Tag Archives: ஏகாதசி

குஜ்ஜு குஜ்ஜு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிநான்சி சில்வியாவிஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Gujju Gujju Goods Vandi Song Lyrics in Tamil


{ குழு : சும் சிக்கு சிக்கு சும்…
சும் சிக்கு சிக்கு சும்…
சும் சிக்கு சிக்கு சும்…
சும் சும் சும்… } * (2)

BGM

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டு விலை என்ன…
குழு : என்ன…

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டுவிலை என்ன…
குழு : என்ன…

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

BGM

குழு : எப்பா எப்பா யானையப்பா…
உன் கால்கள் நாலும் தூங்கலப்பா…
எங்களாட்டம் திரியாம…
ஏன் பாகனுக்கு நீ கட்டுப்பட்ட…

BGM

பெண் : கொட்டைக்காட்டு மண்ணுல…
குழு : கிட்டிப்புள்ள அடிப்போம்…
பெண் : சட்ட துணி நெனைச்சி…
குழு : குட்டைத்தண்ணி குடிப்போம்…

பெண் : சோறுகட்டு ஊத்திக்கிட்டு…
குழு : பூமியைத்தான் சுத்தினோம்…
பெண் : ஓடைக்குள்ள நடந்ததை…
குழு : ஊருக்குள்ள கூவினோம்…

பெண் : இந்த முள்ளுக்காடுதான்…
எங்களோட ஊரு…
ஈச்சமர பழம்தான் திங்கச்சோறு…

பெண் : பெயிலாக்கும் வாத்தியாரு…
வில்லன் நம்பியாறு…
பெல்லடிக்கும் வாட்ச்மேன் எம்ஜியாரு…

குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டு விலை என்ன…
குழு : என்ன…

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

ஆண் : தந்தானே னன்னே ஓஓ…
தானே நானே ஓஓஓ…
தானே னன்னே னன்னே ஓஓ…

குழு : பச்ச பச்ச கிளியக்கா…
பேச எங்க கத்துகிட்ட…
சிரிச்சி வெக்காம ஏசி வெளுக்க ஒத்துக்கிட்ட…

பெண் : சோளக்காட்டு மைக்குல…
குழு : சிட்டுக்குருவி பாடுது…
பெண் : சாமந்தி பூ கட்டிக்கிட்டு…
குழு : ரேடியோ தான் போடுது…

பெண் : விளையாட தான் ஆள் இல்லாம…
குழு : டிவி பார்க்குது விழுந்து…
பெண் : வாத்தியாரு சொட்டையில…
குழு : வீட்டு பாடம் எழுது…

பெண் : வெயில் எங்க முதுகுல…
எப்போதுமே நடக்கும்…
மூத்திரத்த பெய்ஞ்ச படி…
பாயில் படுப்போம்…

பெண் : மத்தியானம் குளிப்போம்…
மழை பெய்ஞ்ச்சா குளிப்போம்…
சத்துணவு முட்டைக்காக…
ஸ்கூலுக்கு போவோம்…

குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டு விலை என்ன…
குழு : என்ன…

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

ஆண் : தந்தானே னன்னே ஓஓ…
தானே நானே ஓஓஓ…
தானே னன்னே னன்னேனோ…


Notes : Gujju Gujju Goods Vandi Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Ekadesi. குஜ்ஜு குஜ்ஜு பாடல் வரிகள்.


