Category Archives: மன்னன்

மன்னன்

மன்னர் மன்னனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாமன்னன்

Mannar Mannanae Song Lyrics in Tamil


BGM

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…

பெண் : எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…

BGM

பெண் : நான் பணம் படைத்த…
பட்டத்து ராஜன் தவப்புதல்வி…
நீ திமிர் பிடித்த…
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்…

பெண் : ஆட்டம் போடு கூட்டம் போடு…
ஆடிபோகும் உன் ஆணவம்…
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம்…

பெண் : என்னை பார்த்து எந்த ஆணும்…
இந்த நாளும் எந்த நாளும்…
என்னை பார்த்து எந்த ஆணும்…
வணங்கி வந்து நின்று…
வந்தனங்கள் தந்து செல்லணும்…

BGM

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…

பெண் : எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…

பெண் : மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…


Notes : Mannar Mannanae Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. மன்னர் மன்னனே பாடல் வரிகள்.


சண்டி ராணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமன்னன்

Sandi Raniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

BGM

ஆண் : என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை…
என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை…

ஆண் : என்ன ஆச்சு எங்கு போச்சு…
சின்ன ராணி உன் சாகசம்…
ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம்…
காட்டலாமா நீ என் வசம்…

ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே…
முட்டும் பொது முட்டுவேனே…
ஓட்டும் பொது ஒட்டுவேனே…
எதுக்கு வம்பு தும்பு…
என்னிடத்தில் மண்டி போடடி…

BGM

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…


Notes : Sandi Raniye Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. சண்டி ராணியே பாடல் வரிகள்.


Adikuthu Kuliru Song Lyrics in Tamil

அடிக்குது குளிரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.ஜானகி & ரஜினிகாந்த்இளையராஜாமன்னன்

Adikuthu Kuliru Song Lyrics in Tamil


பெண் : அடிக்குது குளிரு… ஹா…
துடிக்குது தளிரு…

BGM

பெண் : ஹான்… அடிக்குது குளிரு…
துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது…
கொம்பை போல உன் அன்பை தேடுது…

பெண் : வா கட்டபொம்மன் பேரா…
கட்டழகு வீரா…
கிட்ட வந்து நேரா…
கட்டிக்கொள்ளு ஜோரா…

பெண் : அடிக்குது குளிரு…
ஆண் : ஆ… அது செரி… அது செரி…
பெண் : துடிக்குது தளிரு…
ஆண் : இத பாருடா…

பெண் : முல்லை பூங்கொடி கொம்பை தேடுது…
ஆண் : அப்டியா…
பெண் : கொம்பைபோல உன் அன்பை தேடுது…
ஆண் : ஓஹோ…

பெண் : வா கட்டபொம்மன் பேரா…
கட்டழகு வீரா…
ஆண் : எப்டி… எப்டி…
பெண் : கிட்ட வந்து நேரா…
கட்டிக்கொள்ளு ஜோரா…

BGM

பெண் : அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ…
ஆடிரதம் அழைக்குது…
ஆண் : ஆஆஆய்ய்…

பெண் : கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ…
ஆலிலை தவிக்குது…
ஆண் : ஓஓஹோ…

பெண் : முத்தம் நூறு கேட்டு வாங்கவே…
நாணம் என்னை தடுக்குது…
ஆண் : அட்ரா சக்க…

பெண் : பித்தம் ஏறி தூண்டில் மீனென…
நூலிடை துடிக்குது…
ஆண் : இது எப்படி இருக்கு…

பெண் : சுகமான கட்டில் நாடகம்…
நீயும் நானும் ஆடலாம்…
ஆண் : ஆஹா…

பெண் : வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்…
வெட்கமின்றி கூடலாம்…
ஆண் : அப்டி போடு…

பெண் : உன்னை பார்த்து நான்…
சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா…
கட்டி கொள்ளு ஜோரா…

பெண் : அடிக்குது குளிரு…
ஆண் : ஆ அது செரி… அது செரி…
பெண் : துடிக்குது தளிரு…
ஆண் : அது ரொம்ப செரி… ரொம்ப செரி…

BGM

ஆண் : சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை…
பெண் : மாலையிட கிடைக்கலாம்…
ஆண் : இங்கே வந்து காலை மாலைதான்…
பெண் : சேலையை துவைக்கலாம்…

ஆண் : என்னைபோல நல்ல மாப்பிள்ளை…
பெண் : வாய்ப்பதொரு அதிசயம்…
ஆண் : என்னை நீயும் ஏற்றுக்கொண்டது…
பெண் : பாவை என் பாக்கியம்…

பெண் : நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்…
இந்நாள் இங்கு தீர்ந்தது…
ஆண் : இல்லையா பின்ன…

