பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சுஜாதா மோகன் | ஏ. ஆர். ரகுமான் | பம்பாய் |
Malarodu Malaringu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…
பெண் : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…
குழு : வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே…
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே…
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை…
பெண் : மனதோடு மனம் சேரட்டும்…
குழு : மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…
குழு : துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்…
கடலோடு கடல் சேரட்டும்…
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்…
விண்ணோடு விண் சேரட்டும்…
விடியாத இரவொன்றும் வானில் இல்லை…
ஒளியோடு ஒளி சேரட்டும்…
—BGM—
Notes : Malarodu Malaringu Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. மலரோடு மலரிங்கு பாடல் வரிகள்.