தேன் காற்று

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thaen Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…
அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள்…
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

BGM

பெண் : உன் கனக கனக மனம் உலக உலக கணம்…
எடையிட முடியாது…
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்…
முதுகில் கோது…

ஆண் : உன் அழகு அழகு முகம் பழக பழக…
சுகம் ஒரு துளி திகட்டாது…
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்…
நிகரும் ஏது…

பெண் : இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்…
சுமப்பது நீ அல்லவா…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…

ஆண் : அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

BGM

ஆண் : நான் அலையும் அலையும் அலை…
கரையை அடைவதில்லை…
கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை…
மாபெரும் அலை முடிவே இல்லை…

பெண் : நான் பொழியும் பொழியும் மழை…
பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை…
ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை…

ஆண் : ஓஹோ… நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு…
அதன் பின் நான் கிறுக்கு…

ஆண் : ஓ… தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள் பாதி கனாவில்…
எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…


Notes : Thaen Kaatru Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Thamarai. தேன் காற்று பாடல் வரிகள்.