Category Archives: பம்பாய்

பம்பாய்

Poovukkenna Poottu Song Lyrics in Tamil

பூவுக்கென்ன பூட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநோயல் ஜேம்ஸ் & அனுபமாஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Poovukkenna Poottu Song Lyrics in Tamil


பெண் : பூவுக்கென்ன பூட்டு…
காற்றுக்கென்ன ரூட்டு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : வானும் மண்ணும் யாருக்கு…
நீயும் நானும் யாருக்கு…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

BGM

பெண் : நீ சிரிச்சா தீவானா…
கை கொடுத்தா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீ சிரிச்சா தீவானா…
கை கொடுத்தா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…
குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : சோலைகிளி என்ன ஒரு கவலை…
எப்போதும் பறவைகள் அழுவதில்லை…
சூரியனில் என்றும் இரவு இல்லை…
எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை…

குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

பெண் : காணத்தானே கண்கள்…
கண்ணீர் சிந்த இல்லை…
மேகங்கள் மண் விழுந்து…
காயங்கள் ஆனதில்லை…

ஆண் : காணத் தானே கண்கள்…
கண்ணீர் சிந்த இல்லை…

பெண் : மேகங்கள் மண் விழுந்து…
காயங்கள் ஆனதில்லை வாழத்தானே…

BGM

பெண் & ஆண் : வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை…
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை…

BGM

பெண் : பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன…
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு…
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு…

ஆண் : வெல்லத்தானே வீரம்…
கொல்வதற்கு இல்லை…
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு…

BGM

குழு : குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…
குல்லா குல்லா ஹல்லா குல்லா…

குழு : காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை…
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை…
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன…
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை…

குழு : நீ சிரிச்சா தீவானா…
கைகொடுத்தா மஸ்தானா…

BGM

குழு : நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…

BGM

குழு : நீ சிரிச்சா தீவானா…
கைகொடுத்தா மஸ்தானா…
நீயும் நானும் ஒன்னானா…
ரூப்பு தேரா மஸ்தானா…

BGM


Notes : Poovukkenna Poottu Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்கென்ன பூட்டு பாடல் வரிகள்.


அந்த அரபிக்கடலோரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ. ஆர். ரகுமான்ஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Andha Arabi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யா பி யே…

BGM

ஆண் : அந்த அரபிக்கடலோரம்…
ஓர் அழகைக் கண்டேனே…
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளுக்கு…
கண்கள் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : ஹே பள்ளித் தாமரையே…
உன் பாதம் கண்டேனே…
உன் பட்டுத் தாவணி சரிய சரிய…
மீதம் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

BGM

ஆண் : சேலை ஓரம் வந்து ஆளை மோதியது…
ஆஹா… என்ன சுகமோ…
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது…
ஆஹா… என்ன இதமோ…

ஆண் : சித்தம் கிலு கிலுக்க…
ரத்தம் துடிதுடிக்க…
முத்தம் நூறு விதமோ…

ஆண் : அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன்…
ஐயோ தெய்வப் பதமோ…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : அந்த அரபிக்கடலோரம்…
ஓர் அழகைக் கண்டேனே…
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளுக்கு…
கண்கள் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : ஹே… பள்ளித் தாமரையே…
உன் பாதம் கண்டேனே…
உன் பட்டுத் தாவணி சரிய சரிய…
மீதம் கண்டேனே…

ஆண் : ஹம்மா… ஹே ஹே ஹம்மா…

BGM

ஆண் : சொல்லி கொடுத்த பின்னும்…
அள்ளிக் கொடுத்த பின்னும்…
முத்தம் மீதமிருக்கு…

ஆண் : தீபம் மறைந்த பின்னும்…
பூமி இருண்ட பின்னும்…
கண்ணில் வெளிச்சமிருக்கு…

ஆண் : வானம் பொழிந்த பின்னும்…
நனைந்த பின்னும்…
சாரல் சரசமிருக்கு…

ஆண் : காமம் கலைந்த பின்னும்…
கண்கள் கடந்த பின்னும்…
காதல் மலர்ந்துகிடக்கு…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : அந்த அரபிக்கடலோரம்…
ஓர் அழகைக் கண்டேனே…
அந்தக் கன்னித் தென்றல் ஆடை களுக்கு…
கண்கள் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா…

ஆண் : ஹம்மா…


Notes : Andha Arabi Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. அந்த அரபிக்கடலோரம் பாடல் வரிகள்.


மலரோடு மலரிங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்ஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Malarodu Malaringu Song Lyrics in Tamil


BGM

பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

குழு : வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை…

பெண் : மனதோடு மனம் சேரட்டும்…

குழு : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…

குழு : துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்…
கடலோடு கடல் சேரட்டும்…
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்…
விண்ணோடு விண் சேரட்டும்…
விடியாத இரவொன்றும் வானில் இல்லை…
ஒளியோடு ஒளி சேரட்டும்…

BGM


Notes : Malarodu Malaringu Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. மலரோடு மலரிங்கு பாடல் வரிகள்.


