Category Archives: காதலுக்கு மரியாதை

ennai-thalatta-song-lyrics

என்னை தாலாட்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Ennai Thalatta Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

BGM

ஆண் : பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள்…
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்…
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்…

ஆண் : இரவும் பகலும் என்னை வாட்டினாள்…
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்…
காதல் தீயை வந்து மூட்டினாள்…

ஆண் : நான் கேட்கும் பதில் இன்று வாராத…
நான் தூங்க மடி ஒன்று தாராத…
தாகங்கள் தாபங்கள் தீராத…
தாளங்கள் ராகங்கள் சேராத…
வழியோரம் விழி வைக்கிறேன்…

BGM

ஆண் : எனது இரவு அவள் கூந்தலில்…
எனது பகல்கள் அவள் பாா்வையில்…
காலம் எல்லாம் அவள் காதலில்…

ஆண் : கனவு கலையவில்லை கண்களில்…
இதயம் துடிக்கவில்லை ஆசையில்…
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்…

ஆண் : கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்…
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்…
நாளைக்கு நான் காண வருவாளோ…
பாதைக்கு நீரூற்றி போவாளோ…
வழியோரம் விழி வைக்கிறேன்…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
வருவாளோ…

ஆண் : நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தருவாளோ…

ஆண் : தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
வருவாளோ…

ஆண் : இல்லை ஏமாற்றம் தருவாளோ…
தருவாளோ…


Notes : Ennai Thalatta Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. என்னை தாலாட்ட பாடல் வரிகள்.

இது சங்கீத திருநாளோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரிணிஇளையராஜாகாதலுக்கு மரியாதை

Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil


BGM

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

பெண் : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்…
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்…

குழு (பெண்கள்) : செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்…

பெண் : தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்…
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்…

குழு (பெண்கள்) : அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்…

பெண் : பூவெல்லாம் இவள் போல அழகில்லை…

குழு (பெண்கள்) : பூங்காற்று இவள் போல சுகமில்லை…

பெண் : இது போல சொந்தங்கள் இனி இல்லை…

குழு (பெண்கள்) : எப்போதும் அன்புக்கு அழிவில்லை…
இவள்தானே நம் தேவதை…

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்…
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்…

குழு (பெண்கள்) : கண்ணில் மின்னும் ஒரு காவியம்…

பெண் : மனதில் வரைந்து வைத்த ஓவியம்…
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்…

குழு (பெண்கள்) : என்றும் எங்கும் இவள் ஞாபகம்…

பெண் : இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்…
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்…
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்…
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்…
எப்போதும் தாலாட்டுவேன்…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

குழு (பெண்கள்) : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…


Notes : Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. இது சங்கீத திருநாளோ பாடல் வரிகள்.

ஒரு பட்டாம்பூச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & கே.ஜே யேசுதாஸ் இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oru Pattampoochi Song Lyrics in Tamil


BGM

ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

BGM

ஆண் : ஏனோ மனது…
உன்னை கண்ட பொழுது…
காற்றில் ஒரு மேகமென ஆச்சு…

பெண் : ஏனோ எனக்கு…
காதல் வந்த பிறகு…
கண்ணாம்மூச்சி ஆடும் கதை ஆச்சு…

ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே…
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்…

பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே…
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்…

ஆண் : உன் சேலை நூலாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே…

BGM

ஆண் : பூவான என் நெஞ்சம் போராட…
தூங்காத கண்ணோடு நீராட…

பெண் : உறவான நிலவொன்று சதிராட…
கடிதங்கள் வாராமல் உயிா் வாட…
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்…

குழு (பெண்கள்) : பூஞ்சோலை நீதானம்மா…
ஒரு பூ சிந்த பிடிவாதமா…
மௌனங்கள் மொழியாகுமா…

BGM

பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு…
எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்…

ஆண் : ராத்திாி பொழுதும் பௌா்ணமி நிலவும்…
என் மனதை சுட்டு விட்டு போகும்…

பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே…
பனித்துளி என்னை சுடுமே சுடுமே…

ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே…
அள்ளித்தர கங்கை வருமே வருமே…

பெண் : மேகங்கள் தேனூற்றுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : புது மொட்டுக்கள் பூவாகுமே…

குழு (பெண்கள்) : ஆ ஆ ஆ…

பெண் : ஒரு பூமாலை தோள் சேருமே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே…
வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே…
அட காதல் இதுதானா…

குழு (பெண்கள்) : பூச்சூட பூ வேணுமா…
பூ இங்கே நீதானம்மா…
அடி கல்யாண ஊா்கோலமா…
இனி எப்போதும் காா்காலமா…

பெண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…

ஆண் : ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே…


Notes : Oru Pattampoochi Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு பட்டாம்பூச்சி பாடல் வரிகள்.


