Category Archives: காதல் மன்னன்

காதல் மன்னன்

mettu-thedi-song-lyrics

மெட்டு தேடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.எஸ்.விஸ்வநாதன்பரத்வாஜ்காதல் மன்னன்

Mettu Thedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு…

BGM

ஆண் : அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு…

BGM

ஆண் : மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு…
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு…

ஆண் : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

குழு (ஆண்கள்) : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

BGM

ஆண் : கண்ட காதலை வெளிய சொல்ல…
நெஞ்சில் தைரியம் இல்லை பலருக்கு…
நீ இருட்டில் நின்று கண் அடித்தால்… ஆஹா…

BGM

ஆண் : நீ இருட்டில் நின்று கண் அடித்தால்…
அது எப்படி தெரியும் அவளுக்கு…

ஆண் : வண்டு வந்து சொல்லும் வரைக்கும்…
தன் வயசு தெரியாது மலருக்கு…
வண்டு வந்து சொல்லும் வரைக்கும்…
தன் வயசு தெரியாது மலருக்கு…

ஆண் : நீ உந்தன் நெஞ்சை தேங்காய் போல…
உடைத்து காட்டப்பா அவளுக்கு…

ஆண் : ஆஹா… மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம் சொல்லித்தாரேன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…

குழு (ஆண்கள்) : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

BGM

ஆண் : ஆ ஹா… ஆ ஆ ஆ ஆ ஆ ஆ… ஹோ ஹோ…
கனவில் மட்டும் கட்டி அணைத்தால்…
காதல் வருமா கன்னிக்கு…
கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால்…
கவிதை வருமா கழுதைக்கு…

ஆண் : கனவில் மட்டும் கட்டி அணைத்தால்…
காதல் வருமா கன்னிக்கு…
கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால்…
கவிதை வருமா கழுதைக்கு…

ஆண் : விரும்பிய காதலி கிடைக்காவிட்டால்…
மீசை வளர்த்தது என்னத்துக்கு…
சம்பிரதாயம் குறுக்கே வந்தால்…
சாய்த்து போடப்பா அடுப்புக்கு…

ஆண்: ஆஹா… மெல்லமெல்ல மிச்சம் எல்லாம் சொல்லித்தாரேன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…

ஆண் : மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு…
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு…

ஆண் : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

குழு (ஆண்கள்) : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

BGM


Notes : Mettu Thedi Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. மெட்டு தேடி பாடல் வரிகள்.


திலோத்தமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபரத்வாஜ் & அனுபமா பரத்வாஜ்காதல் மன்னன்

Thilothamma Song Lyrics in Tamil


ஆண் : நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்…
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்…
மனம் தாங்காதே…
பின் வாங்காதே…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

—BGM—

பெண் : இது மெய்தானே உன்னைக் கேட்கிறேன்…
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்…
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

பெண் : ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

பெண் : மாற்றம் மனதிலொரு மாற்றம்….
மாற்றம் விழியில் தடுமாற்றம்…
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு…

ஆண் : ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி…
காதல் அனைவருக்கும் பூவோ…
எனக்கு மட்டும் முள்ளோ…
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

ஆண் : இது சொல்லாத சோகம் அல்லவா…
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா…
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

பெண் : இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது…
அதை உன் காதில் சொன்னால் நல்லது…
மௌனம் தீர்ப்போமா…
மீண்டும் பார்ப்போமா…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…


Notes : Thilothamma Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. திலோத்தமா பாடல் வரிகள்.


வானும் மண்ணும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராபரத்வாஜ்காதல் மன்னன்

Vaanum Mannum Song Lyrics in Tamil


ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…

பெண் : ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை…
அது இனம் பார்ப்பதில்லை…
அது பொசுக்கென்று பூத்திடுதே…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…

பெண் : ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை…
அது இனம் பார்ப்பதில்லை…
அது பொசுக்கென்று பூத்திடுதே…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : நியாயமா இது பாவமா…
என்று சொல்ல யாரும் இங்கு இல்லை…

பெண் : மௌனமே மொழியானதால்…
அட பாஷை என்பதொரு தொல்லை…
அடுத்தொன்று தோன்றவில்லை…

ஆண் : ஆ ஆ… வெண்ணிலா நீராற்றிலே என்றும்…
வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை…

பெண் : வெண்ணிலா தங்க சேற்றிலே…
இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை…
இலக்கணம் பார்க்கவில்லை…

ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி…
பார்ப்பதுவும் இல்லை…

பெண் : ஆ ஆ… உறவு மாறலாம்…
உந்தன் கையில் அது இல்லை…

ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று…
மேகம் யோசிப்பது உண்டோ…
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு…
காதல் கூடுவது உண்டோ…
உணர்ச்சிக்கு பாதை உண்டோ…

ஆண் : விதியினும் காதல் வலியது…
இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ…
காதலின் திசை ஆயிரம்…
அது கண்டு சொன்னவர்கள் உண்டோ…
கனவுக்கு வேலியுண்டோ…

பெண் : காலம் சொல்லுவதை காதல்…
கேட்பதுவும் இல்லை…

ஆண் : ஆ ஆ… ஆசை என்ற நதி…
அணையில் நிற்பதுவும் இல்லை…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…

பெண் : மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே…


Notes : Vaanum Mannum Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. வானும் மண்ணும் பாடல் வரிகள்.


