Category Archives: கண்ணுபடபோகுதய்யா

Eluntha Mala Pola Song Lyrics in Tamil

எழுந்தால் மலை போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Eluntha Mala Pola Song Lyrics in Tamil


BGM

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…
எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

ஆண் : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்…
பொன்னான மனசிருக்கும்…
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு…
எப்போதும் திறந்து இருக்கும்…

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்…
எட்டூரும் பணிஞ்சிருக்கும்…
அவர் தொட்டு தந்த நெல்லுமணி…
முப்போகம் விளைஞ்சிருக்கும்…

குழு : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

BGM

ஆண் : வைகை ஆறும்தான் கடல பாக்கல…
வாசுதேவர் மனம் கடலாச்சி…
குழு : எங்க வாசுதேவர் மனம் கடலாச்சி…

ஆண் : வாழ்க்கை வெள்ளத்தில் நாங்க மூழ்கல…
வாசுதேவர் கை படகாச்சி…
குழு : எங்க வாசுதேவர் கை படகாச்சி…

ஆண் : கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு…
தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு…
குழு : நாங்க தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு…

ஆண் : வீட்டுக்கு வீடு எரியுதுங்க…
வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு…
குழு : எங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு…

குழு : எங்க உசுரெல்லாம் ஊடுருவும்…
உன்னோட புன்சிரிப்பு…
எங்க மனசாளும் மன்னனுக்கு…
மத்தாப்பு வரவேற்பு…

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

BGM

ஆண் : வில்லு வண்டியில போகும் மிடுக்குல…
வீரம் வெளையுது கழனியிலே…
குழு : அத கேட்டுப் பாருங்க வெடலைகள…

ஆண் : பார்வை ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான்…
பயிசல் செய்யுது வழக்குகள…
குழு : இங்கு கோர்ட்டு கேஸ்கன்னு கவலையில்ல…

ஆண் : சுத்தி எரியும் எந்த நெருப்பும்…
தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை…
குழு : அத தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை…

ஆண் : சத்தியத்தையும் தர்மத்தையும்…
காத்திருக்கும் எங்க தர்மதுரை…
குழு : உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை…

ஆண் : இங்க நடமாடும் சூரியனை…
கும்பிட்டு பொங்க வச்சோம்…
எங்க பசி தீர்த்த தர்மனுக்கு…
பல்லாக்கு தூக்கி நிற்போம்…

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

குழு : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்…
பொன்னான மனசிருக்கும்…
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு…
எப்போதும் திறந்து இருக்கும்…

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்…
எட்டூரும் பணிஞ்சிருக்கும்…
அவர் தொட்டு தந்த நெல்லுமணி…
முப்போகம் விளைஞ்சிருக்கும்…

ஆண் : எழுந்தால் மலை போல…
குழு : எழுந்தால் மலை போல…
ஆண் : நடந்தால் நதி போல…
குழு : நடந்தால் நதி போல…


Notes : Eluntha Mala Pola Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Ilaya Kamban. எழுந்தால் மலை போல பாடல் வரிகள்.


மன்னவனே தென்னவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Mannavane Thennavane Song Lyrics in Tamil


ஆண் : மன்னவனே தென்னவனே…
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு…
பழி வந்து சேர்ந்ததா…

BGM

ஆண் : மன்னவனே தென்னவனே…
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு…
பழி வந்து சேர்ந்ததா…

ஆண் : குத்தமில்லா கோயில் ஒண்ணு…
குண்டு பட்டு சரிஞ்சதா…

BGM

ஆண் : சுத்தமுள்ள சூரியனும்…
சொல்லுப்பட்டு கரிஞ்சதா…

ஆண் : வண்ணக்குயில் கூடுதான்…
சின்னப்பட்டு போனதா…
வானமே உனக்குத்தான்…
கண்ணு பட்டு போனதா…

BGM


Notes : Mannavane Thennavane Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by S. A. Rajkumar. மன்னவனே தென்னவனே பாடல் வரிகள்.