வடக்கா தெற்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிவினீத் ஸ்ரீனிவாசன்விஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Vadakka Thekka Song Lyrics in Tamil


BGM

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
என் இருவிழிகள் கரையுதடி…
சொன்னாலும் கேட்கலையே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

BGM

ஆண் : நீ மொகம் பார்க்கும் கண்ணாடியில…
உன் நெத்திப்பொட்டு இருக்கு…
நீ குளிச்ச இடத்துலத்தான்…
மஞ்சத்துண்டு கெடக்கு…

ஆண் : நீ விட்டத்துல சொருகி வச்ச…
கோழி இரெக்கை இருக்குதடி…
நீ சிக்கெடுத்துப் போட்ட முடி…
கால சுத்திக்கெடக்குதடி…

ஆண் : என்னை சுத்தி எல்லாமே…
உன்பேரத்தான் சொல்ல…
என்னை ஒத்தையில விட்டுப்புட்டா…
நான் எங்க செல்ல…
நான் எங்க செல்ல…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

BGM

ஆண் : நீ விரல் நீட்டி கொஞ்சம் பேசையில…
அடி வானவில்லும் உதிக்கும்…
நீ நடந்த தடத்தில்தான்…
சொர்க்கவாசல் திறக்கும்…

ஆண் : நீ அன்னம் என்று தெரியாம…
அம்பு கொண்டு எஞ்சிப்புட்டேன்…
இந்தப்பாவம் தீர்த்திடத்தான்…
எந்த ஆத்தில் குளிக்கப்போவேன்…

ஆண் : நான் விடும் கண்ணீருல…
அரக்கானி நெனைஞ்சிடுமே…
அதுல உழுது வெதைச்சாலும்…
ஒரு போகம் வெளைஞ்சிடுமே…
அதுல ஒரு போகம் வெளைஞ்சிடுமே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…

ஆண் : இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
இறைதேடிப் போனப்பறவை நீ இன்னும்…
கூடுவந்து சேரலையே…
என் இருவிழிகள் கரையுதடி…
சொன்னாலும் கேட்கலையே…

ஆண் : வடக்கா தெற்கா கெழக்கா மேற்கா…
எந்த திசைப்போனப்புள்ள…
என் நெஞ்சுக்கூடுத் தாங்கவில்லை…


Notes : Vadakka Thekka Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Ekadesi. வடக்கா தெற்கா பாடல் வரிகள்.


Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil

பூ நாழி பொன் நாழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிசித் ஸ்ரீராம்ஜி. வி. பிரகாஷ் குமார்அநீதி

Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது…
உனக்கொரு மரமாவேன்…
நான் இலையாய் மண்ணில் விழுந்து…
நான் வேருக்கு உரமாவேன்…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…

BGM

ஆண் : மஞ்ச பாப்பாத்தி…
கண்ணே நீதான்டா…
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா…

ஆண் : நாக்கு ஊத்தெடுக்கும்…
வெல்லம் நீதான்டா…
தீபம் ஏத்தி வைக்கும்…
செல்ல தீதான்டா…

ஆண் : உன் பாசம் மூட்ட கட்ட…
சாக்கொன்னு வேணும்…
என் ஆச உச்சத்துக்கு…
ஏன் ராசா போனும்…

ஆண் : தேய்பிறையே இல்லையப்பா…
பிள்ளை வானத்தில்…
சேர்ந்திடும் சிந்தும் சோறும்…
அன்னதானத்தில்…

ஆண் : உன் பேச்சில் கொஞ்சக்காடு…
நனைகிறதே…
உன் வாசம் தேடி காத்தும்…
அலைகிறதே…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர் காட்ட போறேன்…

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது…
உனக்கொரு மரமாவேன்…
நான் இலையாய் மண்ணில் விழுந்து…
நான் வேருக்கு உரமாவேன்…

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…

BGM


Notes : Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil. This Song from Aneethi (2023). Song Lyrics penned by Ekadasi. பூ நாழி பொன் நாழி பாடல் வரிகள்.


