பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | ஆல்பம் |
வைரமுத்து | ஆர்.பி.ஸ்ரவன் | அணில் ஸ்ரீனிவாசன் | நாட்படு தேறல் |
Indha Iravu Song Lyrics in Tamil
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
—BGM—
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும்…
ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும்…
ஆண் : எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும்…
எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும்…
ஆண் : உன்னைநான் முத்தமிட…
உன்னைநான் முத்தமிட…
தடையுண்டோ பைங்கிளி…
தடையுண்டோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
—BGM—
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஆண் : மென்காற்று கண்டங்கள் கடந்திருக்கும்…
வெண்ணிலவு ஒருகீற்று வளர்ந்திருக்கும்…
கண்ணாடிக் கோப்பைகளும் கன்னிமையும் உடைந்திருக்கும்…
முன்னிரவில் பலர்செய்த பாவங்கள் மறந்திருக்கும்…
ஆண் : உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி…
உயிர் ரெண்டும் இடம்மாறத் தழுவாயோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
—BGM—
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஆண் : அழகான கவிதைவரி விழுந்திருக்கும்…
அரசாங்கச் சதியொன்று முடிந்திருக்கும்…
சிறைவாசக் கைதிக்கு நாளொன்று குறைந்திருக்கும்…
சேயொன்று கருப்பையில் சிலபொழுது புரண்டிருக்கும்…
ஆண் : உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி…
உறவேதும் நேராமல் பிரிவாயோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…
ஆண் : இந்த இரவு தீர்வதற்குள்ளே…
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும்…
ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும்…
ஆண் : எத்தனையோ கருப்பையில் உயிர்த்திரவம் விழுந்திருக்கும்…
எத்தனையோ படுக்கைகளில் நோய்த்துன்பம் முடிந்திருக்கும்…
ஆண் : உன்னைநான் முத்தமிட…
உன்னைநான் முத்தமிட…
தடையுண்டோ பைங்கிளி…
தடையுண்டோ பைங்கிளி…
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி…
—BGM—
Notes : Indha Iravu Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. இந்த இரவு பாடல் வரிகள்.