கண்ணோரமாய் கதை பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…

ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…

பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…

ஆண் : கண்ணோரமாய் கதை பேசு…
பெண் : காதல் அம்பை நீ வீசு…

BGM

ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம்…
கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்…
அன்பின் அருவியே கண்களானதோ…

BGM

பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும்…
எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்…
அமுதசுரபியே உள்ளமானதோ…

ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே…
உன் முகம் பார்த்தேனே…

பெண் : உயிரின் நிழலாக அன்பே…
உன்னைப் பார்த்தேனே…

ஆண் : ஒரு கோடி காலம் வாழ…
உன் மடி கேட்டேனே…

BGM

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
ஆண் : காதல் அம்பை நீ வீசு…

BGM

ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்…
வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்…
உள்ளம் கேட்டு நான் உன்னை கெஞ்சினேன்…

BGM

பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்…
மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும்…
நானும் வாழவே உன்னைக் கேட்கிறேன்…

ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே…
உன்னில் பார்த்திடவா…

பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே…
உன் பெயர் கேட்டிடவா…

ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால்…
மரணம் ஜெயித்திடுவேன்…

BGM

பெண் : கண்ணோரமாய் கதை பேசு…
காதல் அம்பை நீ வீசு…

ஆண் : தேவலோகம் உன் ஊரா…
தென்றல் என்பதுன் பேரா…

பெண் : வில்லை ஏந்திடும் வீரா…
வேட்டையாட வந்தீரா…

ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை…
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன…

பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில்…
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன…

BGM


Notes : Kannoramai Kathai Pesu Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Kalai Kumar. கண்ணோரமாய் கதை பேசு பாடல் வரிகள்.


மூக்குத்தி முத்தழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Mookuthi Muthazhaghu Song Lyrics in Tamil


ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…

BGM

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

ஆண் : பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…
பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…

ஆண் : வானம் விட்டு மண்ணில் வந்த…
நிலவல்ல பெண்ணழகு…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

BGM

ஆண் : மருதாணி கொடி போல…
மவுசாக அவ நடப்பா…
குழு : ஆஹா என்ன நடையோ…
ஆஹா அன்ன நடையோ…

ஆண் : மழை பெஞ்ச தரை போல…
பதமாக தானிருப்பா…
குழு : ஆஹா என்ன அழகோ…
ஆஹா வண்ண மயிலோ…

ஆண் : வலை வீசும் கண்ணழகு…
வளைந்தாடும் இடையழகு…
கருநாகக் குழல் அழகு…
கற்கண்டு குரல் அழகு…

ஆண் : மலையாள மலையில் மலர்ந்த…
மலர்க்காடு முள்ளழகு…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

BGM

ஆண் : கொண்டவனே கோயில் எனும்…
குலமகளா அவள் இருப்பா…
குழு : ஆஹா நல்ல மனசு…
ஆஹா தங்க மனசு…

ஆண் : தன் முகத்தெப் பார்ப்பதற்கும்…
என் முகத்தில் அவள் முழிப்பாள்…
குழு : ஆஹா ரொம்ப புதுசு…
அய்யாக்கேத்த பரிசு…

ஆண் : கார்த்திகையில் வெயில் தருவா…
சித்திரையில் மழை தருவா…
விண்மீன்கள் சேர்த்து வைத்து…
வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்…

ஆண் : தாயைப்போல பாசம் சொல்லி…
தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

ஆண் : பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…
பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…

ஆண் : வானம் விட்டு மண்ணில் வந்த…
நிலவல்ல பெண்ணழகு…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

BGM


Notes : Mookuthi Muthazhaghu Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by S. A. Rajkumar. மூக்குத்தி முத்தழகு பாடல் வரிகள்.


ஆனந்தம் ஆனந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ, பிஜு நாராயணன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்.கண்ணுபடபோகுதய்யா

Anandham Anandham Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு…

BGM

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு…
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு…

ஆண் : தென் பொதிகை மேகங்களே…
இங்கு வந்து சேருங்கள்…
என் தம்பி வந்த வேளையில்…
தங்க சாரல் வீசுங்கள்…

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு…
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு…

BGM

ஆண் : ராமனுக்காக பதினான்கு ஆண்டு…
லட்சுமணன் தூங்கல…
நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு…
வருமா தோணல…

BGM

ஆண் : தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான்…
ஆறே நாளுல…
அப்படி எனக்கொரு யோகம் வருமா…
அதுதான் தோணல…

ஆண் : உலகத்தை எழுதட்டும்…
உங்க பங்குக்கு…
என் உயிர் ஒன்றும் பெரிதல்ல…
உங்க அன்புக்கு…

ஆண் : கண்ணுபட போகுதய்யா…
நம் அன்புக்கு…
தாயை சுத்தி போட சொல்ல வேணும்…
ரெண்டு பேருக்கு…

ஆண் : என் ஆயுள்தானே காணிக்கை…
அன்னை என்ற சாமிக்கு…

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு…
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு…