ஹோ பேபி பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரணி & விஜய்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Oh Baby Baby Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

பெண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…

ஆண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

பெண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…

ஆண் : ஹே… காதல் நெஞ்சை…

பெண் : ஹே… காதல் நெஞ்சை…

ஆண் : யாரோடு சொல்வேன்…

பெண் : யாரோடு சொல்வேன்…

ஆண் : வந்து போன தேவதை…

பெண் : வந்து போன தேவதை…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

பெண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…

BGM

பெண் : ஹே… ஹே ஹே… ஹே… ஹே ஹே…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…

BGM

ஆண் : பார்வை விழுந்ததும் உயிர்வரை தேகம் நனைந்தது…
சுவாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது…

ஆண் : நேற்று இந்த மாற்றம்…
எந்தன் நெஞ்சில் இல்லை…
காற்று எந்தன் காதில்…
கவிதை சொன்னதில்லை…

ஆண் : ஹோ… இருதயம் இருபக்கம் துடிக்குதே…
அலைவந்து அலைவந்து அடிக்குதே…
எனக்குள்ளேதான்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ பேபி பேபி…
என் காதல் ஜோதி…

BGM

ஆண் : ஜீவன் மலர்ந்தது…
புது சுகம் எங்கும் வளர்ந்தது…
தேவன் எழுதிடும்…
தீர்ப்புகள் இதுதான் புரிந்தது…

ஆண் : ஊரைக் கேட்கவில்லை…
பேரும் தேவையில்லை…
காலம் தேசம் எல்லாம்…
காதல் வானின் எல்லை…

ஆண் : ஓ… தேவதை தரிசனம் கிடைத்ததே…
ஆலய மணி எங்கும் ஒலித்ததே…
என்னைத் தந்தேன்…

ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…

ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…

ஆண்: ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி யே…


Notes : Oh Baby Baby Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹோ பேபி பேபி பாடல் வரிகள்.


ஆனந்த குயிலின் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே. எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன் இளையராஜாகாதலுக்கு மரியாதை

Aanantha Kuyilin Pattu Song Lyrics in Tamil


ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…

BGM

ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…
கிளிகளின் கூண்டுக்குள்ளே…
புது உலகம் பிறந்ததே…
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே…
ஒரு வானம் விாிந்ததே…
கனிகள் தித்திப்பா…
கவிதை தித்திப்பா…
அது அன்பை விட தித்திப்பா…

பெண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…

BGM

ஆண்: பூமி எங்கும் கண்டதில்லை…
பாசத்தை உன் போலே…
பெண்: வேறெதுவும் தேவை இல்லை…
அன்புக்கு முன்னாலே…

BGM

ஆண்: நெஞ்சுக்குள்ளே பூ மலரும்…
வீட்டுக்குள் வந்தாலே…
பெண்: நிம்மதியில் கண் வளரும்…
பாட்டுக்கள் தந்தாலே…

BGM

ஆண்: இந்த சொந்தங்கள் போதுமே…
எங்கள் இன்பங்கள் கூடுமே…
பெண்: அன்பென்னும் தீபம் ஏற்றிய…
வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்…
ஆண்: வீடு என்றால் மோட்சம் என்றால்…
வீடு கண்டோம் நேசத்திலே…

BGM

பெண்: அன்பினிலே அன்பினிலே…
ஆலயம் கண்டேனே…
அண்ணன்களின் கைகளிலே….
தீபமும் நான் தானே…

BGM

ஆண்: பாசத்திலே வாசம் தரும்…
பூவனம் நீதானே…
நேசத்திலே ராகம் தரும்…
வீணையும் நீதானே…

BGM

பெண்: சிலா் வேதம் பாடலாம்
சிலா் கீதை தேடலாம்…
நான் கண்டவேதம்…
நான் கண்ட கீதை…
அண்ணனின் வாா்த்தைகள் தான்…

ஆண்: வானில் நிலா தேய்ந்திடலாம்…
பாச நிலா தேய்ந்திடுமோ…
பெண்: ஆனந்த குயிலின் பாட்டு…
ஆண்: தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பெண்: பூக்களில் நனையும் காற்று…
ஆண்: தினம் எங்களின் தோட்டத்திலே…

பெண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே…
புது உலகம் பிறந்ததே…
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே…
ஒரு வானம் விாிந்ததே…

ஆண்: கனிகள் தித்திப்பா…
கவிதை தித்திப்பா…
அது அன்பை விட தித்திப்பா…

ஆண் & பெண்: ஆனந்த குயிலின் பாட்டு…
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…
பூக்களில் நனையும் காற்று…
தினம் எங்களின் தோட்டத்திலே…


Notes : Aanantha Kuyilin Pattu Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆனந்த குயிலின் பாட்டு பாடல் வரிகள்.

