Category Archives: காதலிக்க நேரமில்லை (1964)

என்ன பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Enna Paarvai Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…

ஆண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
என்னை மறந்தேன் இந்த வேலை…
வண்ண வண்ண சேலை தோத்து…
கண்ட சுகம் அம்மா… ஆஆஆ…

BGM

பெண் : தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு…
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா…
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு…
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா…
சின்ன சின்ன நெஞ்சில்…
உன்னை என்ன என்ன அம்மா… ஆ ஹோய்…

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…

BGM

ஆண் : கன்னங்கள் என்னும் தங்க தட்டு…
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ…
கன்னங்கள் என்னும் தங்க தட்டு…
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ…
சொல்ல சொல்ல உள்ளம் துள்ளும்…
இன்பம் என்ன சொல்லம்மா… ஆ ஹோய்…

ஆண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
என்னை மறந்தேன் இந்த வேலை…
வண்ண வண்ண சேலை தோத்து…
கண்ட சுகம் அம்மா… ஆஆஆ…

BGM

பெண் : மை கொண்ட கண்கள் மூடும்…
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ…
மை கொண்ட கண்கள் மூடும்…
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ…
பிஞ்சு தென்றல் நெஞ்சை தொட்டு…
கொஞ்ச கொஞ்ச அம்மா… ஆ ஹோய்…

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…

BGM

ஆண் : ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்…
ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா…
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்…
ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா…
அக்கம் பக்கம் யாரும் இல்லை…
வெட்கம் என்ன சொல்லம்மா… ஆ ஹோய்…

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…


Notes : Enna Paarvai Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. என்ன பார்வை பாடல் வரிகள்.


Anubhavam Pudhumai Song Lyrics in Tamil

அனுபவம் புதுமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Anubhavam Pudhumai Song Lyrics in Tamil


BGM

பெண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
லா லா லா லாலா லா லா…

பெண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
லா லா லா லாலா லா லா…

பெண் : அனுபவம் புதுமை…

BGM

ஆண் : தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்…
ஆஹா… சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்…
அது கூடாதென்றால் மனம் தாளாதென்றால்…
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றால்…
போதாதென்றால்…

ஆண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…

BGM

ஆண் : அனுபவம் புதுமை…

BGM

பெண் : கண் என்ன கண் என்று…
அருகினில் அவன் வந்தான்…
ஆஹா… பெண்ணென்ன பெண்ணென்று…
என்னென்ன கதை சொன்னான்…

பெண் : இது மாறாதென்றான்…
இனி நீயே என்றான்…
கண்ணில் பார்வை தந்தான்…
துணை நானே என்றான்…
நாளை என்றான்…

பெண் : அனுபவம் புதுமை…

BGM

ஆண் : சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்…
ஆஹா… சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்…

ஆண் : அவள் எங்கே என்றால்…
நான் இங்கே நின்றேன்…
அவள் அங்கே வந்தாள்…
நாங்கள் எங்கோ சென்றோம்…
எங்கோ சென்றோம்…

பெண் : பனி போல் குளிர்ந்தது…
கனி போல் இனித்ததம்மா…
ஆஹா… மழை போல் விழுந்தது…
மலராய் மலர்ந்ததம்மா…

பெண் : ஒரு தூக்கம் இல்லை…
வெறும் ஏக்கம் இல்லை…
பிறர் பார்க்கும் வரை…
எங்கள் பிறவியுமில்லை… பிறவியுமில்லை…

பெண் : அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
லா லா லா லாலா லா லா…
லா லா லா லாலா லா லா…
லா லா லா லாலா லா லா…


Notes : Anubhavam Pudhumai Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. அனுபவம் புதுமை பாடல் வரிகள்.


காதலிக்க நேரம் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Kadhalikka Neramillai Song Lyrics in Tamil


ஆண் : காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…

BGM

ஆண் : காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை…
ஜாதகத்தில் வழியுமில்லை…

ஆண் : காதலிக்க நேரம் இல்லை… ஆஹாஆஆ… ஆஆ…

BGM

ஆண் : பஞ்சணையும் கண்டதில்லை…
பால் பழம் குடித்ததில்லை…

BGM

ஆண் : பஞ்சணையும் கண்டதில்லை…
பால் பழம் குடித்ததில்லை…
வஞ்சி உன்னை காணும் வரை…
மனதும் துடித்ததில்லை…

ஆண் : பஞ்சு போல் நரை விழுந்து…
பார்வையும் குழி விழந்து…
பஞ்சு போல் நரை விழுந்து…
பார்வையும் குழி விழந்து…
ரெண்டும் கெட்ட வேளையிலே…
கண்டேனே உன்னையடி கண்டேனே உன்னையடி…

ஆண் : காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை…
ஜாதகத்தில் வழியுமில்லை…

