Category Archives: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

Kandukonden Kadukonden Song Lyrics in Tamil

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Kandukonden Kadukonden Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…
விரல் தொடும் தூரத்திலே…
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து…
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி…
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்…
உயிரை உடைப்பாள் ஒருத்தி…

பெண் : என் கண் பார்த்தது…
என் கை சேருமோ…
ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா…
பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா…
ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM

பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்…
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்…

ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும்…
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்…

பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ…
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ…

ஆண் : ஏ… கனவு மங்கையே…
உனது மனது எனது மனதில் இணையுமோ…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்… ஹே ஹேய்ய்…
காதல் முகம் கண்டுகொண்டேன்… ஹே ஹேய்ய்…

ஆண் : விரல் தொடும் தூரத்திலே… ஹே ஹேய்ய்…
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

BGM

ஆண் : நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது…
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது…

பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்…
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்…

ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்…
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்…

பெண் : ஏ… காதல் தேவனே…
எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்…

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…

ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…
பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…

ஆண் : விரல் தொடும் தூரத்திலே…
பெண் : விரல் தொடும் தூரத்திலே…
ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன்…

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…

BGM


Notes : Kandukonden Kadukonden Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வரிகள்.


ஸ்மையை யை யை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவன் ஏகாம்பரம், கிளிண்டன் செரிஜோ & டொமினிக் செரிஜோஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Smiyai Song Lyrics in Tamil


குழு : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
மனதைத் திருடிவிட்டாய்…
ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடிவிட்டாய்…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…

BGM

ஆண் : ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடிவிட்டாய்…
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில்…
ஜீவன் அளந்துவிட்டாய்…

ஆண் : பதினாலில் பூவானேன்…
பதினேழில் தேனானேன்…
இந்த வாக்குமூலம் எதற்கு…

ஆண் : புல்வெளியில் தாகம் நான்…
பூஞ்சாரல் மேகம் நீ…
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்…
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்…

ஆண் : ஒரு தூரல் போடு…
இல்லை சாரல் போடு…
எந்தன் நாணம் நனையட்டுமே…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…

BGM

ஆண் : திறந்த வானம் திறந்த பூமி…
திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா…
ஒளித்த காதல் ஒளிர்ப்பதில்லை…
உயிர்ப்பதில்லை வா வா வா வா…

ஆண் : கண்ணிலே யே யே யே சொப்பனம்…
கரையுதே யே யே யே எவ்வனம்…
ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு…
செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று…
யை யை யை யை…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…

BGM

ஆண் : நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும்…
அதற்குப் பேர்தான் கா கா காதலே…
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும்…
அதற்குப் பேர்தான் கா கா காதலே…

ஆண் : கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே…
குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா…
பூ வாங்கிவா தூக்கம் கலைந்தாலும்…
கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன்…
யே யே யே யே…

ஆண் : ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடி விட்டாய்…
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில்…
ஜீவன் அளந்துவிட்டாய்…

ஆண் : பதினாலில் பூவானேன்…
பதினேழில் தேனானேன்…
இந்த வாக்குமூலம் எதற்கு…

ஆண் : புல்வெளியில் தாகம் நான்…
பூஞ்சாரல் மேகம் நீ…
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்…
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்…

ஆண் : ஒரு தூரல் போடு…
இல்லை சாரல் போடு…
எந்தன் நாணம் நனையட்டுமே…

ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…


Notes : Smiyai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. ஸ்மையை யை யை பாடல் வரிகள்.


கண்ணாமூச்சி ஏனடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Kannamoochi Yenada Song Lyrics in Tamil


பெண் : கண்ணாமூச்சி ஏனடா…

BGM

பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…

பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…

பெண் : அந்த நதியின் கரையை நான் கேட்டேன்…
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்…
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்…
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்…

பெண் : வான் வெளியைக் கேட்டேன்…
விடையே இல்லை…
வான் வெளியைக் கேட்டேன்…
விடையே இல்லை…

பெண் : இறுதியில் உன்னைக் கண்டேன்…
இருதயப் பூவில் கண்டேன்…
இறுதியில் உன்னைக் கண்டேன்…
இருதயப் பூவில் கண்டேன்…

பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…

BGM

பெண் : என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா…
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா…
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா…
நெஞ்சின் அலை உறங்காது…

பெண் : உன் இதழ் கொண்டு வாய் மூட…
வா என் கண்ணா… ஆஆஆ…
உன் இதழ் கொண்டு வாய் மூட…
வா என் கண்ணா…
உன் இமை கொண்டு விழி மூட வா…
உன் உடல்தான் என் உடையல்லவா…

பெண் : பாற்கடலில் ஆடிய பின்னும்…
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்…
பாற்கடலில் ஆடிய பின்னும்…
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்…

பெண் : என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா…
என்னுயிரில் நீ வந்து சேர்க…
உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திட வா…

பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…

BGM

பெண் : வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்…
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்…
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்…
பூவின் கண்ணீரை ரசிப்பாய்…

பெண் : நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா…
அதை நீ காணக் கண்ணில்லையா…
உன் கணவுகளில் நானில்லையா…

பெண் : தினம் ஊசலாடுதென் மனசு…
அட ஊமையல்ல என் கொலுசு…
என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே…

பெண் : என்னுயிர் துடிக்காமலே…
காப்பது உன் தீண்டலே…
உயிர் தர வா…

பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…

BGM


Notes : Kannamoochi Yenada Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. கண்ணாமூச்சி ஏனடா பாடல் வரிகள்.


