பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | தர்மதுரை (1991) |
Santhaikku Vantha Kili Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
ஆண் : முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…
முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…
ஆண் : குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…
குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…
ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
—BGM—
ஆண் : காணாத காட்சி எல்லாம்…
கண்டேனே உன்னழகில்…
பூ போல கோலமெல்லாம்…
போட்டாயே உன் விழியில்…
பெண் : மானா மதுரையிலே…
மல்லிகை பூ வாங்கி வந்து…
மை போட்டு மயக்குனியே…
கை தேர்ந்த மச்சானே…
ஆண் : தாமரையும் பூத்திருச்சு…
தக்காளி பழுத்திருச்சு…
தங்கமே உன் மனசு…
இன்னும் பழுக்களையே…
பெண் : இப்பவே சொந்தம் கொண்டு…
நீ கையில் அள்ளிகொள்ளு மாமா…
பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
பெண் : சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
பெண் : கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…
கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…
பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
—BGM—
குழு : வந்தது வந்தது பொங்கல் என்று…
இங்கு மங்கள கும்மி கொட்டுங்கடி…
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே…
இங்கு மங்கையர் எல்லோரும் வாருங்கடி…
குழு : மஞ்சளும் குங்குமம் கையில் கொண்டு…
அம்மனை பாடிட வாருங்கடி…
அம்மனை பாடிட வாருங்கடி…
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி…
—BGM—
குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம்… ஆ…
குழு : தானன தானன தானன னா…
குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம்… ஆ…
குழு : தானன தானன தானன னா…
குழு : தந்தகர தந்தந்தோம்…
தந்தகர தந்தந்தோம் தானனா… தந்தந்தந்…
—BGM—
பெண் : ஆளான நாள் முதலாய்…
உன்னைத்தான் நான் நினைச்சேன்…
நூலாகத்தான் இளைச்சு…
நோயில் தினம் வாடி நின்னேன்…
ஆண் : பூ முடிக்கும் கூந்தலிலே…
எம் மனசை நீ முடிச்சே…
நீ முடிச்ச முடிப்பினிலே…
என் உசிறு தினம் தவிக்க…
பெண் : பூவில் நல்ல தேனிருக்கு…
பொன் வண்டு பாத்திருக்கு…
இன்னும் என்ன தாமதமோ…
மாமனுக்கு சம்மதமோ…
ஆண் : இப்பவே சொந்தம் கொள்ளவே…
கொஞ்சம் என் அருகில் வாம்மா…
ஆண் : சந்தைக்கு வந்த கிளி…
ஜாடை சொல்லி பேசுதடி…
பெண் : சந்தைக்கு வந்த மச்சான்…
ஜாடை சொல்லி பேசுவதேன்…
ஆண் : முத்தம்மா முத்தம்மா…
பக்கம் வர வெக்கமா…
பெண் : சொல்லவா சொல்லவா…
ஒண்ணு நான் சொல்லவா…
கல்யாணத்தை பேசி…
நீ கட்ட வேணும் தாலி…
ஆண் : ஹேய்… ஹொய்… குத்தாலத்து மானே…
கொத்து பூவாடிடும் தேனே…
ஆண் & பெண் : தந்தன்னா தந்தான் நன்னே…
தான தந்த தானேதானே…
தந்தன்னா தந்தான் நன்னே…
தான தந்த தானேதானே…
—BGM—
Notes : Santhaikku Vantha Kili Song Lyrics in Tamil. This Song from Dharma Durai (1991). Song Lyrics penned by Panchu Arunachalam. சந்தைக்கு வந்த கிளி பாடல் வரிகள்.