vaanum-mannum-song-lyrics

வானும் மண்ணும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராபரத்வாஜ்காதல் மன்னன்

Vaanum Mannum Song Lyrics in Tamil


ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…

பெண் : ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை…
அது இனம் பார்ப்பதில்லை…
அது பொசுக்கென்று பூத்திடுதே…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…

பெண் : ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை…
அது இனம் பார்ப்பதில்லை…
அது பொசுக்கென்று பூத்திடுதே…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : நியாயமா இது பாவமா…
என்று சொல்ல யாரும் இங்கு இல்லை…

பெண் : மௌனமே மொழியானதால்…
அட பாஷை என்பதொரு தொல்லை…
அடுத்தொன்று தோன்றவில்லை…

ஆண் : ஆ ஆ… வெண்ணிலா நீராற்றிலே என்றும்…
வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை…

பெண் : வெண்ணிலா தங்க சேற்றிலே…
இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை…
இலக்கணம் பார்க்கவில்லை…

ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி…
பார்ப்பதுவும் இல்லை…

பெண் : ஆ ஆ… உறவு மாறலாம்…
உந்தன் கையில் அது இல்லை…

ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று…
மேகம் யோசிப்பது உண்டோ…
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு…
காதல் கூடுவது உண்டோ…
உணர்ச்சிக்கு பாதை உண்டோ…

ஆண் : விதியினும் காதல் வலியது…
இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ…
காதலின் திசை ஆயிரம்…
அது கண்டு சொன்னவர்கள் உண்டோ…
கனவுக்கு வேலியுண்டோ…

பெண் : காலம் சொல்லுவதை காதல்…
கேட்பதுவும் இல்லை…

ஆண் : ஆ ஆ… ஆசை என்ற நதி…
அணையில் நிற்பதுவும் இல்லை…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…

பெண் : மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே…


Notes : Vaanum Mannum Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. வானும் மண்ணும் பாடல் வரிகள்.