BGM

ஆண் : காயிலே சுவைப்பதில்லை…
கனிந்ததும் கசப்பதில்லை…
காயிலே சுவைப்பதில்லை…
கனிந்ததும் கசப்பதில்லை…
நோயில்லா உடல் இருந்தால்…
நூறு வரை காதல் வரும்…

ஆண் : மாமியார் கொடுமையில்லை…
மாமனார் யாரும் இல்லை…
மாமியார் கொடுமையில்லை…
மாமனார் யாரும் இல்லை…
இந்த சாமியை மனம் முடித்தால்…
சந்தோசம் குறைவதில்லை…
சந்தோசம் குறைவதில்லை…

ஆண் : காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை…
ஜாதகத்தில் வழியுமில்லை…

BGM

ஆண் : அவ்வுலகம் சென்று வந்தேன்…
அமுதம் குடித்து வந்தேன்…
அவ்வுலகம் சென்று வந்தேன்…
அமுதம் குடித்து வந்தேன்…

ஆண் : பொன்னுலகம் போவதற்கு…
புது உடல் வாங்கி வந்தேன்…
பொன்னுலகம் போவதற்கு…
புது உடல் வாங்கி வந்தேன்…

ஆண் : இந்திரனை கண்டு வந்தேன்…
இது பற்றி கேட்டு வந்தேன்…
இந்திரனை கண்டு வந்தேன்…
இது பற்றி கேட்டு வந்தேன்…

ஆண் : சந்திரனை கண்டு வந்தேன்…
சாரசம் நடத்த வந்தேன்…
சந்திரனை கண்டு வந்தேன்…
சாரசம் நடத்த வந்தேன்…

ஆண் : காதலிக்க நேரமுண்டு…
கன்னியுண்டு காளையுண்டு…
காதலிக்க நேரமுண்டு…
கன்னியுண்டு காளையுண்டு…

ஆண் : வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் உண்டு…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியும் உண்டு…

ஆண் : காதலிக்க நேரமுண்டு…
கன்னியுண்டு காளையுண்டு…

BGM


Notes : Kadhalikka Neramillai Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. காதலிக்க நேரம் இல்லை பாடல் வரிகள்.


மாடி மேல மாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Maadimele Maadi Katti Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…

ஆண் : ஆளு அம்பு சேனை வச்சு காரு வச்சு…
போர் அடிக்கும் கோமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே…

குழு : டூ டூ டூ டூ டூடூ… டூ டூ டூ டூ டூடூ…

ஆண் : மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…

ஆண் : ஆளு அம்பு சேனை வச்சு காரு வச்சு…
போர் அடிக்கும் கோமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே…

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…

BGM

ஆண் : பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும்…
மூளை இல்லாதவரே…
வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க…
வெட்கமில்லாதவரே…

ஆண் : பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும்…
மூளை இல்லாதவரே…
வேட்டிய மாத்திக்க சேலைய கட்டிக்க…
வெட்கமில்லாதவரே…

ஆண் : வேலை இன்றி போகாது…
வேறு வேலை தேடாது…
பாட்டு பாடி கூச்சல் போட்டு…
வேலை வாங்குவோம்…

ஆண் : வேலை இன்றி போகாது…
வேறு வேலை தேடாது…
பாட்டு பாடி கூச்சல் போட்டு…
வேலை வாங்குவோம்…

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்…

BGM

ஆண் : ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு…
ராக்ஷஸன் போல் வருவேன்…
நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும்…
நாள் வரை போரிடுவேன்…

ஆண் : ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நான் ஒரு…
ராக்ஷஸன் போல் வருவேன்…
நாளைக்கு வேலைக்கு வா வென்று நீ சொல்லும்…
நாள் வரை போரிடுவேன்…

ஆண் : வானம் வந்து சாய்ந்தாலும்…
மேகம் வந்து வீழ்ந்தாலும்…
வேங்கை போல பாய்ந்து வந்து…
வேலை வாங்குவோம்…

ஆண் : வானம் வந்து சாய்ந்தாலும்…
மேகம் வந்து வீழ்ந்தாலும்…
வேங்கை போல பாய்ந்து வந்து…
வேலை வாங்குவோம்…

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்…

ஆண் : மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…

ஆண் : ஆளு அம்பு சேனை வச்சு காரு வச்சு…
போர் அடிக்கும் கோமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் கோமானே…

BGM

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் கம் அவுட் வேலை வேண்டும்…

BGM

குழு : விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…
விஸ்வநாதன் வேலை வேண்டும்…


Notes : Maadimele Maadi Katti Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. மாடி மேல மாடி பாடல் வரிகள்.


