Category Archives: நாட்படு தேறல்

en-kadhala-song-lyrics

என் காதலா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்ரீநிஷா ஜெயசீலன்என்.ஆர்.ரகுணந்தன்நாட்படு தேறல்

En Kadhala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் (வசனம்) : விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்…
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்…
உயிர் உழுகும் மலர்கள்…
மனிதன் தரா ஞானம்… மரம் தரும் எனக்கு…

—BGM—

ஆண் (வசனம்) : உண்ண கனி… ஒதுங்க நிழல்…
உடலுக்கு மருந்து… உணர்வுக்கு விருந்து…
அடைய குடில்… அடைக்கு கதவு…
அழகு வேலி… ஆடும் தூண்…
தடவ தைலம்… தாளிக்க எண்ணெய்…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : வயதால் நம் வாழ்வு முறியுமா…
வாய் முத்தம் வயது அறியுமா…
நிலா வெண்ணிலா…
வயதில் மூத்ததில்லையா…
இருந்தும் நிலவு சொல்லி…
இளைய அல்லி மலர்வதில்லையா…

பெண் : என்வாழ்வில் தந்தை இல்லையே…
தந்தைபோல் கணவன் வேண்டுமே… ஆஆ… ஆஆ…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—

பெண் : ஆணும் பெண்ணும் சேர்வது…
ஆசைப் போக்கில் நேர்வது…
காதல் நீதி என்பது…
காலம் தோறும் மாறுது…

பெண் : ஓஓ… வெட்டுக்கிளியின் ரத்தமோ…
வெள்ளையாக உள்ளது…
விதிகள் எழுதும் ஏட்டிலே…
விதிவிலக்கும் உள்ளது…

பெண் : ஆழி ரொம்ப மூத்தது…
ஆறு ரொம்ப இளையது…
ஆறு சென்று சேரும்போது…
யாரு கேள்வி கேட்பது… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : காதல் சிந்தும் மழையிலே…
காலம் தேசம் அழியுதே…
எங்கே சிந்தை அழியுதோ…
காதல் அங்கே மலருதே…

பெண் : ம்ம்… ம்ம்… அறிவழிந்து போனபின்…
வயது வந்து தோன்றுமா…
பொருள் அழிந்து போனபின்…
நிழல் கிடந்து வாழுமா…

பெண் : அறமிருக்கும் வாழ்விலே…
முரணிருக்கும் என்பதால்…
முரணிருக்கும் வாழ்விலும்…
அறமிருக்கும் இல்லையா… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

பெண் : என் காதலா…
காதல் வயது பார்க்குமா…
நானும் சின்னக் கன்று என்று…
இன்று சிந்தை மாறுமா…

—BGM—


Notes : En Kadhala Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. என் காதலா பாடல் வரிகள்.


இந்த இரவு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஆர்.பி.ஸ்ரவன்அணில் ஸ்ரீனிவாசன்நாட்படு தேறல்

Indha Iravu Song Lyrics in Tamil


ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…

—BGM—

ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும்…
ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும்…

ஆண் : எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும்…
எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும்…

ஆண் : உன்னைநான் முத்தமிட…
உன்னைநான் முத்தமிட…
தடையுண்டோ பைங்கிளி…
தடையுண்டோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…

ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…

—BGM—

ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…

ஆண் : மென்காற்று கண்டங்கள் கடந்திருக்கும்…
வெண்ணிலவு ஒருகீற்று வளர்ந்திருக்கும்…
கண்ணாடிக் கோப்பைகளும் கன்னிமையும் உடைந்திருக்கும்…
முன்னிரவில் பலர்செய்த பாவங்கள் மறந்திருக்கும்…

ஆண் : உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி…
உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…

ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…

—BGM—

ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…

ஆண் : அழகான கவிதைவரி விழுந்திருக்கும்…
அரசாங்கச் சதியொன்று முடிந்திருக்கும்…
சிறைவாசக் கைதிக்கு நாளொன்று குறைந்திருக்கும்…
சேயொன்று கருப்பையில் சிலபொழுது புரண்டிருக்கும்…

ஆண் : உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி…
உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…

ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும்…
ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும்…

ஆண் : எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும்…
எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும்…

ஆண் : உன்னைநான் முத்தமிட…
உன்னைநான் முத்தமிட…
தடையுண்டோ பைங்கிளி…
தடையுண்டோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…

—BGM—


Notes : Indha Iravu Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. இந்த இரவு பாடல் வரிகள்.