மாரிமுத்து மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவாபரத்வாஜ்காதல் மன்னன்

Marimuthu Marimuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்…
காதலுக்கு கோடு ஏதப்பா…

ஆண் : ஹேய்… பட்ட தண்ணி போட்டாலும்…
பாரின் தண்ணி போட்டாலும்…
காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா…

ஆண் : பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா…
அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா…
எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா…
சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா…

ஆண் : முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா…
ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா…
அட பூ இட்டு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா…
பூமியில நித்தம் வேற என்னப்பா… ஆ… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : ஹே தாமு… ஹே மாமு…
ஹே தாமு… ஹே மாமு…

ஆண் : என்ன மேட்டர் டாவு மேட்டர்…
அப்படி இப்படி மேல கீழ லெஃப்ட் ரைட் சைடு வாங்கி…
பத்தல பத்தல அடி வாங்கி எஸ்கேப்…

BGM

ஆண் : காலமும் வாழ்க்கையும் பூட்டியே கெடக்குது…
காதல் என்னும் சாவி உண்டு தொறக்க…
காதலும் கர்ப்பமும் தும்மலும் ஒண்ணுதான்…
மூனையும் எத வச்சு மறைக்க…

ஆண் : அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க…
அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க…
இதயம் விட்டு விட்டு துடிக்க…
அவ இருக்குற தெச மட்டும் மணக்க…

ஆண் : ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க…
எதுக்கப்பா பசி வந்து கெடக்க…
அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா…
ஈதுண்டு தெரியுது கிழக்கா… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM


Notes : Marimuthu Marimuthu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. மாரிமுத்து மாரிமுத்து பாடல் வரிகள்.


கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி & அட அலி அசாத்பரத்வாஜ்காதல் மன்னன்

Kanni Pengal Nenjukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்…

குழு (ஆண்கள்) : கையெழுத்து போட்டவன்…

பெண் : பத்துபேர்கள் மத்தியில்…

குழு (ஆண்கள்) : பளிச்சென்று உள்ளவன்…

பெண் : அழுக்கு சட்டை போட்டாலும்…

குழு (ஆண்கள்) : அழகாய் தோன்றும் ஆணழகன்…

பெண் : பெண்ணின் பின்னால் சுற்றாமல்…

குழு (ஆண்கள்) : பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ… ஓ ஓ…

பெண் : கல்வி இல்லா கண்ணியரும்…
கடிதம் எழுத செய்கிறவன்…
காதலித்த பெண் மனதில்…
கல்லை எறிந்து போகிறவன் எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண் : சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு…
உறவாடும் கனவை கண்டு உச்சி கொட்டும் உதடு…
ரதி தேவி பேத்தி போல மனைவி தேடும் மனசு…
எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு…

பெண் : சின்ன பெண்கள் இடையே…
சிக்கி கொண்ட போதும்…
அலைகள் முட்டும் பாறை போல…
அசையாதுள்ள வீரன் எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண்: முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை…
முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை…
நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி…
அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி…

பெண்: இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன் யாரோ…
அவன் பேரை கேளுங்கள்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண் : மதம் என்ன ஜாதி என்ன…

குழு (ஆண்கள்) : மறந்து போனோம் நாங்கள்…

பெண் : பல ஊரு பறவைக்கெல்லாம்…

குழு (ஆண்கள்) : இதுதான் வேடந்த்தாங்கள்…

பெண் : உணவொடு பசியை கூட…

குழு (ஆண்கள்) : பகிர்ந்து கொள்வோம் நாங்கள்…

பெண் : கிழமை தேதி பார்ப்பதும் இல்லை…

குழு (ஆண்கள்) : நகரும் எங்கள் நாட்கள்…

பெண் : எதுவும் இல்லை கையில் எல்லாம் உள்ளது நெஞ்சில்…
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்…
கையெழுத்து போட்டவன்…
பெண்ணின் பின்னால் சுற்றாமல்…
பெண்ணே சுற்றும் பேரழகன்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…
காதல்மன்னன்… காதல் மன்னன்…

BGM

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…


Notes : Kanni Pengal Nenjukkul Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் பாடல் வரிகள்.


உன்னைப் பார்த்த பின்பு நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்காதல் மன்னன்

Unnai Paartha Pinbu Naan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…
இரவும் பகலும் சிந்தித்தேன்…

ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…
இளமை இளமை பாதித்தேன்…
கொள்ளை கொண்ட அந்த நிலா…
என்னைக் கொன்று கொன்று தின்றதே…
இன்பமான அந்த வலி…
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

ஆண் : ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்…
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்…
என் உயிரில் நீ பாதி என்று…
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்…

ஆண் : எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்…
இப்படி என் மனம் துடித்ததில்லை…
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு…
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை…

ஆண் : நீ வருவாயோ…
இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னைத் தருவாயோ…
இல்லை கரைவாயோ…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—

ஆண் : நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்…
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி…
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்…
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி…

ஆண் : மரபு வேலிக்குள் நீ இருக்க…
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை…
இமயமலை என்று தெரிந்த பின்னும்…
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை…

ஆண் : நீ வருவாயோ…
இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னைத் தருவாயோ…
இல்லை கரைவாயோ…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…
இரவும் பகலும் சிந்தித்தேன்…

ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…
இளமை இளமை பாதித்தேன்…
கொள்ளை கொண்ட அந்த நிலா…
என்னைக் கொன்று கொன்று தின்றதே…
இன்பமான அந்த வலி…
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—


Notes : Unnai Paartha Pinbu Naan Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. உன்னைப் பார்த்த பின்பு நான் பாடல் வரிகள்.