ஆள சாச்சிபுட்டா கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிஅனிருத் ரவிசந்தர்நவின்வில் அம்பு

Aale Saachuputta Kannala Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆள சாச்சிபுட்டா கண்ணால…
ஐயோ தாங்கலயே என்னால…
மூச்ச வாங்கி போறேன் உன்னால…
பேச்சே நின்னுருச்சு தன்னால…

ஆண் : நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி…
குந்திக்கிட்டு ஆடுறா…
நூத்தி எட்ட கொண்டாங்கடா…
பீப்பியதான் ஏத்துரா…

BGM

ஆண் : காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

BGM

ஆண் : ஆள சாச்சிபுட்டா கண்ணால…
ஐயோ தாங்கலயே என்னால…
மூச்ச வாங்கி போறேன் உன்னால…
பேச்சே நின்னுருச்சு தன்னால…

ஆண் : காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

BGM

ஆண் : நா லுங்கிய ஏத்திதான் கட்டுவேன்…
இப்போ தரையத்தான் கூட்ட வச்சா…
நா சேட்டைய சேவையா செய்யுவேன்…
என் வாலதான் சுருட்ட வச்சா…

ஆண் : நானோ தனி ஆளு…
அவ சேந்தா செம தூளு…
ஒண்ணாம் நம்பர் 420ய…
ஹீரோவா ஆக்கிப்புட்டா…

ஆண் : நானும் காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

BGM

ஆண் : உன் நகத்த நீ கடிச்சிதான் துப்புற…
அட தரையெல்லாம் பூக்குதடி…
என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்குற…
உள்ள ஜீவ்வுனு ஏறுதடி…

ஆண் : போடி சண்டாளி…
உன்னால தவிச்சேண்டி…
ஒண்ணாம் நம்பர் 420ய…
ஹீரோவா ஆக்கிப்புட்டா…

ஆண் : நானும் காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

ஆண் : காணாம போனேன்டா கொய்யால…
குழு : கொய்யால…
ஆண் : என்னமோ ஆச்சுடா மெய்யால…
குழு : மெய்யால…
ஆண் : தலைகீழா நடக்குறேன் கையால…
குழு : கையால…
ஆண் : இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

BGM


Notes : Aale Saachuputta Kannala Song Lyrics in Tamil. This Song from Vil Ambu (2016). Song Lyrics penned by Ekadasi. ஆள சாச்சிபுட்டா கண்ணால பாடல் வரிகள்.


நீ ஒத்த சொல்லு சொல்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிரஞ்சித் & நீத்தாவிஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Nee Otha Sollu Sollu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன்… பரிசா…

பெண் : உன் ஒத்த துணை போதும்…
அந்த ஆகாயமும் நீரு நிலமும்…
காத்தும் நெருப்பும்…
அத விட என்ன பெரிசா… பெரிசா…

ஆண் : தாயின் முகம் கண்டதில்ல…
தாலேலோ கேட்டதில்ல…
உன் முகம் பார்த்த பின்னே…
நான் வாழ ஆசைபட்டேன்…

பெண் : தாயாக மாறுகிறேன்…
தாலாட்டு பாடுகிறேன்…

ஆண் : தானானே தனனனனா…
தனனனனனனா…

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன் பரிசா…

பெண் : உன் ஒத்த துணை போதும்…
அந்த ஆகாயமும் நீரு நிலமும்…
காத்தும் நெருப்பும்…
அத விட என்ன பெரிசா பெரிசா…

BGM

ஆண் : வெந்து காஞ்ச பொட்டலுல…
வேரும் தீஞ்சு நிக்கையில…
பிஞ்சு காலில் மழைய கொண்டு…
வந்த சாமி நீதானே…

பெண் : அத்து வான காட்டுக்குள்ள…
நான் பாராங்கல்லா கிடக்கையில…
கோபுரத்து உச்சியில என்ன…
ஏத்துன சாமி நீதானே…

ஆண் : ஏ… கத்தாழையும் செந்தாழையா…
ஆனதென்ன உன்னால…
உள்ள காத்தாடிதான் நெஞ்சுக்குள்ள…
சுத்துதடி தன்னால…

பெண் : பாய் போட்டு தூங்கையில…
வாராயே கனவுக்குள்ள
என்னனு கேக்கையில…
நநனே நனனன…

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன் பரிசா…

BGM

ஆண் : நீ கொடுத்த தண்ணியில…
தீர்த்த வாசம் இருக்கும் புள்ள…
உன் வார்த்த விசிறிய போல…
வெக்கையில் எனக்கு வீசுதடி…

