Category Archives: திருமலை

தாம்தக்க தீம்தக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு & கார்த்திக்வித்யாசாகர்திருமலை

Thaamthakka Dheemthakka Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாம்தக்க தீம்தக்க தைய தக்க கூத்து…

BGM

ஆண் : நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே…
ஓடி போகும் காலம் நிற்காதே…
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே…
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க…
எழுந்து ஆடலாம் தோழா…

ஆண் : தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க…
வெற்றி சூடலாம் வாடா…

ஆண் : சகா காலை விழித்து மாலை உறங்கும்…
வாழ்கையை மறப்போம் வா…

ஆண் : சகா நேற்று நாளை கவலை மறந்து…
இன்றை மட்டும் ரசிப்போம் வா…

ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை…
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : கமான்யோ… கமான்யோ…

BGM

ஆண் : தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு…
வேறு படை எதற்கு தோழா…

ஆண் : உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து…
விண்ணை கலக்கலாம் வாடா…

ஆண் : சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து…
தீர்த்தமாய் குடிப்போம் வா…

ஆண் : சகா கோர்க துணிந்தால் மழையின் நூலில்…
நட்சத்திரம் கோர்போம் வா…

ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை…
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே…
ஓடி போகும் காலம் நிற்காதே…
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே…
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே…

ஆண் : கூத்தே கூத்தே கூத்தே கூத்தே கூத்தே…


Notes : Thaamthakka Dheemthakka Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Na. Muthukumar. தாம்தக்க தீம்தக்க பாடல் வரிகள்.


dhimsu-katta-song-lyrics-in-tamil

திம்சு கட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஸ்ரீலேகா பார்த்தசாரதி & திப்புவித்யாசாகர்திருமலை

Dhimsu Katta Song Lyrics in Tamil


BGM

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

பெண் : கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…

ஆண் : பப்பளபள பப்பளபள…
பப்பாளி பழமே…
தத்தளதள தத்தளதள…
தக்காளி பழமே…

பெண் : கும்தலக்கடி ஜும்தலக்கடி…
ஜூட்டாச்சு வயசே…
அய்தலக்கடி அய்தலக்கடி…
கெட்டாச்சு மனசே…

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

பெண் : கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…

BGM

ஆண் : உன்னோட மேனியையும்…
என்னோட மேனியையும்…
ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்…

பெண் : உன்னோட இடது கண்ணம்…
என்னோட வலது கண்ணம்…
ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்…

ஆண் : அஞ்சாறு அங்குலம்தான் உன் இடுப்பு…
அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு…

பெண் : உள்ளூற ஏதொ பண்ணும்…
உன் சிரிப்பு…
நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு…

ஆண் : என்ன சொன்னே…
இப்போ என்ன சொன்னே…
என்னை ஏத்தி விட்டு…
நீ தள்ளி நின்னே…

ஆண் : பப்பளபள பப்பளபள…
பப்பாளி பழமே…
தத்தளதள தத்தளதள…
தக்காளி பழமே…

பெண் : ஐ… கும்தலக்கடி ஜும்தலக்கடி…
ஜூட்டாச்சு வயசே…
அய்தலக்கடி அய்தலக்கடி…
கெட்டாச்சு மனசே…

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

BGM

பெண் : சிலம்பாடும் கண்ணை கண்டு…
சிலையாட்டம் நிக்கட்டுமா…
சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமே…

ஆண் : படம் காட்டும் கன்னத்துல…
படகோட்டி பார்கட்டுமா…
பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா…

பெண் : என்னோட மேனி இது…
நெய் முறுக்கு…
அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு…

ஆண் : உன்னோட அங்கம் எல்லாம்…
கம்மர்கட்டு…
அன்னாந்து பார்க்க வச்ச…
அல்வா தட்டு…

பெண் : கொஞ்சம் தறேன்…
இப்போ கொஞ்சம் தறேன்…
அட அப்புறமா…
நான் மொத்தம் தறேன்…

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

பெண் : கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…

ஆண் : பப்பளபள பப்பளபள…
பப்பாளி பழமே…
தத்தளதள தத்தளதள…
தக்காளி பழமே…

பெண் : ஹோய்… கும்தலக்கடி ஜும்தலக்கடி…
ஜூட்டாச்சு வயசே…
அய்தலக்கடி அய்தலக்கடி…
கெட்டாச்சு மனசே…

BGM


Notes : Dhimsu Katta Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Arivumathi. திம்சு கட்டை பாடல் வரிகள்.


