Category Archives: இதய கோயில்

வானுயர்ந்த சோலையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாவலர் வரதராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…

BGM

ஆண் : வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…

ஆண் : தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
வீணாகப் போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன்…
நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…

BGM

ஆண் : ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…

ஆண் : பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…


Notes : Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Pavalar Varadharajan. வானுயர்ந்த சோலையிலே பாடல் வரிகள்.


பாட்டு தலைவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇதய கோயில்

Paattu Thalaivan Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…
பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…

ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
உலகமே ஆடும் தன்னாலே…

ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…

BGM

ஆண் : காதல் பேசும் தாழம் பூவே…
ஓவியம் ஆனதே கைகள் மீது…

பெண் : கைகள் வா்ணம் தீட்டும் நேரம்…
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்…

ஆண் : பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே…
பெண் : காதலே வாழ்கவே ஆயிரம் காலமே…
ஆண் : நீதானே தாலாட்டும் நிலவே…

பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…

பெண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
உலகமே ஆடும் தன்னாலே…

பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…

BGM

பெண் : பாதி ஜாமம் பாயும் போதும்…
பால் நிலா வானிலே காதல் பேசும்…

ஆண் : ஊரை தூக்கம் ஆளும் போது…
பார்வைகள் பேசுதே பாவையோடு…

பெண் : காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்…
ஆண் : ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்…
பெண் : நான்தானே தாலாட்டும் நிலவு…

ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
பெண் : கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டுதான்…

ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி…
பெண் : சொர்க்கலோகம் காட்டுதிங்கே…
ஆண் : உலகமே ஆடும் தன்னாலே…

பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்…
ஆண் : கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்…


Notes : Paattu Thalaivan Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Vaali. பாட்டு தலைவன் பாடல் வரிகள்.


யார் வீட்டில் ரோஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Yaar Veetil Roja Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ…

ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி…
மின்னல் மின்னுதோ… ஹோ…
மின்னல் இந்த நேரம்…
எந்தன் கண்ணில் மின்னுதோ…

ஆண் : ஒரு ராகம் புது ராகம்…
அதில் சோகம்தான் ஏனோ…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…

BGM

ஆண் : ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்…
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்…

ஆண் : ஜீவன் அங்கே என்னைத் தேடும்…
பாடல் இங்கே காற்றில் ஓடும்…

ஆண் : காணாமல் கண்கள் நோகின்றதோ…
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று…

ஆண் : ஓர் ஏழை வெண்புறா மேடையில்…
என் காதல் பெண்புறா வீதியில்…
பூங்காற்று போராடவே…
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…

BGM

ஆண் : வான் மேகம் மோதும் மழைதனிலே…
நான் பாடும் பாடல் நனைகிறதே…

ஆண் : பாடல் இங்கே நனைவதனாலே…
நனையும் வார்த்தை கரையுது இங்கே…

ஆண் : ஜென்மங்கள் யாவும் நீ வாழவே…
காதல் கொண்ட உள்ளம்…
காணும் அன்பின் இல்லம்…

ஆண் : ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ…
என் காவல் எல்லையைத் தாண்டுமோ…
நியாயங்கள் வாய் மூடுமோ…
தெய்வமில்லை என்று போகுமோ…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…

BGM

ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி…
மின்னல் மின்னுதோ… ஹோ…
மின்னல் இந்த நேரம்…
எந்தன் கண்ணில் மின்னுதோ…

BGM

ஆண் : ஒரு ராகம் புது ராகம்…
அதில் சோகம் தான் ஏனோ…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ…


Notes : Yaar Veetil Roja Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Mu Metha. யார் வீட்டில் ரோஜா பாடல் வரிகள்.


