Category Archives: ராஜாவின் பார்வையிலே

அம்மன் கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Amman Koyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்…
பாடிடும் வேளையில் பாடலில் கவனம்…
பாவையைக் கண்டால் பருவத்தில் கவனம்…
பார்க்கின்ற வேலையில் மகன் மனம் சிதறும்…

ஆண் : அவன் மனமோ அது எங்கே சென்றாலும்…
இவள் மனமோ அவன் பின்னாலே போகும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…

BGM

ஆண் : காமுகன் ஆனாலும் கல் நெஞ்சன் ஆனாலும்…
கயவன் என்றே அவன் பெயர் எடுத்தாலும்…
பொய் சொல்லிப் பிழைக்கும் பிள்ளை என்றாலும்…
பூமியில் ஆயிரம் தவறு செய்தாலும்…

ஆண் : தன் மகனோ அவன் யாரான போதும்…
அவன் நலமே இந்தத் தாய் உள்ளம் தேடும்…
என்றென்றும் அவள் எண்ணங்கள்…
நலமாக நாம் வாழ நல்வாழ்த்துக் கூறும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…

ஆண் : நின்றாலும் எங்கு சென்றாலும்…
எப்போதும் எது செய்தாலும்…
எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…

ஆண் : அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…


Notes : Amman Koyil Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. அம்மன் கோயில் பாடல் வரிகள்.


இவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Ival Yaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…

BGM

ஆண் : காதல் வாழ்வு கானல் என்று நேற்றுப் பேசினேன்…
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்…

பெண் : காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்…
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்…

ஆண் : கண்ணே பசும் பொன்னே…
வந்தேன் உந்தன் பின்னே…

பெண் : கண்ணா மணிவண்ணா…
உன் பேர் தினம் சொன்னேன்…
உனைக் கண்டேன் கனிந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…
ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…

BGM

பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன் வாசல் வந்ததே…
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே…

ஆண் : நேரம் காலம் கூடும் போது நேசம் வென்றதே…
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே…

பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்…

ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்…
அதில் என்னை இழந்தேன்…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல…
என்றென்றும் வாழும் காதல்…
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல…
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்…

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை…

ஆண் : இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
இவள் யாரோ…


Notes : Ival Yaro Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. இவள் யாரோ பாடல் வரிகள்.


Oru Sudar Iru Sudar Song Lyrics in Tamil

ஒரு சுடர் இரு சுடர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாராஜாவின் பார்வையிலே

Oru Sudar Iru Sudar Song Lyrics in Tamil


BGM

குழு : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

குழு : கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்…
அண்ணக் கிளியே ஏற்று…
காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்…
அம்மன் அடியே போற்று…

குழு : நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…
நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…

பெண் : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

BGM

பெண் : நான் ஓர் வரம் உன்னிடம் வாங்க வேண்டும்…

குழு : மங்கலக் குங்குமம் மஞ்சள் பூசியே…
பண்டிகை நாள் என ஒன்றாய்க் கூடியே…

ஆண் : நூறாண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்…

குழு : ஜோதியை வீதியில் எங்கும் ஏந்தியே…
ஆதியை அன்னையை நெஞ்சில் போத்தியே…

பெண் : நாம் கேட்கும் யாவும் நம் கையில் சேரும்…
நாம் பார்க்கும் யாவும் பூஞ்சோலை ஆகும்…

ஆண் : வானம் பாடிகள் கானம் பாடிடும்…
பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுவதும்…

பெண் : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…

ஆண் : திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

பெண் : கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்…
அண்ணக் கிளியே ஏற்று…

ஆண் : காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்…
அம்மன் அடியே போற்று…

BGM

ஆண் : ஓர் ஆயிரம் ஆசைகள் ஊஞ்சல் ஆடும்…

குழு : நெஞ்சிலே நெஞ்சிலே நேசம் பூத்ததே…
கொஞ்சலாய் கொஞ்சவே நேரம் வாய்த்ததே…

பெண் : ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்…

குழு : தோகையின் தோகையின் தேகம் வாடுது…
தென்றலும் தென்றலும் ராகம் பாடுது…

ஆண் : பொன் மாலை தோறும் பூந்தீபம் ஏற்றும்…
சிங்காரம் கூடும் நல் யோகம் வேண்டும்…

பெண் : தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்…
என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்…

ஆண் : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…

பெண் : திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…

ஆண் : கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்…
அண்ணக் கிளியே ஏற்று…

பெண் : காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்…
அம்மன் அடியே போற்று…

குழு : நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…
நல்ல நாளாம் திரு நாளாம்…
ஒளிக் கோலம் திருக் கோலம்…

குழு : ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…


Notes : Oru Sudar Iru Sudar Song Lyrics in Tamil. This Song from Rajavin Parvaiyile (1995). Song Lyrics penned by Vaali. ஒரு சுடர் இரு சுடர் பாடல் வரிகள்.