உங்க பொன்னான கைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ், L.R. ஈஸ்வரி & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Unga Ponnaana Kaigal Song Lyrics in Tamil


ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…

BGM

ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும்…
திண்டாட்ட படலாமா… ஹோய்…
தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள்…
கார் ஓட்ட வரலாமா…

ஆண் : சேலாட்டம் கண்ணும் நூலாட்டம் இடையும்…
திண்டாட்ட படலாமா… ஹோய்…
தாலாட்டும் பெண்ணின் பூவாட்டம் கைகள்…
கார் ஓட்ட வரலாமா…

ஆண் : கட்டான மேனி…
கலங்கிட குலுங்கிட வேலை செய்யலாமா…
இது நாகரீகமா போற வேகமா…
நானும் வரலாமா… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : ஆணான படிப்பு நீ படித்தாலும்…
அதுகது துணை வேணும்…
கோடான கோடி பணமிருந்தாலும்…
கும்பிட்டு விழவேணும்…

ஆண் : ஆணான படிப்பு நீ படித்தாலும்…
அதுகது துணை வேணும்…
கோடான கோடி பணமிருந்தாலும்…
கும்பிட்டு விழவேணும்…

ஆண் : கொஞ்சாத கிளியும் கூவாத குயிலும்…
உலகினில் கிடையாது…
இந்த கோபம் ஆகுமோ போக முடியுமா…
நான்தான் விடுவேனா… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM

ஆண் : கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும்…
முன்னாலே வருவேனே… ஹோய்…
கல்யாண தேரில் உல்லாச ஊரில்…
ஊர்வலம் வருவேனே…

ஆண் : கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும்…
முன்னாலே வருவேனே… ஹோய்…
கல்யாண தேரில் உல்லாச ஊரில்…
ஊர்வலம் வருவேனே…

ஆண் : இந்த அத்தானை பார்த்து…
மாமா என்றாலும் துடிப்பேனே…
இந்த அத்தானை பார்த்து…
மாமா என்றாலும் துடிப்பேனே…
அந்த வேலை போனதில்…
இந்த சேவையில் காலத்தை கழிப்பேனே… ஹோய்…

ஆண் : ஓஹோ ஓஓ… உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…

BGM


Notes : Unga Ponnaana Kaigal Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. உங்க பொன்னான கைகள் பாடல் வரிகள்.


நெஞ்சத்தை அள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ், L.R. ஈஸ்வரி & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Nenjathai Alli Song Lyrics in Tamil


BGM

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

ஆண் : என்றென்றும் சொந்தமில்லையோ…
என் நெஞ்சம் உனதில்லையோ…
ஒன்றென்று வந்ததல்லவோ…
இன்னொன்று எங்கு வருமோ…

ஆண் : ஓ… உடலில் நீயும் உயிரில் நானும்…
படரும் கொடியல்லவோ… ஓஹோ ஹோய்…

BGM

ஆண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

பெண் : வா என்று சொல்லும் முன்னமே…
சம்மதம் அங்கு வருமே…
தா என்று கேட்கும் முன்னமே…
தேன் இதழ் கொஞ்ச வருமே…

பெண் : மணக்கும் பூவில் தெளிக்கும் தேனை…
சுவைக்க தடையுமுண்டோ… ஓஹோ ஹோய்…

பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM

ஆண் & பெண் : நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

BGM


Notes : Nenjathai Alli Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. நெஞ்சத்தை அள்ளி பாடல் வரிகள்.


மலரென்ற முகமின்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரி & எம்.எஸ்.ராஜுஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Malarendra Mugamondru Song Lyrics in Tamil


BGM

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…

BGM

பெண் : ஆடிடும் சின்ன உடல்…
பாடிடும் வண்ண இதழ்…
ஆடிடும் சின்ன உடல்…
பாடிடும் வண்ண இதழ்…

பெண் : அஞ்சிடும் வஞ்சி இடை…
கெஞ்சிடும் பிஞ்சு நடை…
அஞ்சிடும் வஞ்சி இடை…
கெஞ்சிடும் பிஞ்சு நடை…

பெண் : அல்லி தண்டு வெள்ளி தண்டை…
முத்து செண்டு கன்னங்கள்…
மின்னல் என்று மின்னகண்டு…
துள்ளி செல்லும் எண்ணங்கள்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…

BGM

பெண் : பொன்மகள் காதல் அன்னம்…
பூமகள் கண்கள் மின்னும்…
பொன்மகள் காதல் அன்னம்…
பூமகள் கண்கள் மின்னும்…

பெண் : நெஞ்சமே துள்ளும் வண்ணம்…
கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்…
நெஞ்சமே துள்ளும் வண்ணம்…
கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்…

பெண் : எள்ளுப்பூவும் முல்லைப்பூவும்…
சேர்ந்து வந்த கன்னிப்பூ…
கொள்ளை கொள்ள இங்கு வந்தால்…
கோலம் கொள்ளும் தாழம்பூ…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

BGM


Notes : Malarendra Mugamondru Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. மலரென்ற முகமின்று பாடல் வரிகள்.