Category Archives: எஜமான்

நிலவே முகம் காட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஎஜமான்

Nilave Mugam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு…
இளம் பூங்கொடியே இது தாய் மடியே…

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு…
அணைத்தேன் உனையே இது தாய் மடியே…

ஆண் : நிலவே முகம் காட்டு…

BGM

பெண் : பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா…
இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா…

ஆண் : காலம் மாறும் கலக்கம் ஏனம்மா…
இரவில்லாமல் பகலும் ஏதம்மா…
நான் உன் பிள்ளை தானம்மா…

பெண் : நானும் கண்ட கனவு நூறய்யா…
எனது தாயும் நீங்கள் தானய்யா…
இனி உன் துணை நானய்யா…

ஆண் : எனை சேர்ந்தது கொடி முல்லையே…
இது போலே துணையும் இல்லையே…
இனி நீ என் தோளில் பிள்ளையே…

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
பெண் : அணைத்தேன் உனையே இது தாய் மடியே…

BGM

ஆண் : சுமை போட்டு பேசும் ஊரென்றால்…
மனம் தவித்திடும் மானே…
இமை நீரும் கண்ணின் நீரென்றால்…
தினம் குடிப்பவன் நானே…

பெண் : மாலையோடு நடக்கும் தேரைய்யா…
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா…
உன்னை மீற யாரைய்யா…

ஆண் : மாமன் தோளில் சாய்ந்த முல்லையே…
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே…
நீ என் வாழ்வின் எல்லையே…

பெண் : இதை மீறிய தவம் இல்லையே…
இனி எந்தக் குறையுமில்லையே…
தினம் தீரும் தீரும் தொல்லையே…

பெண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு…
ஆண் : இளம் பூங்கொடியே இது தாய் மடியே…

ஆண் : நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு…


Notes : Nilave Mugam Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. நிலவே முகம் காட்டு பாடல் வரிகள்.


எஜமான் காலடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஎஜமான்

Ejamaan Kaladi Song Lyrics in Tamil


BGM

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

ஆண் : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வெச்சோம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

ஆண் : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…
உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

BGM

ஆண் : ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு…
நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு…
வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்ந்தாச்சு…
வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு…

ஆண் : இல்லாமை இங்கு கிடையாது…
குழு : எங்க எஜமான் இருக்கையிலே…

ஆண் : பொல்லாப்பு நம்ம நெருங்காது…
குழு : எஜமான் உங்க காவலிலே…

குழு : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

BGM

ஆண் : தோட்டம் காடு மேடெல்லாம் சொந்தம் தேடும் தொழிலாளி…
ஏழை கூட்டம் முன்னேற நீங்கதானே கூட்டாளி…
ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி…
உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி…

ஆண் : தன்னால வணங்குது ஊரு…
குழு : எங்க எஜமான் நடக்கையிலே…

ஆண் : எந்நாளும் குறை கிடையாது…
குழு : எஜமான் இங்க இருக்கையிலே…

குழு : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

ஆண் : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வெச்சோம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

ஆண் : உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…
உங்களத்தான் நம்புதிந்த பூமி…
இனி எங்களுக்கு நல்ல வழி காமி…

குழு : எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…


Notes : Ejamaan Kaladi Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. எஜமான் காலடி பாடல் வரிகள்.


உரக்க கத்துது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். ஜானகிஇளையராஜாஎஜமான்

Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil


BGM

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா…
என்ன வாட்டும் உங்க நெனப்பு…
கிணத்து தண்ணில குளிச்சா…
தினம் ஆறிடுமா கொதிப்பு…

பெண் : வானவராயா வந்து பாருமய்யா…
வாளிபராயா வந்து கேளுமையா…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

BGM

பெண் : கம்மன் கருத்து கிட்ட வருது…
கொல்ல புறமா கொஞ்ச வருது…
பஞ்சி நெருப்ப சுத்தி வருது…
பத்தி கிடதான் பக்கம் வருது…