வாடியம்மா ஜக்கம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீலேகா பார்த்தசாரதி & உதித் நாராயண்வித்யாசாகர்திருமலை

Vaadiyamma Jakkamma Song Lyrics in Tamil


பெண் : மலையாள பகவதி…
மலையாள பகவதி…
மருதானி வாயால…
மந்திரத்தை சொன்னேனே…
மனம் போல வாழ்கின்ற…
மஹராசன் நீதானே…

பெண் : குருமேடு கோபுரமாய்…
தனரேகை தாராளமாய்…
ஜாதகதில் உள்ளதையா…
சங்கடங்கள் இல்லை ஐயா…

பெண் : சந்திரராய் சூரியராய்…
உன் பேரு நிலைசிருக்க…
ஜக்கம்மா வாக்கு சொல்ல…
ஜாமதில் வந்தாளையா…

BGM

ஆண் : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…

BGM

ஆண் : பளபளக்கும் தோட்டமா…
பட்டாம்பூச்சி கூட்டமா…
தேடி வந்த பசங்களுக்கு…
தேனை அள்ளி ஊட்டம்மா…

BGM

ஆண் : பத்தமட பாய்…
இப்போ பட்டு மெத்தை ஆச்சு…
பத்து ரூபா நோட்டு…
இப்ப கத்த ரூபா ஆச்சு…

ஆண் : கட்டாந்தரை எனக்கு…
இப்ப பட்டா நிலம் ஆச்சு…
கெட்ட திசையாவும்…
இப்ப சுக்கிர திசை ஆச்சு…

ஆண் : ஹே… ஜக்கம்மா…
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா…
வா பக்கமா…
பக்கு பக்கு பக்கு பக்கமா…

குழு : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…

BGM

குழு : பளபளக்கும் தோட்டமா…
பட்டாம்பூச்சி கூட்டமா…
தேடி வந்த பசங்களுக்கு…
தேனை அள்ளி ஊட்டம்மா…

BGM

ஆண் : கோயம்பேடு சரக்கு வண்டி…
போல வந்தே நீதாண்டி…
கொய்யாபழம் மூட்டை போல…
குதிக்கிறியே முன்னாடி…

ஆண் : உன்னை உத்து பார்த்தா…
மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு…
சூடுதண்ணி இங்கு…
கொதிக்குதடி மூச்சு…

ஆண் : உன்னை உத்து பார்த்தா…
மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு…
சூடுதண்ணி இங்கு…
கொதிக்குதடி மூச்சு…

ஆண் : குங்கும தேகத்தில்…
சந்தனம் பூசியே…
ஆயுத பூஜையை…
செய்யத்தான் வாறேண்டி…

BGM

ஆண் : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…

BGM

குழு : டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… உலுலு லு லு லுலு…

BGM

ஆண் : கூழாங்கல்லு இடுப்பழகி…
குறி சொல்லி போனாளே…
எதிர் காலம் யோகமுன்னு…
எனக்கு மட்டும் சொன்னாளே…

ஆண் : பேட்டை புதுப்பேட்டை…
இது காய்லாங்கடை கோட்டை…
காசு பணம் சேர்க்க…
நான் கத்துகிட்டேன் ரூட்ட…

ஆண் : பேட்டை புதுப்பேட்டை…
இது காய்லாங்கடை கோட்டை…
காசு பணம் சேர்க்க…
நான் கத்துகிட்டேன் ரூட்ட…

ஆண் : சித்திரை மாதத்து…
கத்திரி வெயிலில்…
மின்னிய வெண்ணிலா…
போலவே வந்தாளே…

BGM

குழு : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…

BGM

குழு : பளபளக்கும் தோட்டமா…
பட்டாம்பூச்சி கூட்டமா…
தேடி வந்த பசங்களுக்கு…
தேனை அள்ளி ஊட்டம்மா…

BGM

ஆண் : பத்தமட பாய்…
இப்போ பட்டு மெத்தை ஆச்சு…
பத்து ரூபா நோட்டு…
இப்ப கத்த ரூபா ஆச்சு…

ஆண் : கட்டாந்தரை எனக்கு…
இப்ப பட்டா நிலம் ஆச்சு…
கெட்ட திசையாவும்…
இப்ப சுக்கிர திசை ஆச்சு…

ஆண் : ஹே ஜக்கம்மா…
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா…
வா பக்கமா…
பக்கு பக்கு பக்கு பக்கமா…

BGM


Notes : Vaadiyamma Jakkamma Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Kabilan. வாடியம்மா ஜக்கம்மா பாடல் வரிகள்.


