பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.எஸ். சித்ரா | தேவா | ஆசை |
Pulveli Pulveli Song Lyrics in Tamil
—BGM—
பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
பெண் : அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா…
பெண் : இதயம் பறவை போலாகுமா…
பறந்தால் வானமே போதுமா…
நான் புல்லில் இறங்கவா…
இல்லை பூவில் உறங்கவா…
பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
—BGM—
பெண் : சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி…
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு…
பட்பட்பட்பட் பட்பட்பட் பட்டாம்பூச்சி…
பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு…
பெண் : இலைகளில் ஒளிகின்ற பூக் கூட்டம்…
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்…
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்…
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்…
பெண் : பூவனமே எந்தன் மனம்…
புன்னகையே எந்தன் மதம்…
பெண் : அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள்…
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்…
—BGM—
பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…
—BGM—
பெண் : துல்துல்துல் துல்துல்துல்லும் அணிலே…
மின்னல்போல் வேகம் தந்தது யாரு…
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே…
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு…
பெண் : மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்…
வழியுது வழியுது வெள்ளை அருவி…
அருவியை முழுவதும் பருகிவிட…
ஆசையில் பறக்குது சின்னக்குருவி…
பெண் : பூவனமே எந்தன் மனம்…
புன்னகையே எந்தன் மதம்…
பெண் : அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள்…
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்…
—BGM—
Notes : Pulveli Pulveli Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. புல்வெளி புல்வெளி பாடல் வரிகள்.