Category Archives: கிழக்குச் சீமையிலே

கிழக்குச் சீமையிலே

மானூத்து மந்தையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Maanooththu Manthaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு…
நாக்கு சொட்ட சமைச்சு…
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா…

BGM

குழு : மேலு காலு வலிச்சா…
வெள்ளப்பூண்டு உரிச்சி…
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா…

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு…
ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு…
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு…
குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய்மாமன்…

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு…
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய்மாமன்…

குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு…
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… ஐயோ…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…
ஆண் : ஹோய்…
குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… போடு…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…


Notes : Maanooththu Manthaiyile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. மானூத்து மந்தையில பாடல் வரிகள்.


தென்கிழக்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன்ஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Then Kizhakku Cheemayile Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

பெண் : தாய் வீட்டுப் பேரும்…
தாய் மாமன் சீரும்…
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே…

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா…
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே…

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே…
ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே…
பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

BGM

ஆண் : செங்காட்டு மண்ணும்…
நம் வீட்டுப் பொண்ணும்…
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே…

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா…
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே…

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே…
பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே…
ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய…

BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

ஆண் : உலகம் பொய்தானா…
உறவும் பொய்தானா…
ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா…

பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்…
குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா…

ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி…
பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி…
ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…


Notes : Then Kizhakku Cheemayile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்.


கத்தாழங்காட்டு வழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Kathaazha Kaattu Vazhi Song Lyrics in Tamil


ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

BGM

{ ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா… } * (2)

ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா…
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா…
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு…
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா…

ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

பெண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

பெண் : அண்ணே போய் வரவா…
அழுது போய் வரவா…
மண்ணே போய் வரவா…
மாமரமே போய் வரவா…

பெண் : அணில்வால் மீச கொண்ட…
அண்ணே ஒன்ன விட்டு…
புலிவால் மீச கொண்ட…
புருஷனோட போய் வரவா…

பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே…
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…


Notes : Kathaazha Kaattu Vazhi Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. கத்தாழங்காட்டு வழி பாடல் வரிகள்.


aathangara-marame-song-lyrics

ஆத்தங்கரை மரமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன் & மனோஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Aathangara Marame Song Lyrics in Tamil


ஆண் : அத்தைக்கு பிறந்தவளே…
ஆளாகி நின்றவளே…
பருவம் சுமந்து வரும்…
பாவாடை தாமரையே…

ஆண் : தட்டாம்பூச்சி பிடித்தவள்…
தாவணிக்கு வந்ததெப்போ…
மூன்றாம் பிறையே…
நீ முழு நிலவா ஆனதெப்போ…
மெளனத்தில் நீ இருந்தா…
யாரை தான் கேட்பதெப்போ… ஓ…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

ஆண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

பெண் : மாமனே உன்னை தாங்காம…
மத்தியில் சோறும் பொங்காம…
பாவி நான் பருத்தி மாரா போனேனே…

பெண் : காகம் தான் கத்தி போனாலும்…
கதவு தான் சத்தம் போட்டாலும்…
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே…

பெண் : ஒத்தையில் ஓடைக்கரையோரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்…
கத்தியே உன் பேர் சொன்னேனே…
அந்த இரயில் தூரம் போனதும்…
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே…

பெண் : முத்து மாமா என்னை விட்டு போகாதே…
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

BGM

ஆண் : தாவணி பொண்ணே சுகந்தானா…
தங்கமே தளும்பும் சுகந்தானா…
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா…

ஆண் : தொட்ட பூ எல்லாம் சுகந்தானா…
தொடாத பூவும் சுகந்தானா…
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா…

ஆண் : அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அயித்தயும் மாமனும் சுகந்தானா…
ஆத்துல மீனும் சுகந்தானா…
அன்னமே உன்னையும் என்னையும்…
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா…

ஆண் : மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு…
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு…

பெண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…

ஆண் : ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி…
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி…
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா…
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா…

பெண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது…
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது…

ஆண் : ஆத்தங்கரை மரமே…
அரசமர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே…


Notes : Aathangara Marame Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தங்கரை மரமே பாடல் வரிகள்.