பெண் : மங்கை செய்த பூர்வ புண்ணியம்…
மன்னன் வந்து சேர்ந்தது…
ஆண் : போச்சுடா…

பெண் : உன்னை பார்த்து நான்…
சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா…
கட்டி கொள்ளு ஜோரா…

ஆண் : அடிக்குது குளிரு…
பெண் : ஆஆ… அஹ்ஹஹா…
ஆண் : என்னை மடக்குது தளிரு…
பெண் : ம்ம்… ஹ்ம்…

ஆண் : முல்லை பூங்கொடி…
பெண் : ம்ம்… ஹ்ம்ம்ம்…
ஆண் : கொம்பை தேடுது…
பெண் : ஹ ஹ ஹா…

ஆண் : கொம்பைபோல என்…
பெண் : ஹ ஹ ஹா…
ஆண் : அன்பை தேடுது…
வாரே வாரே வா…

ஆண் : கட்டிதங்க மேனி கட்டழகு ராணி…
பெண் : அஹா… ஆஹ்…
ஆண் : கொட்டி பார்த்த தேனீ…
பெண் : ஆஆ… ஆஆ… அஹ்ஹ…

ஆண் : கட்டில் பக்கம் வா நீ…
பெண் : அஹ்ஹ்… ஹா ஹா…
ஆண் : அடிக்குது குளிரு…


Notes : Adikuthu Kuliru Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. அடிக்குது குளிரு பாடல் வரிகள்.


ராஜாதி ராஜா 

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாமன்னன்

Rajathi Raja Song Lyrics in Tamil


BGM

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

ஆண் : மாயஜாலம் என்ன…
மையல் கொண்டு நீயும்…
நாளும் ஆட்டம் போடவா…

பெண் : நேரம் காலம் என்ன…
நேசம் கொண்டு நீயும்…
காதல் தோட்டம் போடவா…

ஆண் : ஹே… ராணி என்னோடு ஆடவா நீ…

பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி…
எந்நாளும்… ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

BGM

ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம்…
வேடிக்கை பார்க்கின்ற…
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்…

BGM

பெண் : மாமாங்கம் ஆனாலும்…
மன்னா உன் மார்சேர்ந்து…
சின்ன மலர்தான் சிந்து படிக்கும்…

BGM

ஆண் : கையோடு கை சேரும்…
கல்யாண வைபோகம்…
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்…

பெண் : மேளசத்தம் கேட்பதெந்த தேதியோ…
குழு : லால லால லால லால லால லா…

ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ…
குழு : லால லால லால லால லால லா…

பெண் : காதும் காதுமாய்…
ஆண் : காதல் மந்திரம்…
பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ…
எந்நாளும் இங்கு…

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

BGM

பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு எந்நாளும்…
வந்த நிழலே வண்ண மயிலே…

BGM

ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்…
என்ன சுகமே என்ன சுவையே…

பெண் : உன்மேனி பொன்மேனி இந்நாளும் எந்நாளும்…
என்னை மயக்க தன்னை மறக்க…

ஆண் : ஓடைமீது ஓடம் போல ஆடவா…
குழு : லால லால லால லால லால லா…

பெண் : உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா…
குழு : லால லால லால லால லால லா…

ஆண் : காதல் கன்னிகை…
பெண் : காமன் பண்டிகை…
ஆண் : காணுகின்ற காலமல்லவா…
எந்நாளும் இங்கு…

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

ஆண் : மாயஜாலம் என்ன…
மையல் கொண்டு நீயும்…
நாளும் ஆட்டம் போடவா…

பெண் : நேரம் காலம் என்ன…
நேசம் கொண்டு நீயும்…
காதல் தோட்டம் போடவா…

ஆண் : ஹே… ராணி என்னோடு ஆடவா நீ…
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி…
எந்நாளும்…

பெண் : ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…

ஆண் : ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா…
டுடு டுடு டுடுடுட்டு டுடுடு…


Notes : Rajathi Raja Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. ராஜாதி ராஜா பாடல் வரிகள்.


அம்மா என்றழைக்காத

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமன்னன்

Amma Endrazhaikatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி…
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா…
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்…
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா…

ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்…
மகனல்ல தாயே…
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்…
அது போதுமே…

ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று…
அமைந்தாலும் நான் உந்தன்…
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே…
அதை நீயே தருவாயே…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி…
மாணிக்கம் மணிவைரம்…
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா…

ஆண் : விலை மீது விலை வைத்துக்…
கேட்டாலும் கொடுத்தாலும்…
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா…

ஆண் : ஈரயைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி…
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா…

ஆண் : ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்…
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா…
உன்னாலே பிறந்தேனே… ஏ…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…


Notes : Amma Endru Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. அம்மா என்றழைக்காத பாடல் வரிகள்.