Category Archives: வானவில்

வானவில் – Vaanavil (2000)

ஆசை மகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்தேவாவானவில்

Aasai Magane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…

ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

BGM

ஆண் : ஆட்டு ஈரல் சுட்டுத்தாரேன்…
அச்சு வெல்லம் தொட்டுத்தாரேன்…
நாட்டு கோழி சாறு எறக்கி…
நல்லெண்ணெய்யும் ஊத்தித்தாரேன்…
.
ஆண் : புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தும்…
புத்திக்குள்ள சேரணுமே…
நீ பொன்னு மெடல் வாங்கணுமே…

BGM

ஆண் : உனக்கு வந்த புகழால்…
எனக்கு முறுக்கு மீசை ஏறனுமே…
ஊர் கிறுக்கு பிடிச்சு போகணுமே…

ஆண் : மகனே உன் உச்சந்தலையில்…
எண்ணெய் வச்சி தேக்கிறேன்டா…
மகனே உன் படிப்புக்காக…
என்னை நானே தேக்கிறேன்டா…

ஆண் : நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…
நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…

ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

BGM

ஆண் : காட்டு வெயிலில் பஞ்சம் பொழச்சோம்…
கலப்பை வித்து கஞ்சி குடிச்சோம்…
எருமை தயிரு சோறு போட்டு…
உன்ன மட்டும் ஊட்டி வளத்தோம்…

ஆண் : மொத்தம் எல்லாம் செலவழிச்சாலும்…
மிச்சம் இருப்பது நீ அல்லவா…
நீ வெதைக்கு வச்ச நெல் அல்லவா…

BGM

ஆண் : நாட்டரங்காலில் நான் உன்ன விதைச்சேன்…
நாளை விளைச்சல் நீயல்லவா…
நீ நாட்டுக்கெல்லாம் உணவல்லவா…

ஆண் : மழை பார்க்கும் மானாவாரி…
வருஷம் ஒரு நாள் விளையுமடா…
மழைக்கால இரவும்கூட…
மறு நாள் நிச்சயம் விடியுமடா…

ஆண் : நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…
நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…

ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…

ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…

BGM


Notes : Aasai Magane Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஆசை மகனே பாடல் வரிகள்.


பிறையே பிறையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Piraye Piraye Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிறையே பிறையே மூன்றாம் பிறையே…
வரும் நாளெல்லாம் வளர் பிறையே…
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு…
பதறாது இருப்பாய் வளர்பிறையே…

ஆண் : வெளிச்சம் மறையக்கூடும்…
மரிப்பதில்லை விடிந்து தோன்றும்… ம்ம்…
விதைகள் உதைக்கும் போதும்…
இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும்…

ஆண் : தூங்கு பொன்மானே நாளை உன் நாளே…

BGM


Notes : Piraye Piraye Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. பிறையே பிறையே பாடல் வரிகள்.


ஹோலி ஹோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோபால் ராவ் & சுஜாதா மோகன்தேவாவானவில்

Holi Holi Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே ஹே ஹோலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…

BGM

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

BGM

ஆண் : பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை…
வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை…
நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை…
கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை…

பெண் : காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும்…
கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்…

ஆண் : பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன்…
மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன்…
அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

BGM

பெண் : சாயம் போனால் ஆடை பழசு…
வண்ணம் போனால் வாழ்க்கை பழசு…
மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும்…
என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்…

ஆண் : ஹே ஹே… ரத்தத்தின் நிறமென்ன…
சிவப்பென்று சொல்வோம்…
முத்தத்தின் நிறம் கூட…
சிவப்பென்று செய்வோம்…

ஆண் : பெண்மையை விற்றால் வண்ணமும் இல்லை…
பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை…
ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலிபெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஏஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…


Notes : Holi Holi Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஹோலி ஹோலி பாடல் வரிகள்.


கன்னிக் கோவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Kanni Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM

ஆண் : என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு…
பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு…
மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா…
திருநாள் வருமா… ஆஆஆ…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

ஆண் : கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…

BGM


Notes : Kanni Koyil Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. கன்னிக் கோவில் பாடல் வரிகள்.