நாக்குச் செவந்தவரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துவாகு மாசான்வாகு மாசான்நாட்படு தேறல்

Naakku Chevandhavarae Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

—BGM—

பெண் : நாக்குச் செவந்தவரே…
நாலெழுத்து மந்திரியே…
மூக்கு வெடச்சவரே…
முன்வழுக்கை மன்னவரே…

பெண் : நாக்குச் செவந்தவரே…
நாலெழுத்து மந்திரியே…
மூக்கு வெடச்சவரே…
முன்வழுக்கை மன்னவரே…

பெண் : கூத்து முடிஞ்சிருச்சு…
கொமரிப்புள்ள எதுக்குன்னு…
பாத்தும் பாக்காம…
பரபரன்னு போறீரோ…

—BGM—

குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

—BGM—

பெண் : வைக்கப் போர்ப் படப்புக்கு…
வடஇருட்டு மூலையில…
அக்கப்போர் செஞ்சகதை…
அய்யனுக்கு மறந்திருச்சோ…

பெண் : சவரக் கத்திக்கு…
தப்பிச்ச குறுமுடியில்…
முகர ஒரசுனது…
முழுசாத்தான் மறந்திருச்சோ…

—BGM—

பெண் : மொட்டு மொட்டு மல்லிகைய…
முட்டிமுட்டித் தட்டிவிட்டு…
முத்துமுத்து வேர்வைச் சொட்டு…
மோந்தகதை மறந்திருச்சோ…

பெண் : வாழைத் தோப்புக்குள்ள…
வளவி ஒடச்சகதை…
வாழை மறந்திருக்கும்…
வலதுகையி மறந்திருமோ…

—BGM—

குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

—BGM—

பெண் : தேனேறிப் போயிருந்த…
சிறுக்கிமக தலைமயிரு…
பேனேறிப் போனதய்யா…
பேச்சுவார்த்தை இல்லாம…

பெண் : புள்ளித் தேமலுக்கும்…
புதுவேட்டி மடிப்புக்கும்…
கருப்பட்டி ஒதட்டுக்கும்…
கருத்தகிளி அலையுதய்யா…

—BGM—

பெண் : ஆறுசரம் சங்கிலியோ…
அட்டிகையோ கேக்கலையே…
மஞ்சக் கயித்துக்கு…
மனசுக்குள்ள அரிக்குதய்யா…

பெண் : ஆம்பளைக சகவாசம்…
அடுத்தொருத்தி வாரவரைக்கும்…
பொம்பளைக சகவாசம்…
புதைகாடு போறவரைக்கும்…

—BGM—

குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

குழு (பெண்கள்) : ஒருவாய் வெத்தலைய…
இருவாய் உண்டகதை…
திருவாய் மறந்தாலும்…
தின்னருசி மறந்திருமோ…

—BGM—


Notes : Naakku Chevandhavarae Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாக்குச் செவந்தவரே பாடல் வரிகள்.


தமிழ் ஈழக் காற்றே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்து சத்யப்ரகாஷ்இசைஅரசன்நாட்படு தேறல்

Tamil Eezha Kaatrea Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—

ஆண் : உயிரைக் கொடுத்த அன்னை…
கயிறாய் கிடப்பாளோ…
எலும்பைக் கொடுத்த தந்தை…
நரம்பாய் கிடப்பாரோ…

ஆண் : நல்லூர் முருகன் கோயில்மணியில்…
நல்ல சேதி வருமோ…
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்…
உயிரும் உடலும் நலமோ…

ஆண் : ஓடிய வீதிகள் சுகமா…
எங்கள் ஒருதலைக் காதலி சுகமா…
பாடிய பள்ளிகள் சுகமா…
உடன் படித்த அணில்கள் சுகமா…

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ…
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—

ஆண் : முல்லைத் தீவின் கதறல்…
மூச்சில் வலிக்கிறதே…
நந்திக் கடலின் ஓலம்…
நரம்பை அறுக்கிறதே…

ஆண் : பிள்ளைக்கறிகள் சமைத்து முடித்த…
தீயும் மிச்சம் உள்ளதோ…
எங்கள் ஊரை எரித்து மீந்த…
சாம்பல் சாட்சி உள்ளதோ…

ஆண் : வன்னிக்காடுகள் சுகமா…
எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா…
காய்ந்த கண்ணீர் சுகமா…
இன்னும் காயாத குருதி சுகமா…

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ…
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ…

ஆண் : தமிழ் ஈழக் காற்றே…
தமிழ் ஈழக் காற்றே…
விண்ணின் வழி வந்து வீசு…
எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு…

—BGM—


Notes : Tamil Eezha Kaatrea Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. தமிழ் ஈழக் காற்றே பாடல் வரிகள்.


