chindala-karaiyil-song-lyrics-in-tamil

சிந்தல கரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ்.சித்ரா & சுவர்ணலதாதேவாஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

Chindala Karaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : சிந்தல கரையில் குடியிருக்கும்…
தாயே வெக்காளி…
பத்தினி பெண்கள் குறை தீர்க்க…
வாடி மாகாளி…

பெண் : அக்கினி ஏந்தி வலம் வந்தேன்…
அங்கப்பிரார்த்தனை செய்தேனே…
நித்தமும் உனக்கு சேவை செய்தேன்…
நெய்விளக்கேற்றி பூஜை செய்தேன்…

பெண் : கணவன் உயிரை காக்கத்தானே…
மடியை ஏந்தி பிச்சை கேட்டேன்…
இனியும் மௌனம் என்னம்மா…

பெண் : நாக மலையில் குடியிருக்கும்…
தாயே நாகாத்தா…
பத்தினி பெண்கள் குறை தீர்க்க…
வாடி பூவாத்தா…

பெண் : அக்கினி ஏந்தி வலம் வந்தேன்…
அங்கப்பிரார்த்தனை செய்தேனே…
நித்தமும் உனக்கு சேவை செய்தேன்…
நெய்விளக்கேற்றி பூஜை செய்தேன்…

பெண் : கணவன் உறவை வேண்டித்தானே…
மடியை ஏந்தி பிச்சை கேட்டேன்…
எனது தவறு என்னம்மா…

BGM

பெண் : ஆதாரம் இல்லாமல் வாழ்கின்ற பூவுக்கு…
சுகம் கூட சுடுகின்ற சுமைதானம்மா…
ஆகாயம் இல்லாமல் நிலவொன்று வாழுமா…
அகிலாண்ட ஈஸ்வரியே பதில் கூறம்மா…

பெண் : விண்ணுலகை அளந்தாலும்…
மண்ணுலகில் வாழ்கின்ற…
பெண்ணினத்தின் மரியாதை மாங்கல்யமே…

பெண் : என் கணவன் கற்புதனை…
இன்னொருத்தி தீண்டினால்…
உன்னுடைய சக்தி இங்கு பொய்யாகுமே…

பெண் : ஊசி முனை மேலே ஒரு காலில் நின்று…
ஈசன் துணை கேட்ட மாங்காட்டம்மா…

பெண் : ஒரு வானம் ஒரு பூமி…
தாயே என் சிவகாமி…
அதில் இன்று பிரிவாகுமா…

பெண் : ஒரு பூவில் ஒரு வாசம்…
அதுதானே என் வாசம்…
நீ கூட பெண்தானம்மா…

பெண் : உனது மகள் நானே…
எனது குறை தீர்க்க…
அபய கரம் தன்னை நீ காட்டம்மா…

பெண் : ஒரு பிறவி எடுத்தேன்…
மறுபிறவி கொடுத்தாய்…
அது கூட என் வாழ்வில் ஏமாற்றமா…

பெண் : அலங்காரி மீனாக்ஷியே…
குலம் காக்கும் காமாக்ஷியே…
தனியான நவகாளியே…
தாம்பத்தியம் எனக்கில்லையே…

பெண் : கணவனுக்கு தவமிருந்து…
மணமுடித்த கதைகள் இங்கு…
உனது வரலாற்றிலே அன்னையே…
பல உண்டம்மா…

பெண் : சிந்தல கரையில் குடியிருக்கும்…
தாயே வெக்காளி…
பத்தினி பெண்கள் குறை தீர்க்க…
வாடி மாகாளி…

பெண் : அக்கினி ஏந்தி வலம் வந்தேன்…
அங்கப்பிரார்த்தனை செய்தேனே…
நித்தமும் உனக்கு சேவை செய்தேன்…
நெய்விளக்கேற்றி பூஜை செய்தேன்…

பெண் : கணவன் உயிரை காக்கத்தானே…
மடியை ஏந்தி பிச்சை கேட்டேன்…
இனியும் மௌனம் என்னம்மா…

BGM

பெண் : ஒரு கண்ணில் இருபாவம்…
செய்கின்ற புதுமாயம்…
தாயே நீ விளையாடும் விதி வேடமா…

பெண் : அழகோடு பருவத்தை…
உருவாக்கி எனை இங்கு…
தனியாக்கி ரசிப்பது உன் பிடிவாதமா…

பெண் : உன்னிலொரு பாதி…
உன் மன்னவனின் உடலென்று…
உலகுக்கு சொன்னவள் நீதானம்மா…

பெண் : என் மகளின் தொடர்பாக…
மண்ணுலகில் வாழுமென்…
மன்னவனை நினைப்பது தவறாகுமா…

பெண் : தாலி வரம்தானே…
தாயே உனை கேட்டேன்…
மாரி உனை வேண்டி…
மண் சோறு தின்றேன்…

பெண் : பூஜைக்கு உதவாத…
பூவாகி வாடினேன்…
அதுதான் என் விதியாகுமா…

பெண் : உளமார மணிச்சிட்டு…
துணைதன்னை இழந்தாலே…
தனியாக வாழாதம்மா…

பெண் : என்னுடைய பிறப்பு…
உன்னுடைய படைப்பு…
உனையன்றி எனக்கிங்கு துணை ஏதம்மா…

பெண் : கண்விழித்த நாளாய்…
உன் நிழலில் வளர்ந்தேன்…
உன்னையன்றி எனக்கு ஒரு தாயேதம்மா…

பெண் : என் கேள்வி தவறாகுமா…
தாயே நீ பதில் கூறம்மா…
மாங்கல்யம் நீ தந்தது…
அதில் சோதனை ஏன் வந்தது…

பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்று…
தமிழ் மரபை மதித்து எந்தன்…
கணவனை நீ மீட்டு கொடு…
இல்லையேல் எனை கொன்றிடு…

BGM


Notes : Chindala Karaiyil Song Lyrics in Tamil. This Song from Sri Raja Rajeshwari (2001). Song Lyrics penned by Kalidasan. சிந்தல கரையில் பாடல் வரிகள்.