பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஸ்ரீநிவாஸ் & கே.எஸ். சித்ரா | ஏ.ஆர்.ரகுமான் | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
Enge Enathu Kavithai Song Lyrics in Tamil
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
பெண் : எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…
பெண் : கவிதை தேடித்தாருங்கள்…
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
—BGM—
பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்…
தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்…
மையல் கொண்டு மலா் வாடுதே…
பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்…
துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை…
உருகி உருகி மனம் தேடுதே…
பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்…
அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு…
நூறு முறை பிறந்திருப்பேன்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
—BGM—
பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட…
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே…
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது…
நித்தம் வேண்டும் என்று ஏங்குதே…
—BGM—
பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று…
ஒட்டும் என்று மனம் ஏங்குதே…
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு…
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…
—BGM—
Notes : Enge Enathu Kavithai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. எங்கே எனது கவிதை பாடல் வரிகள்.