Category Archives: புருஷ லட்சணம்

காக்கை சிறகினிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாபுருஷ லட்சணம்

Kaakai Chiraginile Song Lyrics in Tamil


BGM

பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…

ஆண் : ஆ… பூவாலே மெத்தை விரிச்சு… ஹோய்…
தேனூறும் முத்தம் தெளிச்சு… ஆஆ…
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு…
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு…
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு…

பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…

BGM

ஆண் : தூங்கி கிடந்த உள்ளம்…
தோகை விரித்துக் கொண்டு…
ஏங்கி தவிப்பது இன்று யாராலே…

பெண் : தாங்கி பிடிக்கும் எண்ணம்…
தாளம் அடிக்கும் வண்ணம்…
ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே…

ஆண் : அழகான மங்கை…
ஒரு அதிகாலை கங்கை…
அடி உனக்கே என் இன்பம் மொத்தமே…

பெண் : காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்…

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நான் வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…

BGM

பெண் : ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையே…
மூக்கு சிவப்பதென்ன வீணாக…

ஆண் : காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி…
நீந்தி பிடிக்க வந்தேன் நானாக…

பெண் : உயிரோடு தஞ்சம் என் உடல் போடும் மஞ்சும்…
நீ தினந்தோறும் முத்து குளிக்க…

ஆண் : தாராளம் தாராளம் தாகம் மனதினில் ஏராளம்…

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
நான் வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…

பெண் : பூவாலே மெத்தை விரிச்சு… ஹோய்…
தேனூறும் முத்தம் தெளிச்சு…
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு…
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு…
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு…

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா…
பெண் : நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
ஆண் : ம்ம்ம்ஹூம் ஹூம் ஹூம்…


Notes : Kaakai Chiraginile Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. காக்கை சிறகினிலே பாடல் வரிகள்.


செம்பட்டுப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாபுருஷ லட்சணம்

Sempattu Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…

ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா…
கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா…
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா…
குயில் பாடும் கீதம் சொல்லிலா…

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…

BGM

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ…
கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ…
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்…
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்…
புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா…

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…

BGM

பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே… ஏ…
காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே… ஏ…

பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்…
இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்…
என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா…

பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்…
ஸ்ரீரங்கனாதருக்கே… ஹோய்…
பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்…
என்னுயிர் ராமனுக்கே… ஹோய்…

பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா…
இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா…
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா…
குயில் கீதம் காதல் சொல்லிலா…

ஆண் : ஆஆஆ… செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…


Notes : Sempattu Poove Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. செம்பட்டுப் பூவே பாடல் வரிகள்.


oru-thaali-varam-song-lyrics-in-tamil

ஒரு தாலி வரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராதேவாபுருஷ லட்சணம்

Oru Thaali Varam Song Lyrics in Tamil


BGM

பெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா…
பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா…
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா…
முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா…

பெண் : குங்கும கோதையே அன்னையே சோதையே…
செந்தூர தெய்வானை சிங்கார பூபதி…
அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி…
சுந்தர நீலியே சௌந்தர மாளியே…

பெண் : வல்லியம்மா எங்கள் அல்லியம்மா…
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா…
அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா…
அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா…

பெண் : சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா…
மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி…
மருவத்தூர் அம்மாவே வா…

பெண் : ஒரு தாலி வரம்…
கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா…
வேறு துணை யாரம்மா…

பெண் : ஒரு தாலி வரம்…
கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா…
வேறு துணை யாரம்மா…

பெண் : குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு…
சோதனைகள் எதுக்கு…

BGM

பெண் : அவர் கட்டிய தாலிக்கும்…
பொட்டுக்கும் பூவுக்கும்…
காவல் கொடு எனக்கு…

BGM

பெண் : நீதிக்கு கண் தந்து…
சோதிக்கும் துன்பத்தை…
நீ வந்து மாற்றிடம்மா…

பெண் : மடியேந்தி பிச்சை கேட்கிறேன்…
அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்…
மடியேந்தி பிச்சை கேட்கிறேன்…
அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்…

பெண் : ஒரு தாலி வரம்…
கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா…
வேறு துணை யாரம்மா…

BGM

பெண் : காணாத பொய் வழக்கு…
வீணாக வந்திருக்கு…
வாதாட சாட்சி ஏதம்மா…

பெண் : ஊர் வாழ ஆட்சி செய்யும்…
மீனாட்சி தேவியம்மா…
நான் வாழ நீதி கூறம்மா…

பெண் : சோதனையை வேதனையை…
சேர்த்து விட்டேன் உன்னடியில்…
சோகங்களை துரோகங்களை…
தீர்த்துவிடு என் வழியில்…

பெண் : வாழ்வரசி ஆவதற்கு…
தாலி தந்த கன்னியம்மா…
வாசல் வந்த பிள்ளை மனம்…
வாடலாமா பொன்னியம்மா…

பெண் : அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா…
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா…

பெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா…
மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி…
தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே…
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்…

பெண் : கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா…
துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே…
முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே…
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே…

பெண் : நாச்சியம்மா தங்க பேச்சியம்மா…
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா…
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா…
தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா…

பெண் : பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி…
அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா…
ஆதி பராசக்தியே…

BGM

பெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்…
நீதானே பூமி மீதிலே…
ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே…
வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே…

பெண் : பெண்ணினங்கள் வேண்டுவது…
அன்னை உந்தன் குங்குமமே…
குங்குமத்தில் நீ இருந்து…
காக்கணும் என் மங்கலமே…

பெண் : சத்தியத்தை காக்க உந்தன்…
சக்கரத்தை சுத்தி விடு…
உக்கிரத்தில் நீ எழுந்து…
உண்மைக்கொரு வெற்றி கொடு…

பெண் : உன் நீதி பூமியில் தவறாகுமா…
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா…

குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா…
தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா…
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா…
அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா…

குழு : வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி…
வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா…
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா…
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே…

குழு : மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி…
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி…
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி…

குழு : அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி…
மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ…
சோலையூர் மகாமாயி வா…

பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா…
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா…

பெண் : குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு…
சோதனைகள் எதுக்கு…

BGM

குழு : அவர் கட்டிய தாலிக்கும்…
பொட்டுக்கும் பூவுக்கும்…
காவல் கொடு எனக்கு…

BGM

குழு : நீதிக்கு கண் தந்து
சோதிக்கும் துன்பத்தை…
நீ வந்து மாற்றிடம்மா…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…


Notes : Oru Thaali Varam Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. ஒரு தாலி வரம் பாடல் வரிகள்.