Category Archives: மாறா

theeranadhi-song-lyrics-maara

தீராநதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபத்மலதாஜிப்ரான்மாறா

Theeranadhi Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…
ஆகுமோ… தாகமோ… போகுமோ…

பெண் : ம்ம்… ம்ம்… அருகினில் நான் இருந்தேன்…
தொலைவினில் நீ இருந்தாய்…
இரு கை நீட்டுகிறேன்…
எதிரினில் வாராய்…

பெண் : யாரும் காணாத ரகசிய கோலம்…
நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம்…
தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன்…
தொலைவில் நீ இருந்தாய்…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

—BGM—

பெண் : ம்ம்… தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன்…
மறைவின் சூரியனால் கரைந்திடலானேன்…
யாரோ காணும் ஓர் கனவினில் நானும்…
தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம்…
நாணல் போலே நீரில் நான் நனைந்து…
நதியாய் மாறுகின்றேன்…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…


Notes : Theeranadhi Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. தீராநதி பாடல் வரிகள்.


காத்திருந்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனந்து & ஸ்ரீஷா விஜயசேகர்ஜிப்ரான்மாறா

Kaathirundhen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—

பெண் : முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்…
பல கதவு மோதும் காகிதம் ஆனேனே…

ஆண் : அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்…
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே…

பெண் : பேசாத கதை நூறு…
பேசும் நிலை வரும் போது…
வார்த்தை என எதுவும் வராது…
வராது வராது மௌனம் ஆனேனே…

ஆண் : காலம் உறைந்தே போகும்…
காற்று அழுதே தீரும்…

பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்…

ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்…

—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—


Notes : Kaathirundhen Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. காத்திருந்தேன் பாடல் வரிகள்.

உன்னைத்தானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ருதி நல்லப்பாஜிப்ரான்மாறா

Unnai Thaane Song Lyrics in Tamil


பெண் : ஓஹோ ஹோ ஓ…
உன்னைத்தானே…

பெண் : உன்னைத்தானே…
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்…
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்…

பெண் : மாய நதியே…
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்…
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்…
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு…

குழு (ஆண்கள்) : ஓஹோ… ஓஓஹோ ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…

—BGM—

பெண் : உன்னைத்தானே… சந்திப்பேனே…
ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே…

—BGM—


Notes : Unnai Thaane Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. உன்னைத்தானே பாடல் வரிகள்.

ஒரு அறை உனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரையாசின் நிசார் & சனா மொயுட்டிஜிப்ரான்மாறா

Oru Arai Unathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

ஆண் & பெண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் & பெண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

BGM

ஆண் : வண்ணம் நூறு வாசல் நூறு…

ஆண் & பெண் : கண் முன்னேக் காண்கின்றேன்…

ஆண் : வானம்பாடிப் போலே மாறி…

ஆண் & பெண் : எங்கேயும் போகின்றேன்…

ஆண் : வானத்துக்கும் மேகத்துக்கும்…
ஊடே உள்ள வீடொன்றில்…
யாரும் வந்து ஆடிப் போகும்…
ஊஞ்சல் வைத்த என் முன்றில்…

ஆண் & பெண் : போகும் போக்கில்…
போர்வைப் போர்த்தும் பூந்தென்றல்…

BGM

பெண் : ஒரு பகல் உனது…
ஒரு பகல் எனது…
இடையினில் இரவு உறங்கிடுமா…

பெண் : ஒரு இமை உனது…
ஒரு இமை எனது…
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா…

பெண் : ஒரு மலர் உனது…
ஒரு மலர் எனது…
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா…

பெண் : ஒரு முகம் உனது…
ஒரு முகம் எனது…
இருவரும் நிலவின் இருபுறமா…

பெண் : ஒரு பதில் உனது…
ஒரு பதில் எனது…
புதிர்களும் உடையுமா…

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

BGM


Notes : Oru Arai Unathu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. ஒரு அறை உனது பாடல் வரிகள்.

யார் அழைப்பது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜிப்ரான்மாறா

Yaar Azhaippadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : உடலின் நரம்புகள்…
ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ…
உயிரை பரவசமாக்கி…
இசைக்குமா ஆரிரோ… ராரோ…

ஆண் : மழை விடாது வர அடாதி…
தொட தேகம் நனையும்…
மனம் உலாவி வர அலாதி…
இடம் தேடும்… ஓஹோ…

ஆண் : யார் அழைப்பது….
யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM

ஆண் : சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…

ஆண் : கலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…
அடங்காத நாடோடி காற்றல்லவா…

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில் காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : பயணம் நிகழ்கிற
பாதை முழுதும்…
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…
இல்லை எனினும்…
நாடகம் ஓடும்…

ஆண் : விடை இல்லாத பல வினாவும்…
எழ தேடல் தொடங்கும்…
விலை இல்லாத ஒரு வினோத…
சுகம் தோன்றும்… ஓ…

ஆண் : யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM


Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.


ஓ அழகே ஓ அழகே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபென்னி டயல்ஜிப்ரான்மாறா

Oh Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
மின்னும் பனியின் கீழே…
போய் ஒழிய…
போய் ஒழிய…
கொஞ்சம் ஏங்குதே…
அதில் தஞ்சம் தேடுதே…

ஆண் : அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…

BGM

ஆண் : தூர அலைகள்…
காலை நனைக்கும்…
மாய நதி இது…
மேகம் தணிந்து…
வாசல் தெளிக்கும்…
தூய மழை இது…
விழாக்கள் தோறும் ஓரமாக…
நின்று பார்க்க நேரும்…
நிலாக்கள் இன்றி…
வானம் கூட…
மெளனமாக மாறும்…

ஆண் : ஒரு வீடு பரிவோடு…
வரவேற்க நீளும் போது…
அதனோடு… உரையாடு…
அது போல் ஒரு வரம் ஏது…

ஆண் : அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…

ஆண் : ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே… ஏ…

BGM

ஆண் : காற்று குமிழிப் போல…
உடைந்து போகும் மகிழ்வினை…
போற்றி வளர்த்து…
போற்றி வளர்த்து…
காக்கும் ஒருவனை…
துழாவித் தேடி…
கண்ணின் முன்பு…
கொண்டுக் காட்டும் காலம்…

ஆண் : கனாவில் கூட நேர்ந்ததில்லை…
நேர்ந்ததிந்த மாயம்…
அவன் யாரோ…
தொடுவானோ…
தொலை தூரக் கோடு தானோ…
வழி தேரோ வரலாறோ…
புரியாக் குறுநகை தானோ… ஓ…

ஆண் : ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
மின்னும் பனியின் கீழே…
போய் ஒழிய…
போய் ஒழிய…
கொஞ்சம் ஏங்குதே…

ஆண் : அடங்காத காற்றே… ஏ… ஏ…
அடங்காத காற்றே… ஏ… ஏ…


Notes : Oh Azhage Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. ஓ அழகே பாடல் வரிகள்.