Category Archives: முத்து

விடுகதையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Vidukathaiya Song Lyrics in Tamil


ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ…
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ…
அழுது அறியாத என் கண்கள்…
ஆறு குளமாக மாறுவதோ…

ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை…
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…

ஆண் : உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்…
நான் செய்த தீங்கு என்ன…
நான் செய்த தீங்கு என்ன…

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்…
எந்த இடம் சேரும் யார் கண்டார்…
மனிதர் கொண்டாடும் உறவுகளோ…
எந்த மனம் சேரும் யார் கண்டார்…

ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி…
அது கடல் சென்று சேர்வது காலன் விதி…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…

ஆண் : உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்…
இரண்டும் தீர்வதெப்போ…
இரண்டும் தீர்வதெப்போ…

BGM

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே…
ஒதுங்க கூடாது நல்லவனே…
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்…
தொல்லை நேராது தூயவனே…

ஆண் : கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்…
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்…

ஆண் : காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…

ஆண் : வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்…
நாங்கள் போவதெங்கே…
நாங்கள் போவதெங்கே…


Notes : Vidukathaiya Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. விடுகதையா பாடல் வரிகள்.


கொக்கு சைவக் கொக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம், தேனி குஞ்சரம்மா, ஃபெபி மணி & கங்கா சித்தராசுஏ.ஆர்.ரகுமான்முத்து

Kokku Saiva Kokku Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

ஆண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

ஆண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

ஆண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது…
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது…

ஆண் : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது…
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…

குழு : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

குழு : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது…
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது…

குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது…
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…

குழு : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
வெரதம் முடிச்சிருச்சாம்…

BGM

பெண் : பந்தாடும் வயசுப்பையா…
குழு : பையா…
பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா…
குழு : கைய்யா…

பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே…
குழு : லே லே லே…
பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா…
குழு : ஐய்யா…

பெண் : பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்…
குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ…
நீ டுவல் டைம்ஸ் சொல்லு…

பெண் : நித்தம் நீ ஆறு முற…
குழு : முற…
பெண் : முத்தங்கள் போட்டுவிடு…
குழு : விடு…

பெண் : நாளுக்கு மூணு முற…
குழு : முற… அஹ ஹா…
பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு…
குழு : விடு…

பெண் : நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா…
குழு : பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா…

பெண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்…

பெண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

BGM

ஆண் : வயசான சுந்தரியே…
குழு : யே…
ஆண் : மன்மதன் மந்திரியே…
குழு : யே…

ஆண் : தாம்பத்யப் பாடத்திலே…
குழு : லே லே லே…
ஆண் : பீ எச் டீ முடிச்சவளே…

ஆண் : அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி…
குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு…

ஆண் : இந்நாளில் மனிதனுக்கு…
குழு : க்கு…
ஆண் : சோத்துக்கு வழியில்லையே…
குழு : ஏ யே…

ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க…
குழு : யே யே யே…
ஆண் : யாருக்கும் பொழுதில்லையே…

பெண் : ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு…
குழு : பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு…

ஆண் : கொக்கு சைவக் கொக்கு…
ஒரு கெண்ட மீனக் கண்டு…
குழு : வெரதம் முடிச்சிருச்சாம்…

ஆண் : மீனு மேலக் கண்ணு…
அது ஒத்தக் காலில் நின்னு…
குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்…

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது…
ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது…

குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு…

BGM


Notes : Kokku Saiva Kokku Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. கொக்கு சைவக் கொக்கு பாடல் வரிகள்.