BGM

ஆண் : ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை…
ஆனால் சொல்கிறேன்…
இன்னொரு ஜென்மம் இருந்தால் உன்னையே…
உறவாய் கேக்குறேன்…

BGM

ஆண் : தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும்…
அண்ணன் சொல்கிறேன்…
இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன்…
வரமாய் கேக்குறேன்…

ஆண் : வானம் போலே உந்தன்…
தேகம் கருத்திருக்கு…
ஆனால் அள்ளி அள்ளி…
தந்த கரம் சிவந்திருக்கு…

ஆண் : தம்பி சின்னப் பிள்ளை இல்லை…
மீசை இருக்கு…
ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான்…
ஆசை இருக்கு…

ஆண் : என் ஜீவன் போன்ற அண்ணனே…
தேதி வேண்டும் பூஜைக்கு…

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு…
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு…

ஆண் : தென் பொதிகை மேகங்களே…
இங்கு வந்து சேருங்கள்…

ஆண் : என் தம்பி வந்த வேளையில்…
தங்க சாரல் வீசுங்கள்…

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு…
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு…

BGM


Notes : Anandham Anandham Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Vairamuthu. ஆனந்தம் ஆனந்தம் பாடல் வரிகள்.


மனச மடிச்சு நீதான் 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Manasa Madichi Neethan Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…
உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

BGM

பெண் : ஓரக்கண்ணுல நீதான்…
என்னை எதுக்கு பாக்குற…
ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

ஆண் : தொட்டு தொட்டு ரசிப்போமா…
தொட்டில் கட்ட நினைப்போமா…

பெண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா…
ஒண்ணா சேர்ந்து நிற்போமா…

ஆண் : கட்டிக்கிட்டு காத்துலதான்…
கரைஞ்சி போவோமா…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…

பெண் : ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

BGM

ஆண் : அம்மம்மா குண்டுமல்லி…
ஆள இப்போ தூக்குது…
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துது…

BGM

பெண் : சிலிர்க்கும் கொலுசு இப்போ…
அத்தான் பேரை சொல்லுது…
அதுக்கும் இதுக்கும் சேர்த்து…
ஆட்டம் போடுது…

ஆண் : சேலை பொத்தித்தான் செங்கரும்பு ஆடுதா…
பெண் : கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா…

ஆண் : காதல் ரேகத்தான் உள்ளங்கையில் ஓடுதா…
பெண் : கட்டில் கச்சேரி காதோடுதான் கேக்குதா…

ஆண் : குற்றாலமே குலுங்குதா…
பக்கம் வந்து சிணுங்குதா…
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்…

பெண் : ஓரக்கண்ணுல நீதான்…
என்னை எதுக்கு பாக்குற…
ஆண் : உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

BGM

ஆண் : ஆஹா… நீயும் குடிச்ச…
ஆத்து தண்ணி அள்ளித்தான்…
குடிச்சி பார்த்தேன்…
அது ரொம்ப இனிக்குது…

BGM

பெண் : இரவில் மாமா உங்க…
நெனப்புல நான் தூங்கினா…
நிலவில் பாய் விரிச்ச…
சுகமும் கிடைக்குது…

ஆண் : காதல் சூரியன்தான் கண்ணுக்குள்ளே கரையுமே…
பெண் : மாமா பார்த்தாலே மஞ்சள் கூட சிவக்குமே…

ஆண் : கண்ணைப் பார்த்தாலே கள் குடிச்ச போதைதான்…
பெண் : உன்னை நினைச்சாலே சொர்க்கத்துக்கு பாதைதான்…

ஆண் : குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா…
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…
உதட்டை கடிச்சி நீதான்…
என்னை உசுப்பு ஏத்துற…

பெண் : தொட்டு தொட்டு ரசிப்போமா…
தொட்டில் கட்ட நினைப்போமா…

ஆண் : ஒட்டிக் கிட்டு சித்தம்மா…
ஒண்ணா சேர்ந்து நிற்போமா…

பெண் : கட்டிக்கிட்டு காத்துலதான்…
கரைஞ்சி போவோமா…

ஆண் : மனச மடிச்சு நீதான்…
உன் இடுப்பில் சொருகுற…

பெண் : ஒதுங்கி நிக்குற போதும்…
என்னை உரசி பேசுற…

BGM


Notes : Manasa Madichi Neethan Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Kalai Kumar. மனச மடிச்சு நீதான் பாடல் வரிகள்.