Category Archives: பார் மகளே பார்

எந்தன் கண்ணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ஏ.எல்.ராகவன் & L.R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Enthan Kannai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…

BGM

பெண் : பக்கம் பாத்து பக்கம் பாத்து மெரளுது…
அது பழைய மாடல் காரை போல உருளுது…
ஆஹா… பக்கம் பாத்து பக்கம் பாத்து மெரளுது…
அது பழைய மாடல் காரை போல உருளுது…

BGM

ஆண் : நின்னுபோன மனசை இந்த…
பொண்ணு பார்க்கும் பார்வை வந்து…
மொல்ல மொல்ல ஜாக்கி போட்டு தூக்குது…
நெஞ்சில் பஞ்சர் பார்த்து டயரை மாத்தி ஓட்டுது…
காதல் பாதை மீது ஸ்பீடு ரொம்ப காட்டுது…

பெண் : ஓட்ட காரு ஒடைஞ்ச காரு…
ரொட்ட பார்த்து பயந்த காரு…
பொண்ணு பாத்து ஓவர் ஸ்பீடு போகுது…

ஆண் : ஆஹா ஹா…
பெண் : அது ஓட ஓட ரேடியேட்டர் வேகுது…
ஆண் : அலேக்…
பெண் : தண்ணி ஊத்தி ஊத்தி மேடு பள்ளம் தாண்டுது…
ஆண் : அலேக்…

பெண் : அது ஓட ஓட ரேடியேட்டர் வேகுது…
தண்ணி ஊத்தி ஊத்தி மேடு பள்ளம் தாண்டுது…

BGM

ஆண் : எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…

BGM

ஆண் : ஓவர் டேக்கிங் செய்யலான்னு ஓட்டமாக ஓட்டும்போது…
பாதர் என் டேன்ஜர் லைட்டு எரியுது…
அங்க ரோடு ரிப்பேர் போர்டு ஒன்னு தெரியுது…
ஆசை ரெட்டை விட்டு சைடு வாங்கி எறங்குது…

பெண் : அடி ஆத்தி கொஞ்சம் பாத்து போங்க…
அவங்க பாடு உங்க பாடு…
ஆக்ஸிடென்ட் ஆகும் போல தோணுது…

ஆண் : லல லலலா…

பெண் : பிரேக்கை அமுக்கி போங்க…
நாளை பின்னே நல்லது…
ஆண் : அலேக்…
பெண் : நெஞ்சு ஆவாலாலே எச்சரிக்கை செய்யுது…

பெண் : பிரேக்கை அமுக்கி போங்க…
நாளை பின்னே நல்லது…
நெஞ்சு ஆவாலாலே எச்சரிக்கை செய்யுது…

BGM

ஆண் : எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…

BGM


Notes : Enthan Kannai Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. எந்தன் கண்ணை பாடல் வரிகள்.


மதுரா நகரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Madhura Nagaril Song Lyrics in Tamil


BGM

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…

ஆண் & பெண் : கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

BGM

ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்…
பொன் மேனிகள் ஜானகி தங்கம்…

BGM

ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்…
பொன் மேனிகள் ஜானகி தங்கம்…
மணி மாடத்திலே வந்து தோன்றும்…
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்…

பெண் : ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே…
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே…
ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே…
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே…

BGM

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

BGM

பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்…
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்…

BGM

பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்…
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்…
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்…
பெரும் காதலிலே களியாட்டம்…

ஆண் : எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்…
உயர் காதலிலே அவன் மன்னன்…
எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்…
உயர் காதலிலே அவன் மன்னன்…

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

BGM

ஆண் & பெண் : அந்தக் காட்சிகள் மாறியதேனோ…
நம் காதலை நாம் பெறத்தானோ…

ஆண் : அந்த தேவ மகள் இவள் தானோ…
பெண் : மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ…

ஆண் & பெண் : நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்…
நல் இன்னிசை பாடிடும் குயில்கள்…

BGM

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

BGM


Notes : Madhura Nagaril Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. மதுரா நகரில் பாடல் வரிகள்.


என்னைத் தொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Ennai Thottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

ஆண் : முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…

ஆண் & பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

BGM

பெண் : ஆஹா… தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன்…
ஓஹோ… தள்ளாடி உள்ளத்தைத் தழுவக் கண்டேன்…
எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன்…
வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்…

பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

ஆண் : ஆஹா… வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன்…
ஓஹோ… வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன்…
ஆஹா… பிஞ்சு கொடியிடை கெஞ்சக் கண்டேன்…
பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்…

ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

BGM

ஆண் & பெண் : ஆஹா… மாலைக்கு மாலை மாயம் கண்டோம்…
ஓஹோ… வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம்…
ஓஹோ… சோலைக் கிளி என்று மாறுகின்றோம்…
சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்…

ஆண் & பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

BGM


Notes : Ennai Thottu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. என்னைத் தொட்டு பாடல் வரிகள்.


அவள் பறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி. ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Aval Parandhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே… } * (2)

BGM

ஆண் : என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…
என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…

ஆண் : என் நெஞ்சுக்கு நினைவில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM

ஆண் : இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…
இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…

ஆண் : என் அன்புக்கு மகள் இல்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM

ஆண் : என் இதயத்தில் பூட்டி வைத்தேன்…
அதில் என்னையே காவல் வைத்தேன்…
அவள் கதவை உடைத்தாளே…
தன் சிறகை விரித்தாளே…
தன் சிறகை விரித்தாளே…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

ஆண் : அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…
அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…

ஆண் : என் உரிமைத் தாயல்லவா…
என் உயிரை எடுத்து கொண்டால்…
என் உயிரை எடுத்து கொண்டால்…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM


Notes : Aval Parandhu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. அவள் பறந்து பாடல் வரிகள்.


Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil

நீரோடும் வைகையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…

பெண் : நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…

பெண் : தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

BGM

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

BGM

பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே…
மங்கை இந்த மங்கல மங்கை…

ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை…
உன் மழலையின் தந்தை…

ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…

பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…

ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…

பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…

ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…

BGM

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

BGM

பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை…
என் குலக்கொடி உன்னை…

ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே…
உன் தோள்களில் இங்கே…

பெண் : உன் ஒரு முகமும் திருமகளின்…
உள்ளமல்லவா…

ஆண் : உங்கள் இரு முகமும்…
ஒரு முகத்தின் வெள்ளமல்லவா…

ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…

BGM

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

பெண் : ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…


Notes : Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. நீரோடும் வைகையிலே பாடல் வரிகள்.