பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | மலேசியா வாசுதேவன் | தேவா | வானவில் |
Aasai Magane Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…
ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…
ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
—BGM—
ஆண் : ஆட்டு ஈரல் சுட்டுத்தாரேன்…
அச்சு வெல்லம் தொட்டுத்தாரேன்…
நாட்டு கோழி சாறு எறக்கி…
நல்லெண்ணெய்யும் ஊத்தித்தாரேன்…
.
ஆண் : புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தும்…
புத்திக்குள்ள சேரணுமே…
நீ பொன்னு மெடல் வாங்கணுமே…
—BGM—
ஆண் : உனக்கு வந்த புகழால்…
எனக்கு முறுக்கு மீசை ஏறனுமே…
ஊர் கிறுக்கு பிடிச்சு போகணுமே…
ஆண் : மகனே உன் உச்சந்தலையில்…
எண்ணெய் வச்சி தேக்கிறேன்டா…
மகனே உன் படிப்புக்காக…
என்னை நானே தேக்கிறேன்டா…
ஆண் : நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…
நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…
ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…
ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
—BGM—
ஆண் : காட்டு வெயிலில் பஞ்சம் பொழச்சோம்…
கலப்பை வித்து கஞ்சி குடிச்சோம்…
எருமை தயிரு சோறு போட்டு…
உன்ன மட்டும் ஊட்டி வளத்தோம்…
ஆண் : மொத்தம் எல்லாம் செலவழிச்சாலும்…
மிச்சம் இருப்பது நீ அல்லவா…
நீ வெதைக்கு வச்ச நெல் அல்லவா…
—BGM—
ஆண் : நாட்டரங்காலில் நான் உன்ன விதைச்சேன்…
நாளை விளைச்சல் நீயல்லவா…
நீ நாட்டுக்கெல்லாம் உணவல்லவா…
ஆண் : மழை பார்க்கும் மானாவாரி…
வருஷம் ஒரு நாள் விளையுமடா…
மழைக்கால இரவும்கூட…
மறு நாள் நிச்சயம் விடியுமடா…
ஆண் : நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…
நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…
ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…
ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…
ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…
—BGM—
Notes : Aasai Magane Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஆசை மகனே பாடல் வரிகள்.