நாளை ஒரு பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஉத்தாரா உன்னிகிருஷ்ணன், ஷில்வி ஷரோன் & பத்மஜா ஸ்ரீனிவாசன்ராஜீவ் மேனன்நாட்படு தேறல்

Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil


பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

பெண் : தாவரங்கள் கைதட்டும்…
தாய்ச்செடிக்குக் கொண்டாட்டம்…
வீண்மீன் போன்றதொரு மண்மீன் நானென்று…
வான்வெளியைப் பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும்…

பெண் : அழியும் பொருளோடு…
அழியாத பேரழகு…
சேர்ந்தவிதம் எங்ஙனமோ…
தெய்வங்கள் உரையாடும்…
தெய்வங்கள் உரையாடும்…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…

—BGM—

பெண் : சாயம்போன வாழ்வோடு…
சட்டென்று நிறமூட்டும்…
காற்றினைத்து வைத்து…
காயவைத்து மணமூட்டும்…

பெண் : வரிவண்டு பசியாற…
வாவென்று தேனூட்டும்…
உண்டாடிய களைப்பாற…
உள்வீட்டில் மஞ்சமிடும்…

பெண் : குலமகளின் குழல் சேர்ந்தால்…
குலம் வளர்க்கும் பொருளாகும்…
பூக்கூடை சேர்ந்தாலோ…
பூக்காரி உணவாகும்…

—BGM—

பெண் : சந்நிதி சேர்ந்தாலோ…
சாமிக்கு வரமாகும்…
சருகாய்ப் போனாலும்…
பூமிக்கு உரமாகும்…

பெண் : மணங்கொள்ளும் மேடையிலே…
மங்கலத்தின் மணமாகும்…
படமாகும் வேளையிலோ…
படைக்கின்ற சரமாகும்…

பெண் : சின்னஞ்சிறு பூவோடு…
என்னென்ன பெருவாழ்வு…
நூற்றாண்டு வாழ்வோடு…
நமக்குண்டா பூவாழ்வு…

—BGM—

பெண் : நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…


Notes : Naalai Oru Poo Malarum Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாளை ஒரு பூ மலரும் பாடல் வரிகள்.


மேற்குத் தொடர்ச்சி மலை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஅந்தோனி தாசன்அந்தோனி தாசன்நாட்படு தேறல்

Merkku Thodarchi Mala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்…
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்…
மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்…
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்…

ஆண் : மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி…
வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி…
மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி…
வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி…

ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்…
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்…

—BGM—

ஆண் : வைகை நதிமேல என் வலதுகை நனைக்காம…
வைகையில வெளையாடும் வாளமீனு தூங்காது…
பூமரத்துக் கீழே நான் புதுப்பாட்டு எழுதாம…
பூமரத்தில் கூடுகட்டும் புறா இரை கொள்ளாது…

ஆண் : கத்தாழங் காடு எங்கால்சூடு காங்காம…
கத்தாழம் புதரோட காடைமுட்டை போடாது…
மஞ்சளாறு அணையில் நான் மலைக்காத்து வாங்காம…
மஞ்சளாத்து மூலையில மணிக்குருவி மேயாது…

ஆண் : மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா…
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா…
மலையைக் கொஞ்சம் கடிச்சுக் கிட்டே கூழ்குடிச்ச பூமியடா…
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா…

ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்…
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்…

—BGM—

ஆண் : கும்பக்கரைச் சாலையில கோமிய வாசம் புடிக்காம…
மண்டக்குள்ள மல்லுக்கட்டி மல்லியப்பூ பூக்காது…
கெடையாட்டு மந்தையில கெடாக் கூத்துக் காங்காம…
காஞ்சுபோன பொழப்புக்குள்ள கற்பனையே கெளம்பாது…

ஆண் : சாதிசனம் பேசும் மொழி சங்கீதம் கேளாம…
இதிகாச எழுத்துக்கு சகவாசம் இருக்காது…
சுட்ட மீன் கவுச்சி வந்து சுர்ருன்னு ஏறாம…
எண்சீர் விருத்தத்தில் ஏழாஞ்சீரு வாராது…

ஆண் : மலையைக் கொஞ்சம் கடிச்சுக்கிட்டே கூழ்குடிச்ச பூமியடா…
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா…
மலையைக் கொஞ்சம் கடிச்சுக்கிட்டே கூழ்குடிச்ச பூமியடா…
மண்ணும் மழையும் எங்க பரம்பரைக்கே சாமியடா…

ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்…
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்…
மாசம் ஒருவாட்டி நான் வடுகபட்டி போகாட்டி…
வலது கைநீட்டி நான் மலையோட பேசாட்டி…

ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை இளைச்சுப் போகும்…
அந்த மேகாத்து மேல்மூச்சு வாங்கிப் போகும்…

—BGM—


Notes : Merkku Thodarchi Mala Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. மேற்குத் தொடர்ச்சி மலை பாடல் வரிகள்.


