சில்லென்று வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மணி சர்மாஏழுமலை

Chillendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

BGM

ஆண் : வண்டென என் மனம் வந்து…
இந்த ஊதா பூவை ஊதும்…
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்…
மேல் வந்து நின்ற மாத்திரம்…

பெண் : விட்டது தொட்டது போக…
கொஞ்சம் வைத்தால் என்ன மீதம்…
அன்புக்கு உண்டு சாத்திரம்…
ஆகாது இந்த ஆத்திரம்…

ஆண் : கண்ணே நீ ஓர் சித்திரம்…
என் கையில் என்றும் பத்திரம்…

பெண் : அன்பே நீ ஓர் மந்திரம்…
நான் ஆனேன் உன்னால் எந்திரம்…

ஆண் : ஒவ்வொரு நாளும் நீயாட…
பூ மஞ்சம் நான் போடவா…

BGM

பெண் : முக்கனி சக்கரை சே…
அது பாதாம் பாலில் ஊற…
தித்திக்கும் வேளை அல்லவா…
வெட்கத்தை போக சொல்லவா…

ஆண் : கற்பனை செய்திடும் கம்பன்…
உன்னை கண்டால் தோற்று போவான்…
சொல்லாலே வித்தை செய்கிறாய்…
உள் அர்த்தம் வைத்து சொல்கிறாய்…

பெண் : பெண்மை என்னும் ஜாதியில்…
அவள் பேசும் பேச்சும் ஜாடையில்…

ஆண் : ஜாடை செய்தால் போதுமே…
கை ஜாதி பூவை கிள்ளுமே…

பெண் : கிள்ளிடும் நேரம் கூச்சங்கள்…
தாளாமல் நான் துள்ளவா…

BGM

ஆண் : சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…

பெண் : அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…

ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு…
உந்தன் கூந்தல் பாகம் மூடிடு…

பெண் : இந்த ஏகாந்த நேரத்தில்…
ஏதேதோ ஆசைகளோ…

BGM


Notes : Chillendru Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Vaali. சில்லென்று வரும் பாடல் வரிகள்.