நீயா பேசியது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்திருமலை

Neeya Pesiyadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை…
நான் என்பது எதுவரை எதுவரை…
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்…

ஆண் : வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை…
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை…
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்…

ஆண் : நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…
தீயை வீசியது…
என் அன்பே தீயை வீசியது…

ஆண் : கண்களிலே உன் கண்களிலே…
பொய் காதல் நாடகம் ஏனடி…
அன்பினிலே மெய் அன்பினிலே…
ஓர் ஊமை காதலன் நானடி…

ஆண் : நீயா பேசியது…
நீயா பேசியது…
நீயா பேசியது…
நீயா பேசியது…

ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை…
நான் என்பது எதுவரை எதுவரை…
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்…

ஆண் : வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை…
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை…
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்…

BGM

ஆண் : ஓஹோ… ஏதோ நான் இருந்தேன்…
என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்…
காற்றை மொழி பெயர்த்தேன்…
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்…

ஆண் : இரவிங்கே பகல் இங்கே…
தொடுவானம் போனதெங்கே…
உடல் இங்கே உயிர் இங்கே…
தடுமாறும் ஆவி எங்கே…

ஆண் : உருகினேன் நான்…
உருகினேன் இன்று…
உயிரில் பாதி கருகினேன்…

ஆண் : ஓ… நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…

BGM

ஆண் : வேரில் நான் அழுதேன்…
என் பூவும் சோகம் உணரவில்லை…
வேஷம் தரிக்கவில்லை…
முன்நாளில் காதல் பழக்கமில்லை…

ஆண் : உனக்கென்றே உயிர் கொண்டேன்…
அதில் ஏதும் மாற்றம் இல்லை…
பிரிவென்றால் உறவுண்டு…
அதனாலே வாட்டம் இல்லை…

ஆண் : மறைப்பதால் நீ…
மறைப்பதால் என்…
காதல் மாய்ந்து போகுமா…

ஆண் : நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…
தீயை வீசியது…
என் அன்பே தீயை வீசியது…

ஆண் : கண்களிலே உன் கண்களிலே…
பொய் காதல் நாடகம் ஏனடி…
அன்பினிலே மெய் அன்பினிலே…
ஓர் ஊமை காதலன் நானடி…

ஆண் : நீயா பேசியது…
நீயா பேசியது…


Notes : Neeya Pesiyadhu Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Yugabharathi. நீயா பேசியது பாடல் வரிகள்.


அழகூரில் பூத்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஎஸ் .பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்வித்யாசாகர்திருமலை

Azhagooril Poothavale Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…

ஆண் : உனை அள்ளித்தானே…
உயிர் நூலில் கோர்ப்பேன்…
உயிர் நூலில் கோர்த்து…
உதிராமல் காப்பேன்…

ஆண் : அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…

BGM

பெண் : நீ உடுத்தி போட்ட உடை…
என் வயதை மேயுமடா…

ஆண் : நீ சுருட்டி போட்ட முடி…
மோதிரமாய் ஆகுமடி…

பெண் : இமையாலே நீ கிருக்க…
இதழாலே நான் அழிக்க…
கூச்சம் இங்கே…
கூச்சப்பட்டு போகிறதே…

ஆண் : சடையாலே நீ இழுக்க…
இடைமேலே நான் வழுக்க…
காய்ச்சலுக்கும் காய்ச்சல்…
வந்து வேகிறதே…

பெண் : என்னை திரியாக்கி…
உன்னில் விளக்கேற்றி…
எந்நாளும் காத்திருப்பேன்…

ஆண் : ஹோய் ஹோய்…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…

BGM

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே…
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்…

பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே…
நான் இறங்கி தூங்கிடுவேன்…

ஆண் : குறிலாக நான் இருக்க…
நெடிலாக நீ வளர்க்க…
சென்னை தமிழ்…
சங்கத்தமிழ் ஆனதடி…

பெண் : அறியாமல் நான் இருக்க…
அழகாக நீ திறக்க…
காதல் மழை…
ஆயுள் வரை தூருமடா…

ஆண் : என்னை மறந்தாலும்…
உன்னை மறவாத…
நெஞ்சோடு நானிருப்பேன்…

பெண் : ஹோய் ஹோய் ஹோய்…
அன்பூரில் பூத்தவனே…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
என்னை அடியோடு சாய்த்தவளே…

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
மழையூரின் சாரலிலே…

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
என்னை மார்போடு சேர்த்தவளே…

பெண் : உனை அள்ளித்தானே…
உயிர் நூலில் கோர்ப்பேன்…

ஆண் : உயிர் நூலில் கோர்த்து…
உதிராமல் காப்பேன்…


Notes : Azhagooril Poothavale Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Arivumathi. அழகூரில் பூத்தவளே பாடல் வரிகள்.