நாம் நடந்த தெருவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்து ஆலப் ராஜுஆலப் ராஜுநாட்படு தேறல்

Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

—BGM—

ஆண் : இந்தத் தெருவில் காகம் கரைந்தால் இசைதான்…
இந்தத் தெருவில் புழுதி பறந்தால் மணம்தான்…
இந்தத் தெருவில் வேப்பங் கனியும் தேன்தான்…
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான்…

ஆண் : காதல் நடந்த வீதியிலே…
நடந்து பார்த்தல் கொடுமையே…
தேகம் தேடி ஆடை ஒன்று…
நடந்து போதல் நரகமே…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…

—BGM—

ஆண் : சாயம்போன பூக்கள் பூக்கும் மரங்கள்…
நம் கன்னம் போலக் காரை பெயர்ந்த சுவர்கள்…
திண்ணை எல்லாம் ஓடிப்போன குடில்கள்…
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும் தடங்கள்…

ஆண் : வீதியிருந்தும் வெறுமையாய்…
நாதியிருந்தும் தனிமையாய்…
இலக்கணத்தில் மட்டும் அல்ல…
வாழ்க்கையிலும் ஒருமையாய்…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
ம்ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—


Notes : Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாம் நடந்த தெருவில் பாடல் வரிகள்.


அடையாளம் ஏராளம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஅந்தோனி தாசன் & வாகு மாசான் வாகு மாசான் நாட்படு தேறல்

Adaiyalam Yeralam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—

பெண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

பெண் : கும்பி எரியுதய்யா…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதய்யா…
தோணுதய்யா பழைய கதை…

—BGM—

ஆண் : ஓஓ… மின்னல் வெட்டும் ராத்திரியில்…
சன்னல் பக்கம் நீஅழைக்க…
அந்நேரம் பாத்து…
அஞ்சாறு நாய் கொலைக்க…

ஆண் : வெறிச்சோடிப் போயிருந்த…
வீதியில நான்விழுந்து…
தெறிச்சோடிப் போனதுக்கு…
தெருவிளக்கு அடையாளம்…

பெண் : ஓஓ… சொட்டாங்கல்லு ஒண்ணு…
எந் தொடைப்பக்கம் தவறிவிழ…
கல்லெடுக்கும் சாக்குல…
நீ கள்ளத்தனம் பண்ண…

பெண் : ஆடி விழுந்ததுக்கும்…
ஆளவிடு சாமியின்னு…
ஓடி ஒளிஞ்சதுக்கும்…
ஓடைக்கரை அடையாளம்…

ஆண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—

பெண் : ஓஓ… சீலகட்டத் தெரியாத…
சிறுமியின்னு பாக்காம…
வேளகெட்ட வேளையில…
வெறிகொண்டு நீயணைக்க…

பெண் : மாமான்னு மிரண்டதுக்கும்…
மணமாலை கேட்டதுக்கு…
ஆமான்னு சொன்னதுக்கும்…
அம்மன்கோயில் அடையாளம்…

ஆண் : ஓஓ… ஊருக்கே தெரியாம…
யாருக்கோ பெண்டாகி…
குதிரைவண்டி ஏறி…
கொடிக்கால் கடக்கையில…

ஆண் : மடிவிழுந்த கண்ணீரு…
மழையாகிப் போனதுக்கு…
இடிவிழுந்த ஆலமரம்…
இன்னைக்கும் அடையாளம்…

—BGM—

பெண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—


Notes : Adaiyalam Yeralam Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. அடையாளம் ஏராளம் பாடல் வரிகள்.