அய்யா வூடு தொறந்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஅருண்மொழி & இளையராஜாஇளையராஜாகாதலுக்கு மரியாதை

Ayya Veedu Therandhuthan Song Lyrics in Tamil


ஆண்: வீட்டுக்கு கதவிருக்கு கதவுக்கு பூட்டிருக்கு…
வானத்த பூட்டி வைப்பதாரடா…
அன்புக்கு மனசிருக்கு ஆசைக்கு அளவிருக்கு…
கடலுக்கு அணை இங்கு ஏதடா…
ஆண்: யாரிங்கு வந்தாலும் யாரெங்கு போனாலும்…
கடல் நீரு கொறையாது போங்கடா…
கரையோரம் உறவாட வாங்கடா…

BGM

ஆண்: அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு…
உள்ளே புகுந்து பந்தி போடு…

BGM

முத்துக்கடலு மூடியா கெடக்கு …
முடிஞ்சா எடுத்து மாலை போடு…

BGM

ஆண்: ஒருபோதும் கலங்காது நாளைக்கு…
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு…
நீயும் இங்கே நம்மாளு…
சோகம் என்ன உன்னோடு… கொண்டாடு…

ஆண்: அய்யா வூடு…
குழு: தொறந்து தான் கெடக்கு…
ஆண்: உள்ளே புகுந்து…
குழு: பந்தி போடு…
ஆண்: முத்துக்கடலு…
குழு: மூடியா கெடக்கு…
ஆண்: முடிஞ்சா எடுத்து…
குழு: மாலை போடு…

குழு: ஜிங்க் ஜிக் ஜிங்க்…
ஜிக் ஜூம் ஜூம்…

BGM

ஆண்: ஹே… புள்ளாண்டா… புள்ளாண்டா…
காசோட யாரிங்கு வாராண்டா…
சொல்லேண்டா சொல்லேண்டா
எதுக்கு காசெல்லாம் வூட்டுவூட்டு போறான்டா…

ஆண்: இருக்கும் வரைக்கும்…
குழு: சூட்டு கோட்டு…
ஆண்: ஹே அடிப்பான் பாரு…
குழு: தாட்டு பூட்டு…

ஆண்: அட பாட்டன் பூட்டன்…
குழு: கதைய கேட்டு…
ஆண்: ம்ம் போவான் இவனும்…
குழு: பழைய ரூட்டு…

ஆண்: பூமி இது வாடக வூடு …
புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு…
சத்தியத்த நெஞ்சுல வச்சு…
சந்தோசமா சங்கதி போடு…
கடலும் அலையும் சேர்ந்துதான் பாடும்…
எப்போதும் கொண்டாட்டம் ஹே…

ஆண்: அய்யா வூடு…
குழு: ஹே ஹே ஹே ஹே…
ஆண்: அய்யா வூடு…
குழு: ஹே ஹே ஹே ஹே…

ஆண்: அய்யா வூடு…
குழு: தொறந்து தான் கெடக்கு…
ஆண்: உள்ளே புகுந்து…
குழு: பந்தி போடு…
ஆண்: முத்துக் கடலு…
குழு: மூடியா கெடக்கு…
ஆண்: முடிஞ்சா எடுத்து…
குழு: மாலை போடு…

BGM

பெண்கள்(குழு) : மண் மேலே மண் மேலே…
எல்லார்க்கும் சாப்பாடு யாராலே…
ஆண்கள்(குழு) : தந்தாலே தந்தாலே…
நம்மோட சாப்பாடு நீர் மேலே…

ஆண்: கடலில் ஆடும் அலைய பாத்தேன்…
வெளிச்சம் கொடுக்கும் நிலவ பாத்தேன்…
கேள்வி ஒன்னு நானும் கேட்டேன்…
பதிலே இல்ல மலைச்சு போனேன்…

ஆண்: கண்ணுக்கெட்டும் தூரம் தூரம்…
மனுஷனதான் காணோம் காணோம்…
கலி முடியும் நேரம் நேரம்…
புதுமனுஷன் வேணும் வேணும்…
மனசும் மனசும் கலந்து தான்…
இருந்தா எப்போதும் கொண்டாட்டம் தான் ஹே…

குழு: அய்யா வூடு…
ஆண்: ஹே தகிட தகிட தகிட தகிட…
குழு: அய்யா வூடு…
ஆண்: ஹே இந்தா இந்தா இந்தா இந்தா…

ஆண்: அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு…
உள்ளே புகுந்து பந்தி போடு…
முத்துக்கடலு மூடியா கெடக்கு…
முடிஞ்சா எடுத்து மாலை போடு…

குழு: ஒருபோதும் கலங்காது நாளைக்கு…
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு…
ஆண்: நீயும் இங்கே நம்மாளு சோகம்…
என்ன உன்னோடு கொண்டாடு…
குழு: ஹே…

குழு : அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு…
ஆண் : ஹே…
குழு : உள்ளே புகுந்து பந்தி போடு…
ஆண் : ஹே…
குழு : முத்துக் கடலு மூடியா கெடக்கு…
ஆண் : ஹே…
குழு : முடிஞ்சா எடுத்து மாலை போடு…
ஹே ஹே ஹே…


Notes : Ayya Veedu Therandhuthan Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. அய்யா வூடு தொறந்து பாடல் வரிகள்.