பெண் : அம்ம ஊசி தழும்பு கூட…
மாஞ்சி போகும் உண்மையில…
அன்பு கூட்டி நீதான் தந்த…
முத்த ஈரம் காயாதோ…

ஆண் : நீ வெல்ல கட்டி வச்சிருக்க…
தொண்ட குழி ஓரத்துல…
உன் ஒத்த ஜடை என்ன தொட…
கேக்குறியே ஜாடையில…

ஆண் : காதல் ஒரு சூதாட்டம் தான்…
கூட நின்ன ஞாயம் இல்ல…
பெண் : ஹ்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : ஒண்ணா சேர்ந்த தாயும் புள்ள…
பெண் : நநனே நநனே…

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன் பரிசா…

பெண் : உன் ஒத்த துணை போதும்…
அந்த ஆகாயமும் நீரு நிலமும்…
காத்தும் நெருப்பும்…
அத விட என்ன பெரிசா… பெரிசா…

ஆண் : தாயின் முகம் கண்டதில்ல…
தாலேலோ கேட்டதில்ல…
உன் முகம் பார்த்த பின்னே…
நான் வாழ ஆசைபட்டேன்…

பெண் : உறவாக வந்தவளா…
உயிராக சேர்ந்தவளா…

ஆண் : ஆத்தா நீ சாமி போல…
சொல்ல போன அதுக்கும் மேல…


Notes : Nee Otha Sollu Sollu Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Ekadesi. நீ ஒத்த சொல்லு சொல்லு பாடல் வரிகள்.


கோண கொண்டைக்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிஜி. வி. பிரகாஷ் குமார்என்.ஆர். ரகுநந்தன்மத யானை கூட்டம்

Kona Kondakari Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : தினம் தினம் திருக குள்ள…
கேப்பையாட்டம் என்ன திரிக்கிற…
அய்யய்யோ கடுகுதுண்டு எனைய வச்சு…
கிறங்க அடிக்கிற…

ஆண் : குமரி புள்ள நேசம்…
அட கோழி குழம்பு வாசம்…
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குற…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

BGM

ஆண் : சொளக பாக்குறேன்…
இதயம்போல் தெரியுதே…
அடுப்பு தீயபோல் உசுரும் எரியுதே…

ஆண் : காலுல நடக்குறேன்…
மனசுல பறக்குறேன்…
அவ மோகம் பாத்துட்டா…
அரையடி வளருறேன்…

ஆண் : சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள…
அவ பஞ்சாரம் போட்டுதான் கவுக்குராளே ஆள…
நான் ஆட்டு புழுக்க போல…
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்…
அவகூட்டி பெருக்கும்போது…
நா குடைகுள்ள போனேன்…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

BGM

ஆண் : உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே…
அவள நினைச்சுதான் வயிறு நிறையுதே…
சோளதட்டதான் சுமைய தாங்குமா…
ஆள சாய்க்குதே அள்ளிபூ இரண்டுதான்…

ஆண் : போராள சாவில்ல மாராலதான் சாவு…
நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு…
இங்க அருவா தூக்கதானே…
நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு…
அவ பத்துபுள்ள என்னபோல பெத்து கொடுக்கணும்…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : தினம் தினம் திருக குள்ள…
கேப்பையாட்டம் என்ன திரிக்கிற…
அய்யய்யோ கடுகுதுண்டு எனைய வச்சு…
கிறங்க அடிக்கிற…

ஆண் : குமரி புள்ள நேசம்…
அட கோழி குழம்பு வாசம்…
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குற…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…


Notes : Kona Kondakari Song Lyrics in Tamil. This Song from Madha Yaanai Kootam (2013). Song Lyrics penned by Yegathasi. கோண கொண்டைக்காரி பாடல் வரிகள்.