பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | எஜமான் |
Aalappol Velappol Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…
—BGM—
பெண் : பதில் கேளு அடி கண்ணம்மா… ஆஆ…
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா…
என்னம்மா கண்ணம்மா… ஹோய்…
பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
—BGM—
பெண் : எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு…
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு…
—BGM—
ஆண் : கொத்து மஞ்சள்தான் அரைச்சி…
நித்தமும் நீராடச் சொல்லு…
மீனாட்சிக் குங்குமத்த நெத்தியில சூடச் சொல்லு…
பெண் : சொன்னத நானும் கேக்குறேன்…
சொர்ணமே அங்க போய் கூறிடு…
ஆண் : அஞ்சல மாலை போடுறேன்…
அன்னத்தின் காதுல ஓதிடு…
பெண் : மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே…
பாடா படுத்துதென்னையே…
புது பூவா வெடிச்ச பெண்ணையே…
ஆண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே…
பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…
—BGM—
ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு…
வில்லு வண்டி செஞ்சி தாரேன்…
வண்டியில வஞ்சி வந்தா…
வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்…
பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு…
பல்லக்கொன்னு செஞ்சு தாரேன்…
பல்லக்குல மாமன் வந்தா…
பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்…
ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா…
கொல்லுதே கொல்லுதே ராத்திரி…
பெண் : கட்டிலில் போடும் பாயும்தான்…
குத்துதே குத்துஊசி மாதிரி…
ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும்…
காத்தா பறந்து வருவேன்…
புதுபாட்டா படிச்சி தருவேன்…
பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…
ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா… ஆஆ…
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா…
என்னம்மா கண்ணம்மா ஹோய்…
ஆண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்…
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே…
பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்…
நானும் அங்கு நின்றிருப்பேனே…
Notes : Aalappol Velappol Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by Vaali. ஆலப்போல் வேலப்போல் பாடல் வரிகள்.