பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சோனு நிகம் & ஸ்வேதா மோகன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | கிரீடம் |
Vizhiyil Song Lyrics in Tamil
ஆண் : கண்ணோடு கண் சேரும் போது…
வார்த்தைகள் எங்கே போகும்…
கண்ணே உன் முன்னே வந்தால்…
என் நெஞ்சம் குழந்தை ஆகும்…
—BGM—
ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…
—BGM—
பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…
ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…
பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…
ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…
பெண் : ஆ… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…
—BGM—
ஆண் : இதுவரை என் இருதயம்…
இந்த உணர்வினில் தடுமாறவில்லை…
பெண் : முதல்முறை இந்த இளமையின்…
சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை…
ஆண் : குடையோடு நான் போனேன்…
வழியினில் ஏனோ நனைகின்றேன்…
பெண் : கடிகாரம் இருந்தாலும்…
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்…
ஆண் : என் தனிமைக்கு தனிமைகள்…
நீ வந்து கொடுத்தாய்…
ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…
பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…
—BGM—
ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே…
சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை…
பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில்…
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை…
ஆண் : உன்னோடு நான் பேசும்…
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே…
பெண் : உரையாடல் தொடர்ந்தாலும்…
மௌனங்கள் கூட பிடிக்கிறதே…
ஆண் : என் கனவுக்கு கனவுகள்…
நீ வந்து கொடுத்தாய்…
ஆண் & பெண் : விழியில் உன் விழியில்…
ஆண் : வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே…
பெண் : ம்ம்… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…
ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…
பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…
ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…
Notes : Vizhiyil Song Lyrics in Tamil. This Song from Kireedam (2007). Song Lyrics penned by Na. Muthu Kumar. விழியில் உன் விழியில் பாடல் வரிகள்.