Thillana Thillana Song Lyrics in Tamil

தில்லானா தில்லானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Thillana Thillana Song Lyrics in Tamil


BGM

ஆண் : தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

ஆண் : தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

ஆண் : ஹோ… மஞ்சக் காட்டு மைனா…
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

BGM

ஆண் : கண்ணு வச்சதும் நீதானா…
வெடி கண்ணி வச்சதும் நீதானா…
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட…
காமன் சொன்னானா…

ஆண் : தில்லானா தில்லானா…
பெண் : நான் தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

ஆண் : மஞ்சக் காட்டு மைனா…
பெண் : உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

BGM

பெண் : பட்டிக்காட்டு முத்து நீயோ…
படிக்காத மேதை…
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே…
துடித்தாளே ராதை…

ஆண் : கள்ளம் கபடமில்லை நானோ…
அறியாத பேதை…
மக்கள் மனம்தானே எந்தன்…
வழுக்காத பாதை…

பெண் : ஹேய்… கொடுத்தால நான் வந்தேன்…
எடுத்தால வேண்டாமா…

ஆண் : அடுத்தாளு பாராமல்…
தடுத்தாள வேண்டாமா…

பெண் : முடி கொண்ட உன் மார்பில்…
முகம் சாய்க்க வேண்டாமா…

ஆண் : முடி போட்டு நம் சொந்தம்…
முடிவாக வேண்டாமா…

பெண் : தடையேதும் இல்லாமல்…
தனித்தாள வேண்டாமா…

ஆண் & பெண் : தில்லானா தில்லானா…
பெண் : நான் தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா… ஹோ…

ஆண் : மஞ்சக் காட்டு மைனா…
பெண் : உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

BGM

ஆண் : கண்ணு வச்சதும் நீதானா…
வெடி கண்ணி வச்சதும் நீதானா…

பெண் : கட்டில் போட்டு நீ கப்பம் கட்ட…
காமன் சொன்னானா…

BGM

பெண் : திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…

BGM

பெண் : திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…
திக்குத் திக்கு நெஞ்சில்…

BGM

ஆண் : சிவப்பான ஆண்கள் இங்கே…
சிலகோடி உண்டு…
கறுப்பான என்னைக் கண்டு…
கண் வைத்ததென்ன…

பெண் : கடல் வண்ணம் வானின் வண்ணம்…
கருவண்ணம்தானே…
கடல் வானம் காணும் போது…
உனைக் கண்டேன் நானே…

ஆண் : மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே…
பெண் : மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே…

ஆண் : சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே…
பெண் : சிக்குப்பட்ட எள் போலே…
நொக்கு பட்டேன் உன்னாலே…

ஆண் : கட்டுத்தறி காளை நானும்…
கட்டுப்பட்டேன் உன்னாலே…

ஆண் : தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

ஆண் : தில்லானா தில்லானா…
நீ தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

ஆண் : ஹோ… மஞ்சக் காட்டு மைனா…
என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

BGM

ஆண் : கண்ணு வச்சதும் நீதானா…
வெடி கண்ணி வச்சதும் நீதானா…
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட…
காமன் சொன்னானா…

ஆண் : தில்லானா தில்லானா…
பெண் : நான் தித்திக்கின்ற தேனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

குழு : தில்லானா தில்லானா தில்லானா…

ஆண் : மஞ்சக் காட்டு மைனா…
பெண் : உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

BGM

பெண் : திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா…

BGM


Notes : Thillana Thillana Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. தில்லானா தில்லானா பாடல் வரிகள்.


ஒருவன் ஒருவன் முதலாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Oruvan Oruvan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி…
உலகில் மற்றவன் தொழிலாளி…
விதியை நினைப்பவன் ஏமாளி…
அதை வென்று முடிப்பவன் அறிவாளி…

BGM

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி…
உலகில் மற்றவன் தொழிலாளி…
விதியை நினைப்பவன் ஏமாளி…
அதை வென்று முடிப்பவன் அறிவாளி…

ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு…
பூப்பறிக்க கோடரி எதற்கு…
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு…
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு…

BGM

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி…
உலகில் மற்றவன் தொழிலாளி…
விதியை நினைப்பவன் ஏமாளி…
அதை வென்று முடிப்பவன் அறிவாளி…

BGM

ஆண் : மண்ணின் மீது மனிதனுக்காசை…
மனிதன் மீது மண்ணுக்காசை…
மண்ணின் மீது மனிதனுக்காசை…
மனிதன் மீது மண்ணுக்காசை…

ஆண் : மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது…
இதை மனம்தான் உணர மறுக்கிறது…