குச்சிக் குச்சி ராக்கம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன், சுவர்ணலதா, ஜி.வி. பிரகாஷ் குமார், பாம்பே சாரதா & ஸ்வேதா மோகன்ஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Kuchi Kuchi Rakkamma Song Lyrics in Tamil


BGM

குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…
குச்சிக் குச்சி ராக்கம்மா…
கூட சாலி ராக்கம்மா…

குழு : ஹையா ஹையா ஹைய்யா…
ஹையா ஹையா ஹைய்யா…
ஹையா ஹையா ஹைய்யா…
ஹையா ஹையா…

ஆண் : குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…

குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா…
கூடசாலி ராக்கம்மா…

பெண் : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா…
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா…
சாதி சனம் தூங்கலையே…
சாமக்கோழி கூவலையே…

பெண் : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா…
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா…

BGM

ஆண் : காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்…
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்…
ஆணி வேருக்கு மண் பிடிக்கும்…
ஹே… அப்பனுக்குப் பெண் பிடிக்கும்…

பெண் : அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்…
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்…
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே…
பொம்பளைக்கு கிளி பிடிக்கும்…

ஆண் : அள்ளும் பகலுமே நனைந்தாலும்…
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்…
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்…
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்…

ஆண் : ஆஆ… பொட்டப்புள்ள பெத்துக் கொடு…
பெண் : போதும் என்னை விட்டு விடு…

ஆண் : ஆஆஆ… பொட்டப்புள்ள பெத்துக் கொடு…
பெண் : போதும் என்னை விட்டு விடு…

ஆண் : வெளிச்சம் எரியவிட்டு…
வெக்கத்தை அணைத்துவிடு…

பெண் : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா…
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா…
சாதி சனம் தூங்கலையே…
சாமக்கோழி கூவலையே…

குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா…
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா…
சாதி சனம் தூங்கலையே…
சாமக்கோழி கூவலையே…

குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா…
கூட சாலி ராக்கம்மா…

BGM

குழு : ஹையா ஹையா ஹை ஹையா…
ஹையா ஹையா ஹை…
ஹையா ஹையா ஹை ஹையா…
ஹையா ஹையா ஹை…

குழு : ஹையா ஹையா ஹையா ஹையா…
ஹையா ஹையா ஓய்ஓய்…
ஹையா ஹையா ஹை ஹையா…
ஹையா ஹையா ஓய்ஓய் ஓ ஓ…

BGM

பெண் : சிறகை நீங்கினால் பறவையில்லை…
திரியை நீங்கினால் தீபமில்லை…
உன்னை நீங்கினால் நானில்லை…
உனக்கிது புரியவில்லை…

ஆண் : உடலை நீங்கினால் உயிருமில்லை…
ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை…
உன்னை நீங்கினால் நானில்லை…
உனக்கிது தெரியவில்லை…

பெண் : பூமி சுற்றுவது நின்றுவிட்டால்…
புவியில் என்றுமே மாற்றமில்லை…
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால்…
எந்நாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை…

பெண் : பொத்தி வைத்த ஆச வந்து…
ஆண் : நெத்தியில துடிக்குது…

பெண் : பொத்தி வைத்த ஆச வந்து…
ஆண் : நெத்தியில துடிக்குது…

பெண் : தொட்ட இடம் பத்திக் கொள்ளும்…
தூரத்தில் ஒதுங்கி நில்லு…

குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா…
கூட சாலி ராக்கம்மா…

குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா…
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா…
சாதி சனம் தூங்கலையே…
சாமக்கோழி கூவலையே…

குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா…
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா…
சாதி சனம் தூங்கலையே…
சாமக்கோழி கூவலையே…

பெண் : குச்சிக் குச்சி ராக்கம்மா…


Notes : Kuchi Kuchi Rakkamma Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. குச்சிக் குச்சி ராக்கம்மா பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Uyire Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
இந்த விண்ணோடு கலந்துவிடு…
காதல் இருந்தால்…
எந்தன் கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால்…
என்னை மண்ணோடு கலந்துவிடு…

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

BGM

ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து…
உயிர்தாங்கி நானிருப்பேன்…
மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால்…
மலைமீது தீக்குளிப்பேன்…
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே…
அதற்காகவா பாடினேன்…
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே…
அதற்காகத்தான் வாடினேன்…
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்…

பெண் : உயிரே… உயிரே…
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…
உறவே… உறவே…
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்…
நினைவே… நினைவே…
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…
கனவே… கனவே…
உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்…

ஆண் : காதல் இருந்தால்…
எந்தன் கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால்…
என்னை மண்ணோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…

BGM

பெண் : ஓா் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை…
வாராமல் போய்விடுமா…
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது…
மறு கண்ணும் தூங்கிடுமா…
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்…
கண்ணாளன் முகம் பார்க்கவே…
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்…
கண்ணா உன் குரல் கேட்கவே…
அடடா அடடா… இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே…

ஆண் : உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
இந்த விண்ணோடு கலந்துவிடு…

பெண் : மழைபோல் மழைபோல்…
வந்து மண்ணோடு விழுந்து விட்டேன்…
மனம்போல் மனம்போல்…
உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்…
உயிரே… உயிரே…
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…
நினைவே… நினைவே…
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…

BGM


Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.


கண்ணாளனே எனது கண்ணை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலையதேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கரநிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்…
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்…
எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்…
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்…

பெண் : ரத்தம் கொதிகொதிக்கும்…
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல…
சித்தம் துடிதுடிக்கும்…
புயல் எதிர்த்திடும் ஓா் இலை போல…
பனித்துளிதான் என்ன செய்யுமோ…
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது…
மூங்கில் காடென்று ஆயினள் மாதல்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலைய தேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்…
உன்னோடு நான் கண்டுகொண்டேன்…
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்…
என்னோடு நான் கண்டுகொண்டேன்…

பெண் : என்னை மறந்துவிட்டேன்…
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை…
உன்னை இழந்துவிட்டால்…
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை…
இது கனவா… இல்லை நினைவா…
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்…
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டு…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
கண்ணாளனே…


Notes : Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. கண்ணாளனே எனது கண்ணை பாடல் வரிகள்.