கொஞ்சும் மைனாக்களே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Konjum Mainakkale Song Lyrics in Tamil


BGM

பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே…
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்…
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே…
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்…

பெண் : அட இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…
இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…

பெண் : நாளை வெறும் கனவு…
அதை ஏன் நம்பனும்…
நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்…

பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே…
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்…

BGM

பெண் : பகலில் ஒரு வெண்ணிலா…
பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா…
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா…

பெண் : விடை சொல் சொல் சொல்…
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்…
விடை சொல் சொல் சொல்…
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்…

பெண் : கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு…
இவை இல்லாமல் வாழ்க்கையா…
நூறு கனவுகள் கண்டாலே…
ஆறு கனவுகள் பலிக்காதா…
கனவே கை சேர வா…

பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே…
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்…

BGM

பெண் : என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்…
எனக்கேற்ற மாதிாி பருவம் மாறட்டும்…

பெண் : பரதம் தம் தம்…
மனதுக்குள் தாம் தூம் திம்…
பரதம் தம் தம்…
மனதுக்குள் தாம் தூம் திம்…

பெண் : பூங்காற்றே கொஞ்சம் கிழித்து…
எங்கள் முக வோ்வை போக்கிடும்…
நாளை என்பது கடவுளுக்கு…
இன்று என்பது மனிதருக்கு…
வாழ்வே வாழ்பவா்க்கு…

பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே…
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்…

பெண் : அட இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…
இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…

பெண் : நாளை வெறும் கனவு…
அதை ஏன் நம்பனும்…
நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்…


Notes : Konjum Mainakkale Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. கொஞ்சும் மைனாக்களே பாடல் வரிகள்.


என்ன சொல்லப் போகிறாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Enna Solla Pogirai Song Lyrics in Tamil


ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்…
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்…
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்…

BGM

ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்…
நியாயமா நியாயமா…
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன…
மௌனமா மௌனமா…

ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல…
நொடி ஒன்று போதுமே…
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே…
ஒரு ஆயுள் வேண்டுமே…

ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்…
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்…
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…

ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்…
நியாயமா நியாயமா…
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன…
மௌனமா மௌனமா…

ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல…
நொடி ஒன்று போதுமே…
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே…
ஒரு ஆயுள் வேண்டுமே…

ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்…
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்…
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…

BGM

ஆண் : இதயம் ஒரு கண்ணாடி…
உனது பிம்பம் விழுந்ததடி…
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி…
கண்ணாடி பிம்பம் கட்ட…
கயிர் ஒன்றும் இல்லையடி…
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி…

ஆண் : நீ ஒன்று சொல்லடி பெண்ணே…
இல்லை நின்று கொல்லடி கண்ணே…
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்…
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே…

ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்…
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்…
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…

ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்…
நியாயமா நியாயமா…
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன…
மௌனமா மௌனமா…

BGM

ஆண் : விடியல் வந்த பின்னாலும்…
விடியாத இரவு எது…
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி…
இவ்வுலகம் இருண்ட பின்னும்…
இருளாத பாகம் எது…
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி…

ஆண் : பல உலக அழகிகள் கூடி…
உன் பாதம் கழுவலாம் வாடி…
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன…
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா…

BGM

ஆண் : என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…
நியாயமா நியாயமா…

ஆண் : என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய்…
மௌனமா மெளனமா…
என்ன சொல்லப் போகிறாய்…


Notes : Enna Solla Pogirai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. என்ன சொல்லப் போகிறாய் பாடல் வரிகள்.


எங்கே எனது கவிதை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Enge Enathu Kavithai Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

பெண் : எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…

பெண் : கவிதை தேடித்தாருங்கள்…
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…

—BGM—

பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்…
தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்…
மையல் கொண்டு மலா் வாடுதே…

பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்…
துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை…
உருகி உருகி மனம் தேடுதே…

பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்…
அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு…
நூறு முறை பிறந்திருப்பேன்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…

—BGM—

பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட…
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே…
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது…
நித்தம் வேண்டும் என்று ஏங்குதே…

—BGM—

பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று…
ஒட்டும் என்று மனம் ஏங்குதே…
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு…
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…

—BGM—


Notes : Enge Enathu Kavithai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. எங்கே எனது கவிதை பாடல் வரிகள்.