ஆம்பல் பூவை சாம்பல் செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்மிதாயஷ்வந்த் நாக்நாட்படு தேறல்

Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil


பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : எரியும் தீயை உறையும் என்றாய்…
ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று…
காட்சி சாட்சி உண்டா சொல்லு…

பெண் : உண்டா சொல்லு…

—BGM—

பெண் : ஆண்கள் செய்த ஆதிக்கம்…
பெண்கள் வாழ்வை சோதிக்கும்…
ராமன் செய்த தீக்குழி…
பெண்ணை இன்னும் பாதிக்கும்…

குழு (பெண்கள்) : பெண்ணை இன்னும் பாதிக்கும்…

பெண் : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்…
அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்…
அலையும் நீரும் அலையும் போதும்…
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

குழு (பெண்கள்) : ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

—BGM—

பெண் : தேகம் என்ற கோயிலில்…
காதல் என்ற தீபத்தை…
மானம் என்ற கைகளால்…
நாளும் நாளும் காக்கிறேன்…

பெண் : கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…
கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…

பெண் : அசையா மனமே கற்பின் திண்மை…
அடியாள் அசையாள் அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—


Notes : Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் பாடல் வரிகள்.


தாலாட்டு நாட்படு தேறல் – 08

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துபி. சுசீலா, கே.எஸ். சித்ரா & ஹரினிஎன்.ஆர்.ரகுணந்தன்ஆல்பம்

Thalaattu – Naatpadu Theral – 08 Song Lyrics in Tamil


பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : வண்ணவண்ணக் கோமளமே…
வலதுகை மாம்பழமே…
இனம்பெருத்த வம்சத்தில்…
சனம்பெருத்த குடும்பத்தில்…
ஆறாம் திருமகனாய்…
ஆளவந்த சோழமன்னா…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

பெண் : புள்ளிமான் கோம்பையில…
புலிவந்து போகுதின்னு…
பொன்வேல் கைவாங்கி…
புலியெறிய வந்தவனே…

பெண் : சித்தெறும்பு கடிச்சாலும்…
சித்தப்பா வருவாக…
தாங்கித் தோள்மாத்த…
தாய்மாமன் வருவாக…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

பெண் : தாத்தாமார் தூக்கிவச்சா…
தாடிமுடி குத்துமின்னு…
அள்ளி அள்ளி மார்பணைக்க…
ஐத்தமார் வருவாக…

பெண் : பாட்டுப் பலபடிச்சு…
பால்சோறு ஊட்டிவிடும்…
கூட்டுக் குடும்பமடா…
குலவிளக்கே கண்ணுறங்கு…
குலவிளக்கே கண்ணுறங்கு…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : சின்னஞ்சிறு பிறையே…
சிவப்புக்கல் ரத்தினமே…
எண்ணக் களஞ்சியமே…
ஏலம்பூ வாசகமே…

—BGM—

பெண் : அப்பன் வெளியூரு…
ஆத்தா தனியாளு…
கூட்டுக் குடும்பம் இப்போ…
குடைசாஞ்சு போனதடா…

பெண் : தாய்மாமன் பொழப்புக்கு…
தாராவி போயிட்டாக…
சித்தப்பா எல்லாரும்…
சீமையில இருக்காக…

—BGM—

பெண் : உம்போலச் செல்வந்தன்…
உலகத்தில் கண்டதில்ல…
எம்போல ஏழையை நீ…
எங்காச்சும் கண்டதுண்டா…

பெண் : எச்சிப்பால் தீந்ததடா…
இருந்தவரை ஊட்டிவிட்டேன்…
மிச்சப்பால் ஊறும்வரை…
மின்மினியே கண்ணுறங்கு…
மின்மினியே கண்ணுறங்கு…

—BGM—

பெண் : மாணிக்க மாமணியே…
மார்க்கண்டன் புத்திரனே…
சோறூட்டச் சொந்தமில்ல…
தொட்டிலிட பந்தமில்ல…
நாதியத்த குடும்பத்தில்…
நாயகமா வந்தவனே…

—BGM—

பெண் : ஆத்தா ஒரு மூலையில…
அப்பன் ஒரு மூலையில…
காத்தாப் பறக்குறாக…
கவர்மெண்ட்டு வேலையில…

பெண் : வீடியோ பார்த்தபடி…
வேலைக்காரி தூளியாட்ட…
ஆடியோ கேட்டபடி…
ஆதவனே கண்ணுறங்கு…

—BGM—

பெண் : ஒத்தையில பொறந்தவனே…
உனக்காரும் துணையில்ல…
வித்தையெல்லாம் கத்துக்கிட்டு…
வெளிநாடு போமகனே…

பெண் : லண்டன் திருமகளோ…
லாஸ்ஏஞ்சல்ஸ் மருமகளோ…
பெத்ததாய் தகப்பனுக்கு…
பத்திரிகை கொடுமகனே…
பத்திரிகை கொடுமகனே…

—BGM—


Notes : Thalaattu – Naatpadu Theral – 08 Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டு – நாட்படு தேறல் – 08 பாடல் வரிகள்.