பெண் : சொக்குதுங்க வெடல புள்ள…
என்ன சத்தியமா யாரும் தொடல…
கண்டவக கண்ணு படல…
ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல…

பெண் : ஆத்து பக்கம் குளிச்சா…
ஆத்து தண்ணி சுடுது…
கூர பாயில் படுத்தா…
தூக்கம் எல்லாம் கெடுதே…
ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

BGM

பெண் : மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா…
வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா…
பிஞ்சி மனச சொந்தம் கொள்ள வா…
கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா…

பெண் : உன்னதான் தெனம் நெனச்சேன்…
இங்க கொதிக்குது உள்ள பதமா…
உள்ளுக்குள் உள்ள நெருப்ப…
வந்து அணைக்கணும் தொட்டு இதமா…

பெண் : நேச பட்டு தினமும்…
நேந்து கிட்டேன் பலமா…
ஆச பட்டு நேசமா…
ஓரங்கட்டு வேசமா…
ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா…
என்ன வாட்டும் உங்க நெனப்பு…
கிணத்து தண்ணில குளிச்சா…
தினம் ஆறிடுமா கொதிப்பு…

பெண் : வானவராயா வந்து பாருமய்யா…
வாளிபராயா வந்து கேளுமையா… ஓஓ…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…


Notes : Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by R.V. Udayakumar. உரக்க கத்துது பாடல் வரிகள்.


அடி ராக்குமுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஎஜமான்

Adi Raakumuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…
வளை காப்பு தங்க காப்பு…
இவ கை பிடிச்சு பூட்டு…

ஆண் : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா…
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா…

ஆண் : கிளி மூக்கு முத்தம்மா…
என் வாக்கு சுத்தம்மா…
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

குழு : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

BGM

ஆண் : வான் சுமந்த வான் சுமந்த…
வெண்ணிலவ வெண்ணிலவ…
தான்சுமந்த தான்சுமந்த…
பெண்நிலவே பெண்நிலவே…

குழு : மூணு மாசம் ஆன பின்னே…
முத்து வரும் முத்து வரும்…
பூர்வ ஜென்மம் சேர்த்து வச்ச…
சொத்து வரும் சொத்து வரும்…

ஆண் : வெள்ளிமணி தொட்டில் ஒன்னு…
விட்டத்தின் மேலே மாட்டிடனும்…
தங்கமணி கண்ணுறங்க…
தாலேலோ பாடி ஆட்டிடனும்…

குழு : அடி வாடி ரங்கம்மா…
தெரு கோடி அங்கம்மா…
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

BGM

குழு : ஏழு சனி மார்கழிக்கும்…
பொங்க வச்சி பொங்க வச்சி…
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்…

ஆண் : வாரிசு ஒன்னு தந்ததிற்கு…
நன்றி சொல்லி நன்றி சொல்லி…
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி…
ஊத்திடனும் ஊத்திடனும்…

ஆண் : அம்மன் அருள் இல்லையின்னா…
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே…
பிள்ளை செல்வம் இல்லை என்ற…
பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே…

குழு : ஊரில் எல்லாரும் ஒன்னு சேரும் இந்நேரம்…
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

குழு : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா…
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா…

குழு : கிளி மூக்கு முத்தம்மா…
என் வாக்கு சுத்தம்மா…
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு…

ஆண் : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…

குழு : அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…
வளை காப்பு தங்க காப்பு…
இவ கை பிடிச்சு பூட்டு…


Notes : Adi Raakumuthu Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. அடி ராக்குமுத்து பாடல் வரிகள்.


