ஆண் : என் செய்தாயோ விழியே… இனி என் செய்வாயோ விதியே… ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை… பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை… பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…
ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை… சுய பந்தம் இல்லாத அன்னை… இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…
ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே… அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன… இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…
—BGM—
Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோபாடல் வரிகள்.
பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட… ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை… ஹலோ சுசிலா ஆண்ட்டி… ஹல்லோ ஜானகி ஆண்ட்டி… குயில் பாட்டு சித்ரா… எல்லோரும் என்னை மன்னியுங்கள்…
பெண் : தராரராரா தராரராரா… தராரராரா தராரராரா…
பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட… தராரராரா… ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை… தராரராரா…
—BGM—
பெண் : காற்றில் ஏறி பாட்டு பாட போகிறேன்… ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்… வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்… நிலாவில் சென்று நீர் அருந்த போகிறேன்…
பெண் : மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்… முன்னூறு ஆண்டு இளமை வாங்க போகிறேன்…
பெண் : தராரராரா தராரராரா… குழு : ஹே ஹே ஹே… பெண் : தராரராரா தராரராரா… குழு : ஹே ஹே ஹே…
பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட… குழு : சா சா சா சா… பெண் : ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை…
—BGM—
பெண் : இந்த பூமி பழைய பூமி அல்லவா… ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா… ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா… ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா…
பெண் : உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா… அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா… உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா… அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா…
பெண் : தராரராரா தராரராரா… தராரராரா தராரராரா…
பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட… சொந்த குரலில் பாட… ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை… ரொம்ப நாளா ஆசை…
பெண் : ஹலோ சுசிலா ஆண்ட்டி… ஹலோ ஜானகி ஆண்ட்டி… குயில் பாட்டு சித்ரா… எல்லோரும் என்னை மன்னியுங்கள்…
பெண் : தராரராரா தராரராரா… தராரராரா தராரராரா… தராரராரா தராரராரா… தராரராரா தராரராரா…
—BGM—
Notes : Sontha Kuralil Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சொந்த குரலில் பாடபாடல் வரிகள்.
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… என் உள்நெஞ்சு சொல்கின்றது… பூவோடு பேசாத காற்றென்ன காற்று… ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
பெண் : மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்… எந்தன் பெண்மை பூப்பூக்கவே… நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்… நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில்… ன்னை ஏந்தத்தானோ…
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… என் உள்நெஞ்சு சொல்கின்றது…
—BGM—
பெண் : மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது… முரடா உனை ரசித்தேன்… தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது… கர்வம் அதை மதித்தேன்…
பெண் : முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ… என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ… உன்னைப் போலே ஆண் இல்லையே… நீயும் போனால் நான் இல்லையே… நீர் அடிப்பதாலே மீன் நழுவ வில்லையே… ஆம் நமக்குள் ஊடலில்லை…
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… என் உள்நெஞ்சு சொல்கின்றது… பூவோடு பேசாத காற்றென்ன காற்று… ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
—BGM—
பெண் : நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன்… அன்பே தீயாய் இரு… நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா… அன்பே முள்ளாய் இரு…
பெண் : நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது… நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது… உன்னை மொத்தம் நேசிக்கிறேன்… உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்…
பெண் : நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை… காதலோடு பேதம் இல்லை…
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… என் உள்நெஞ்சு சொல்கின்றது… பூவோடு பேசாத காற்றென்ன காற்று… ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
பெண் : மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்… எந்தன் பெண்மை பூப்பூக்கவே… நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்… நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில்… என்னை ஏந்தத்தானோ…
—BGM—
Notes : Unnodu Vazhadha Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. உன்னோடு வாழாதபாடல் வரிகள்.
ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
—BGM—
ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு… மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு… மோகனமே உன்னைப் போல என்னை யாரும்… மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…
ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல… எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை…
ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
—BGM—
ஆண் : பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே… என் பிரியத்தை அதனால் குறைக்கமாட்டேன்… எரியும் உடலென்று தெரியும் பெண்ணே… என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்…
ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
—BGM—
ஆண் : கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்… என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்… துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்… அடி தூயவளே உனக்குள் தொலைத்துவிட்டேன்…
ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
—BGM—
ஆண் : செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே… அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்… உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்… அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்…
ஆண் : எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்… அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்… இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்… என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்…
ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
—BGM—
ஆண் : மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்… மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி… ஓடி ஓடிப் போகாதே ஊமை பெண்ணே… நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி…
ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு… மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு… மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு… மோகனமே உன்னைப் போல என்னை யாரும்… மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…
ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல… எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை…
Notes : Megangal Ennai Thottu Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. மேகங்கள் என்னைத் தொட்டுபாடல் வரிகள்.
பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்… யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்… ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்… ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…
பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்… யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்… ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்… ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…
—BGM—
ஆண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்… யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்… ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்… ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…
ஆண் : உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்… ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்… வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்… வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்…
ஆண் : இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்… இளமை கெடாத மோகம் கேட்டேன்… பறந்து பறந்து நேசம் கேட்டேன்… பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்…
ஆண் : புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்… பூவின் மடியில் படுக்கை கேட்டேன்… தானே உறங்கும் விழியைக் கேட்டேன்… தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்…
ஆண் : நிலவில் நனையும் சோலை கேட்டேன்… நீலக் குயிலின் பாடல் கேட்டேன்… நடந்து போக நதிக்கரை கேட்டேன்… கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்…
ஆண் : தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்… எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்… துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்… தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்…
ஆண் : பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்… பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்… மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்… பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்…
ஆண் : உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்… ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்… வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்… வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்…
ஆண் : எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்… எரியும் தீயாய் கவிதை கேட்டேன்… கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்… காமம் கடந்த யோகம் கேட்டேன்…
ஆண் : சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்… சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்… உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்… உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்…
ஆண் : பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்… பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்… நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்… நடுங்க விடாத செல்வம் கேட்டேன்…
ஆண் : மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்… மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்… நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்… நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்…
ஆண் : விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்… அழுதால் மழை போல் அழவே கேட்டேன்… ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்… எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்…
ஆண் : பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்… சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்… ராஜராஜனின் வாளைக் கேட்டேன்… வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்…
ஆண் : பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்… பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்… மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்… மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்…
ஆண் : சொந்த உழைப்பில் சோறை கேட்டேன்… தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்… மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன்… புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்… புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்…