ஆண் : கையில் கொஞ்சம் காசு இருந்தால்…
நீதான் அதற்கு எஜமானன்…
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்…
அதுதான் உனக்கு எஜமானன்…

ஆண் : வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு…
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு…

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி…
உலகில் மற்றவன் தொழிலாளி…
விதியை நினைப்பவன் ஏமாளி…
அதை வென்று முடிப்பவன் அறிவாளி…

BGM

ஆண் : வானம் உனக்கு பூமியும் உனக்கு…
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு…
வானம் உனக்கு பூமியும் உனக்கு…
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு…

ஆண் : வாழச் சொல்லுது இயற்கையடா…
வாழ்வில் துன்பம் செயற்கையடா…

ஆண் : பறவைகள் என்னைப் பார்க்கும் போது…
நலமா நலமா என்கிறதே…
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது…
முத்து முத்து என்கிறதே…

ஆண் : இளமை இனிமேல் போகாது…
அட முதுமை எனக்கு வாராது…

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி…
உலகில் மற்றவன் தொழிலாளி…
விதியை நினைப்பவன் ஏமாளி…
அதை வென்று முடிப்பவன் அறிவாளி…

BGM

ஆண் : ஹான்… ஒருவன் ஒருவன் முதலாளி…
உலகில் மற்றவன் தொழிலாளி…
விதியை நினைப்பவன் ஏமாளி…
அதை வென்று முடிப்பவன் அறிவாளி…

ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு…
பூப்பறிக்க கோடரி எதற்கு…
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு…
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு…

BGM


Notes : Oruvan Oruvan Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் வரிகள்.


குலுவாலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண், கே.எஸ். சித்ரா, கல்யாணி மேனன்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Kuluvalile Song Lyrics in Tamil


குழு : குலுவாலிலே…
குலுவாலிலே…
மொட்டு மலர்ந்தல்லோ…

BGM

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…
தேன்குடிக்க…

ஆண் : ஹே… தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ…

ஆண் : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

குழு : ஓமனத் திங்கள் கீழாமோ…
நல்ல கோமளத் தாமரப்பூவோ…
பூவில் நீரங்ஙய மதுவோ…
பரி பூஜெந்து தண்டே இலாவோ…

BGM

குழு : ரங்கநாயகி… ரங்கநாயகி…
ரங்கநாயகி… ரங்கநாயகி…

ஆண் : ஹே… ரங்கநாயகி… ரங்கநாயகி…
மச்சான் மனச பறிச்சாயே…

பெண் : உங்க முடி கலைவதுபோல்…
என்மனச நீ கலைச்சாயே…

ஆண் : நான் என்ன கலைக்கிற ஆளா…
பொய் சொல்லக் கூடாதே…

பெண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

ஆண் : தேன்குடிக்க…
லவ் லவ் லவ்… ஏய் ஏய் ஏய்…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வண்ணலோ…
வண்ணலோ…

குழு : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
ஐயே பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

BGM

குழு : மாணிக்க வீணையாய்…
மலர்மகள் வாழ்த்துன்ன…
மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட…

BGM

குழு : என்ன கட்சி நம்ம கட்சி…
என்ன கட்சி நம்ம கட்சி…

பெண் : என்ன கட்சி நம்ம கட்சி…
நம்ம கட்சி காமன் கட்சி…

ஆண் : கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு…
காலத்தின் கையில் அது இருக்கு…

பெண் : கனியட்டும் காலம் நேரம் உமக்கு…
என்னமோ திட்டம் இருக்கு…

ஆண் : குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ…
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ…

பெண் : தேன்குடிக்க நேரம் உண்டல்லோ…
உண்டல்லோ…
தேவதைக்கு வெட்கம் வண்ணலோ…
வண்ணலோ…

பெண் : முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ…
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ…

குழு : ஓமனத் திங்கள் கீழாமோ…
நல்ல கோமளத் தாமரப்பூவோ…
பூவில் நீரங்ஙய மதுவோ…
பரி பூஜெந்து தண்டே இலாவோ…

BGM


Notes : Kuluvalile Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. குலுவாலிலே பாடல் வரிகள்.