ஆலப்போல் வேலப்போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஎஜமான்

Aalappol Velappol Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…

BGM

பெண் : பதில் கேளு அடி கண்ணம்மா… ஆஆ…
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா…
என்னம்மா கண்ணம்மா… ஹோய்…

பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…

BGM

பெண் : எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு…
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு…

BGM

ஆண் : கொத்து மஞ்சள்தான் அரைச்சி…
நித்தமும் நீராடச் சொல்லு…
மீனாட்சிக் குங்குமத்த நெத்தியில சூடச் சொல்லு…

பெண் : சொன்னத நானும் கேக்குறேன்…
சொர்ணமே அங்க போய் கூறிடு…

ஆண் : அஞ்சல மாலை போடுறேன்…
அன்னத்தின் காதுல ஓதிடு…

பெண் : மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே…
பாடா படுத்துதென்னையே…
புது பூவா வெடிச்ச பெண்ணையே…

ஆண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே…

பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…

BGM

ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு…
வில்லு வண்டி செஞ்சி தாரேன்…
வண்டியில வஞ்சி வந்தா…
வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்…

பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு…
பல்லக்கொன்னு செஞ்சு தாரேன்…
பல்லக்குல மாமன் வந்தா…
பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்…

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா…
கொல்லுதே கொல்லுதே ராத்திரி…

பெண் : கட்டிலில் போடும் பாயும்தான்…
குத்துதே குத்துஊசி மாதிரி…

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும்…
காத்தா பறந்து வருவேன்…
புதுபாட்டா படிச்சி தருவேன்…

பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா… ஆஆ…
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா…
என்னம்மா கண்ணம்மா ஹோய்…

ஆண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…

பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…


Notes : Aalappol Velappol Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. ஆலப்போல் வேலப்போல் பாடல் வரிகள்.


Oru Naalum Song Lyrics in Tamil

ஒரு நாளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஎஜமான்

Oru Naalum Song Lyrics in Tamil


BGM

குழு : கங்கண கணவென கிண்கிணி மணிகளும்…
ஒலிக்க ஒலிக்க…
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி…
முழங்க முழங்க…
ஒரு சுயம்வரம் நடக்கின்றதே…
இது சுகம் தரும் சுயம்வரமே…

BGM

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

பெண் : எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…

BGM

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

BGM

பெண் : சுட்டுவிரல் நீ காட்டு…
சொன்னபடி ஆடுவேன்…
உன்னடிமை நான் என்று…
கையெழுத்துப் போடுவேன்…

ஆண் : உன்னுதிரம் போலே நான்…
பொன்னுடலில் ஓடுவேன்…
உன்னுடலில் நான் ஓடி…
உள் அழகைத் தேடுவேன்…

பெண் : தோகை கொண்டு நின்றாடும்…
தேன்கரும்பு தேகம்…

ஆண் : முந்தி வரும் தேன் வாங்கி…
பந்தி வைக்கும் நேரம்…

பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு…
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு…

BGM

ஆண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

ஆண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

ஆண் : இணையான இளமானே…
துணையான இளமானே…
இணையான இளமானே…
துணையான இளமானே…

BGM

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

BGM

ஆண் : கட்டில் இடும் சூட்டோடு…
தொட்டில் கட்டு அன்னமே…
முல்லைக் கொடி தரும் அந்த…
பிள்ளைக் கனி வேண்டுமே…

பெண் : உன்னை ஒரு சேய் போலே…
என் மடியில் தாங்கவா…
என்னுடைய தாலாட்டில்…
கண்மயங்கித் தூங்க வா…

ஆண் : ஆரீராரோ நீ பாட…
ஆசை உண்டு மானே…

பெண் : ஆறு ஏழு கேட்டாலும்…
பெற்றெடுப்பேன் நானே…

ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று…
சித்திரம் வரும் விசித்திரம் என்று…

BGM

பெண் : ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…

ஆண் : உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…

பெண் : விழியோடு இமை போலே…
விலகாத நிலை வேண்டும்…

ஆண் : இணையான இளமானே…
துணையான இளமானே…

பெண் : ஓ… எனையாளும் எஜமானே…
எனையாளும் எஜமானே…

BGM


Notes : Oru Naalum Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by R.V. Udayakumar. ஒரு நாளும் பாடல் வரிகள்.