| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | கே.எஸ். சித்ரா | தேவா | புருஷ லட்சணம் |
Oru Thaali Varam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா…
பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா…
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா…
முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா…
பெண் : குங்கும கோதையே அன்னையே சோதையே…
செந்தூர தெய்வானை சிங்கார பூபதி…
அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி…
சுந்தர நீலியே சௌந்தர மாளியே…
பெண் : வல்லியம்மா எங்கள் அல்லியம்மா…
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா…
அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா…
அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா…
பெண் : சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா…
மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி…
மருவத்தூர் அம்மாவே வா…
பெண் : ஒரு தாலி வரம்…
கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா…
வேறு துணை யாரம்மா…
பெண் : ஒரு தாலி வரம்…
கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா…
வேறு துணை யாரம்மா…
பெண் : குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு…
சோதனைகள் எதுக்கு…
—BGM—
பெண் : அவர் கட்டிய தாலிக்கும்…
பொட்டுக்கும் பூவுக்கும்…
காவல் கொடு எனக்கு…
—BGM—
பெண் : நீதிக்கு கண் தந்து…
சோதிக்கும் துன்பத்தை…
நீ வந்து மாற்றிடம்மா…
பெண் : மடியேந்தி பிச்சை கேட்கிறேன்…
அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்…
மடியேந்தி பிச்சை கேட்கிறேன்…
அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்…
பெண் : ஒரு தாலி வரம்…
கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா…
வேறு துணை யாரம்மா…
—BGM—
பெண் : காணாத பொய் வழக்கு…
வீணாக வந்திருக்கு…
வாதாட சாட்சி ஏதம்மா…
பெண் : ஊர் வாழ ஆட்சி செய்யும்…
மீனாட்சி தேவியம்மா…
நான் வாழ நீதி கூறம்மா…
பெண் : சோதனையை வேதனையை…
சேர்த்து விட்டேன் உன்னடியில்…
சோகங்களை துரோகங்களை…
தீர்த்துவிடு என் வழியில்…
பெண் : வாழ்வரசி ஆவதற்கு…
தாலி தந்த கன்னியம்மா…
வாசல் வந்த பிள்ளை மனம்…
வாடலாமா பொன்னியம்மா…
பெண் : அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா…
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா…
பெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா…
மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி…
தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே…
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்…
பெண் : கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா…
துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே…
முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே…
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே…
பெண் : நாச்சியம்மா தங்க பேச்சியம்மா…
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா…
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா…
தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா…
பெண் : பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி…
அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா…
ஆதி பராசக்தியே…
—BGM—
பெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்…
நீதானே பூமி மீதிலே…
ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே…
வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே…
பெண் : பெண்ணினங்கள் வேண்டுவது…
அன்னை உந்தன் குங்குமமே…
குங்குமத்தில் நீ இருந்து…
காக்கணும் என் மங்கலமே…
பெண் : சத்தியத்தை காக்க உந்தன்…
சக்கரத்தை சுத்தி விடு…
உக்கிரத்தில் நீ எழுந்து…
உண்மைக்கொரு வெற்றி கொடு…
பெண் : உன் நீதி பூமியில் தவறாகுமா…
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா…
குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா…
தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா…
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா…
அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா…
குழு : வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி…
வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா…
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா…
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே…
குழு : மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி…
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி…
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி…
குழு : அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி…
மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ…
சோலையூர் மகாமாயி வா…
பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா…
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா…
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா…
பெண் : குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு…
சோதனைகள் எதுக்கு…
—BGM—
குழு : அவர் கட்டிய தாலிக்கும்…
பொட்டுக்கும் பூவுக்கும்…
காவல் கொடு எனக்கு…
—BGM—
குழு : நீதிக்கு கண் தந்து
சோதிக்கும் துன்பத்தை…
நீ வந்து மாற்றிடம்மா…
குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…
Notes : Oru Thaali Varam Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. ஒரு தாலி வரம் பாடல் வரிகள்.