ஓ பெண்ணே தமிழ் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாவானவில்

Oh Penne Thamizh Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…

BGM

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…

ஆண் : கலவையில் என்ன கலந்தானோ…
பிரம்மன் உன்னை படைக்க…
கடலில் நுரையினை எடுத்தானோ…
அழகே உன்னை வடிக்க…
இதழில் பழரசம் வடித்தானோ…
தினமும் நான் சுவைக்க…

ஆண் : அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…
அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…

BGM

ஆண் : காற்றும் வெயிலும் துடித்தாலும்…
கடலின் அளவு குறைவதில்லை…
பல பல கோடி உயிர் துகித்தாலும்…
இன்னும் காதலும் குறைவதில்லை…

BGM

பெண் : கடலின் நீலம் இல்லாமல்…
வானம் வண்ணம் பெறுவதில்லை…
மனம் உடைந்தாலும் காதல் இல்லா வண்ணம்…
வாழ்வுக்கு வண்ணம் இல்லை…

ஆண் : கடலுக்கு கீழும் பூகம்பம் நடக்கும்…
காதலர் வாழ்வோடும் பூகம்பம் வெடிக்கும்…

பெண் : கடலின் தற்கொலை அதிகம்தான்…
காதலின் கதையும் அதுவேதான்…
கடலின் தற்கொலை அதிகம்தான்…
காதலின் கதையும் அதுவேதான்…

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…

BGM

பெண் : கடலில் ஓடி கலப்பதிற்க்கு…
காற்றில் நதிகள் ஊற்றெடுக்கும்…
அட காதல் கரை சேர்ந்து கலப்பதிற்க்கு…
மண்ணில் உயிர்கள் பிறபெடுக்கும்…

BGM

ஆண் : மூன்று பாகம் கடல் இருந்தும்…
நிலத்தில் தாகம் தீரவில்லை…
நம் வழிதோறும் காதல் இருந்தாலும்…
இன்னும் வாழ்க்கை நிறையவில்லை…

BGM

பெண் : மீனவருகெல்லாம் கடல்தான் தெய்வம்…
மானிடர்கெல்லாம் காதல்தான் தெய்வம்…

ஆண் : கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ…
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு…

பெண் : கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ…
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு…

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஓஹோ… பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…

ஆண் : கலவையில் என்ன கலந்தானோ…
பிரம்மன் உன்னை படைக்க…
கடலில் நுரையினை எடுத்தானோ…
அழகே உன்னை வடிக்க…
இதழில் பழரசம் வடித்தானோ…
தினமும் நான் சுவைக்க…

ஆண் : அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…
அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…

ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…


Notes : Oh Penne Thamizh Penne Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ பெண்ணே தமிழ் பெண்ணே பாடல் வரிகள்.


வெளிநாட்டு காற்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி & ஹரிஹரன்தேவாவானவில்

Velinattu Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
புரியாத பூக்கள் தலையாட்டுதே…
மொழி பெயர்க்கவே அதோ அதோ…
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
தமிழ் பேசுதே…

BGM

குழு : சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…
சை சைய்ய சை சைய்ய சைய்ய சை…

BGM

ஆண் : உலகை உலகை மறந்துவிட்டேன்…
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்…

பெண் : பூவை திறந்து மறைந்து கொண்டு…
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்…

ஆண் : கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்…
பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்…

பெண் : ஸ்ரீங்கார மாநாடு போடு…
சிற்றின்ப கச்சேரி பாடு…

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
ஆண் : ஒஹ்… தமிழ் பேசுதே…

BGM

பெண் : மழையின் துளியை ஒளி துளைத்தால்…
வானவில் வண்ணம் எழுவதுண்டு…

ஆண் : மனதை மனதை விழி துளைத்தால்…
காதலின் வண்ணம் விளைவதுண்டு…

பெண் : உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா…
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா…

ஆண் : கண்கண்ட தேகங்கள் போக…
காணாத பாகங்கள் வாழ்க…

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
புரியாத பூக்கள் தலையாட்டுதே…

பெண் : மொழி பெயர்க்கவே அதோ அதோ…
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…

BGM


Notes : Velinattu Kaatru Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. வெளிநாட்டு காற்று பாடல் வரிகள்.