இதயம் ஒரு கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜா & எஸ் .ஜானகிஇளையராஜாஇதய கோயில்

Idhayam Oru Kovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…
இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

ஆண் : இதில் வாழும் தேவி நீ…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

BGM

ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான்…
ஆடும் உயிர்கள் என்றுமே…
உயிரின் ஜீவ நாடிதான்…
நாதம் தாளம் ஆனதே…

ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே…
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை…
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை…
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…
இதில் வாழும் தேவி நீ…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

BGM

ஆண் : காமம் தேடும் உலகிலே…
கீதம் என்னும் தீபத்தால்…
ராம நாமம் மீதிலே…
நாத தியாக ராஜரும்…

ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா…
அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார்…
என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே…
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…

BGM

ஆண் : நீயும் நானும் போவது…
காதல் என்னும் பாதையில்…
சேரும் நேரம் வந்தது…
மீதி தூரம் பாதியில்…

ஆண் : பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா…
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா…

ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே…
எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாளே…
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே…

ஆண் : இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்…
இதில் வாழும் தேவி நீ…
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்…


Notes : Idhayam Oru Kovil Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Ilaiyaraja. இதயம் ஒரு கோயில் பாடல் வரிகள்.


கூட்டத்திலே கோவில் புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Kootathile Kovil Pura Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

ஆண் : கொலுசுச் சத்தம் கேட்கையிலே…
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது…
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே…
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது…

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

BGM

ஆண் : நான் பாடும் ராகங்கள் யார் தந்தது…
என் காதல் தேவி நீ தந்தது…
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது…
உன் ஆசை என்னைத் தாலாட்டுது…

ஆண் : பூங்குயிலே…
பூங்குயிலே உந்தன் பாதையிலே…
ஆனந்தத் தேன் பொழிவேன்…

ஆண் : பாவை உன்னை எண்ணிக்கொண்டு…
பாடுகின்றேன் பாடலொன்று…
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து…
வாழுகின்றாய் கோவில்கொண்டு…

ஆண் : ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்…
ஆயிரம் காவிய நாடகமாடிட…
எண்ணுது என் மனமே…

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

BGM

ஆண் : நீதானே நானாடும் பிருந்தாவனம்…
நின்றாடும் தேகம் ரோஜாவனம்…
ஆகாயம் காணாத பொன் மேகமே…
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே…

ஆண் : கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்…
கானமழை வருமோ…

ஆண் : தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே…
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே…

ஆண் : என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்…
வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில்…
வாழிய வாழியவே…

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…

ஆண் : கொலுசுச் சத்தம் கேட்கையிலே…
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது…
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே…
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…

BGM

ஆண் : கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…
கூட்டத்திலே கோவில் புறா…
யாரை இங்கு தேடுதம்மா…


Notes : Kootathile Kovil Pura Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Muthulingam. கூட்டத்திலே கோவில் புறா பாடல் வரிகள்.


Naan Paadum Mouna Raagam Song Lyrics in Tamil

நான் பாடும் மௌன ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Naan Paadum Mouna Raagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
என் காதல் ராணி இன்னும்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்…
என்னோடு நானே பாடுகின்றேன்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

BGM

ஆண் : உன்னைக் கண்டு தென்றலும்…
நின்று போனதுண்டு…
உன்னைக் காண வெண்ணிலா…
வந்து போவதுண்டு…

ஆண் : ஏன் தேவி இன்று நீ…
என்னைக் கொல்கிறாய்…
முள் மீது ஏனடி…
தூங்கச் சொல்கிறாய்…

ஆண் : உன்னைத் தேடித் தேடியே…
எந்தன் ஆவி போனது…
கூடுதானே இங்கு பாடுது…
கூடு இன்று குயிலைத்தானே தேடுது…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

BGM

ஆண் : கண்கள் என்னும் சோலையில்…
காதல் வாங்கி வந்தேன்…
வாங்கி வந்த பின்புதான்…
சாபம் என்று கண்டேன்…

ஆண் : என் சாபம் தீரவே…
நீயும் இல்லையே…
என் சோகம் பாடவே…
ராகம் இல்லையே…

ஆண் : பூவும் வீழ்ந்து போனது…
காம்பு என்ன வாழ்வது…
காலம் என்னைக் கேள்வி கேட்குது…
கேள்வி இன்று கேலியாகிப் போனது…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…

ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்…
என்னோடு நானே பாடுகின்றேன்…

ஆண் : நான் பாடும் மௌன ராகம்…
கேட்கவில்லையா…
என் காதல் ராணி இன்னும்…
தூங்கவில்லையா…


Notes : Naan Paadum Mouna Raagam Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Vairamuthu. நான் பாடும் மௌன ராகம் பாடல் வரிகள்.