் என்ன என் தோழா…
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்…
அந்த வானம் வசமாகும்…

பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்…
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்…
மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

BGM


Notes : Ovoru Pookalume Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Pa.Vijay. ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகள்.